கொழும்பு வலயத்தின் முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண ஜனாதிபதி பணிப்பு

கொழும்பு வலயத்திலிருந்தும் முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகள் குறித்து தேடியறிந்து அவற்றுக்கு விரைவில் தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்கொள்ளும் கல்விசார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (02) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு பணிப்புரை விடுத்தார். கொழும்பிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் பாடசாலைகள் அதிபர்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர். ஆசிரியர் பற்றாக்குறை,இடநெருக்கடி, வகுப்பறைகள் … Read more

இரண்டாவது டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 192 ஓட்டங்களால் வெற்றி…

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்று (03) 192 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. நாணயச்சுழற்சியில் வென்று முதலில் களம் இறங்கிய இலங்கை அணி 531 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 93 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 92 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 86 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 70 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 59 … Read more

அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் கையளிப்பு!

அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 150 விவசாயிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் விவசாய உபகரணங்கள் கையளிக்கப்பட்டன. விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் 150 விவசாயிகளுக்கு நீர் பம்பிகள் மற்றும் கிருமிநாசினி தெளிப்பான் போன்ற விவசாய உபகரணங்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கின் மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஐ. ஜே கே முத்துபண்டா உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் கையளிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (02) வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெற்றது. இதன் போது வவுணதீவு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் இவ்வுறுதிப் பத்திரங்கள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் இந்நிகழ்வில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பிரதேச செயலாளர், உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

இலங்கை இராணுவத்தினரால் மட்டக்களப்பு காத்தான்குடியில் வீடு திறந்துவைப்பு!!

இலங்கை இராணுவத்தினரால் மட்டக்களப்பு காத்தான்குடியில் நிர்மாணிக்கப்பட்ட வீடு செவ்வாய்க்கிழமை (02) நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தின் 11 ம் சிங்க ரெஜிமன்ட் படை அணியின் கட்டளை யிடும் அதிகாரி மேஜர் டி .எம் .என். பத்ம சிறீ அவர்களின் மேற்பார்வையில் மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் இராணுவ வீரர்களின் பங்களிப்பில் 243 வது காலாட் படை அணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் கே .எம். எஸ். குமாரசிங்க அவர்களின் அழைப்பின் பேரில் 24 … Read more

குடும்ப வன்முறைகளைத் தீர்பதற்கான புதிய சட்டம் கொண்டுவரப்படும் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க

தற்போதைய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதென மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். அதேநேரம், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்த பின்னர் தேசிய மகளிர் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வாய்ப்பு கிட்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனை தெரிவித்தார். … Read more

அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகளின் முகாமைத்துவம் தனியார் நிறுவனத்திற்கு ஒருபோதும் வழங்கப்படவில்லை

அதிவேக நெடுஞ்சாலை செயற்பாடுகளின் முகாமைத்துவம் ஒருபோதும் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை என்று வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போhதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நெடுஞ்சாலை நடவடிக்கைகள் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமான ளுயாயலெய ஐnஎநளவஅநவெ நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுவதாகவும், அந்த நிறுவனம் 100மூ அரசாங்கத்திற்கு சொந்தமானதுடன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் திறைசேரிக்கே அதன் முழு … Read more

இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு மீளாய்வு செய்யப்படவுள்ளது

அரசாங்க நிதிக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் சுயாதீன ஊதியக் குழுவொன்றை நியமித்துள்ளார். அரசாங்க நிதிக் குழுவிற்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் இடையில் இடம்பெற்ற அனைத்து கடிதத் தொடர்புகளின் அடிப்படையில், இலங்கை மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பு இல்லாத வகையில் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காண இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. … Read more

நெருக்கடியைத் தீர்க்க மிகப் பொருத்தமான தலைவர் ரணில் விக்ரமசிங்க என்பது தற்போது உறுதியாகியுள்ளது

அவரது தலைமை எதிர்காலத்திலும் தேவை. 24 இலட்சம் பேருக்கு அஸ்வெசம வழங்கிய பின்னர் முழுமையாக மீளாய்வு செய்யப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் திறமையான மற்றும் பொருத்தமான தலைவர் என்பதை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் உறுதிப்படுத்துவதாகவும், எனவே எதிர்காலத்தில் அவரது தலைமை நாட்டுக்குத் தேவை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். இதுவரையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வைத்து நாட்டை … Read more

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதாரத் துவாய்கள் இலவசம்

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதாரத் துவாய்களை இலவசமாக வழங்குவதற்காக, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் சகல பாடசாலைகளிலும் சுமார் 4மில்லியன் மாணவ மாணவிகளின் கல்வி பயிலுவதுடன், அதில் 1.2 மில்லியன் மாணவிகள் கல்வி கற்கின்றனர். அம்மாணவிகளில் அதிக கஷ்டப் பாடசாலைகள், கஷ்டப் பிரதேச பாடசாலைகள், தோட்டப்பாடசாலைகள் மற்றும் வறுமைக் கோட்டில் வாழும் மாணவ மாணவிகளுடனான நகரப் பாடசாலைகளில் எட்டு இலட்சம் வரையான மாணவிகள் காணப்படுகின்றனர். அவர்களுக்கு 2024 ஏப்ரல் மாதத்திலிருந்து … Read more