பொலன்னறுவை மாவட்டத்தில் பிரதான அரிசி விநியோக நிறுவனங்களின்  செயற்பாடுகளை கண்காணிக்கும் நடவடிக்கை தொடர்கிறது

பொலன்னறுவை மாவட்டத்தில் பிரதான அரிசி விநியோக நிறுவனங்களின்  செயற்பாடுகளை கண்காணிக்கும் நடவடிக்கை தொடர்கிறது

 பொலன்னறுவை மாவட்டத்தின் பிரதான அரிசி வழங்கும்  நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும்  உற்பத்தி மற்றும் விநியோக செயற்பாடுகளை கண்காணிக்கும்  நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக பொலன்னறுவை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

 அன்றாட அரிசித் தேவையில்  நூற்றுக்கு 25 வீதமான அரிசியை பொலன்னறுவையின் பிரதான 9 விநியோக நிறுவனங்கள் ஊடாக   அன்றாடம் விநியோகிக்கப்பட்டு வருவதாக பாவனையாளர்கள் அலுவல்கள்  அதிகார சபையின் கண்காணிப்பிற்கு   இணங்க அறியக் கிடைத்துள்ளதுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொலன்னறுவை மாவட்ட அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இம்மாவட்டத்தின் குறித்த ஒன்பது பிரதான அரிசி விநியோக நிறுவனங்களும்  பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொலன்னறுவை மாவட்டப்  பிரிவின்  சோதனைக்குட்படுத்தப்பட்டன. 

 பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொலன்னறுவை மாவட்டப் பொறுப்பதிகாரி  மற்றும் மாத்தளை  மாவட்டப் பொறுப்பதிகாரி  சந்திர குமார ஆகியோரின் தலைமையில் இரண்டு குழுக்களினால் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.