பல்லை பிடுங்கிய வழக்கில் 16 முறையாக ஆஜராகாத பல்வீர்சிங்; பிசிஆர் கோர்ட்டுக்கு மாற்றக் கோரிக்கை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் துணைக் காவல் கண்காணிப்பாளராக ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் பணியாற்றிய போது, பல்வேறு வழக்குகளில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி கொடூரமாக சித்திரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, பல்வீர்சிங் மற்றும் அவருடன் பணியாற்றிய ஆய்வாளர் உட்பட 14 போலீஸார்மீது சிபிசிஐடி போலீஸார் நான்கு தனித்தனி வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்கு நெல்லை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சத்யா முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அந்த … Read more

பீகாரில் ஜனசுராஜ் கட்சி தொண்டர் படுகொலை; ஐக்கிய ஜனதாதள வேட்பாளர் நள்ளிரவில் கைது

பாட்னா, 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில், ஜனசுராஜ் கட்சியை சேர்ந்த பியூஷ் பிரியதர்ஷி என்பவர் மொகமா தல் தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவருக்காக வாக்குகள் கோரி பிரசாரத்தில் ஈடுபடும் … Read more

BB Tamil 9 Day 27: வாட்டர் மெலனை பிழிந்தெடுத்த விசே; ரெண்டு எவிக்‌ஷனா?

மற்ற நாட்களில் போட்டியாளர்கள் குரல்கள் மட்டுமே கேட்கும். ஆனால் இந்த விசாரணை நாளில் விஜய்சேதுபதியின் குரல் மட்டுமே கேட்டது. அவர் கேட்ட கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.  ஏறத்தாழ அனைவருமே வாங்கிக் கட்டிக் கொள்ளும்போது விதிவிலக்கு ஆச்சரியமாக பாராட்டைப் பெற்றவர் வியன்னா மட்டுமே.  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? –  நாள் 27 “ஏன் போட்டியாளர்கள் இப்படி மோசமா நடந்துக்கறாங்க?” – இதுதான் பெரும்பான்மையான பார்வையாளர்களின் எரிச்சலுடன் கூடிய கேள்வி. இந்த நோக்கில்தான் நானும் கூட … Read more

தெருநாய்த்தொல்லை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

புதுடெல்லி, தெருநாய்த்தொல்லை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தெருநாய்த்தொல்லை தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இதுதொடர்பாக தமிழ்நாடு உள்பட அனைத்து மாநில அரசுகளும் பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தது. இதற்கிடையே தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் இந்திரா, சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முழுவதும் 72 விலங்குகள் காப்பகங்கள் 22 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்த நிதி ஒதுக்கி ஆணையிடப்பட்டு உள்ளது. … Read more

முதல்வர் பதவி வாய்ப்பை யாராவது விடுவார்களா? பிக்பாக்கெட் அடிப்பதுபோல் அடித்து விடுவார்கள்

“எடப்பாடி பழனிசாமிக்கு முன்பாக பிறந்தவர் செங்கோட்டையன் என்ற ஒரு தகுதியைத் தவிர அனைத்து தகுதிகளையும் பெற்று இறைவன் அருளால் முதலமைச்சராகவும் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி” என்று அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன் “திமுகவின் பி டீம் யார் என்பதை எடப்பாடி பழனிசாமி ஆதாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார், அதிமுகவுக்கு எதிராக செங்கோட்டையன் வழக்கு தொடரட்டும், ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட துரோகி டிடிவி தினகரன் சொல்வதற்கெல்லாம் … Read more

ஆபரேஷன் சிந்தூரின்போது அப்பாவி பொதுமக்களை குறிவைக்கவில்லை-ராணுவ தளபதி தகவல்

போபால், மத்திய பிரதேசத்தின் ரெவா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை குறித்து விவரித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக நடந்தது. ஏனெனில் கொள்கைகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வலிமையுடன் அது நடத்தப்பட்டது. இதில் அப்பாவி பொதுமக்களையோ பாகிஸ்தானின் ராணுவ நிலைகளையோ குறிவைக்கவில்லை’ என தெரிவித்தார். அதேநேரம் வெறும் பயங்கரவாத நிலைகளை மட்டுமே இந்தியா … Read more

`காருடன் கடலில் சென்ற பிரபலங்கள்' கடற்கரை பண்ணை வீட்டில் 60வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஷாருக்

பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு இன்று 60வது பிறந்தநாள். இப்பிறந்தநாளை ஷாருக் கான் தனது பண்ணை வீட்டில் வைத்து கொண்டாட முடிவு செய்தார். இதற்காக தனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் ஷாருக் கான் அழைப்பு விடுத்திருந்தார். ஷாருக்கானுக்கு மும்பை அருகில் உள்ள அலிபாக் கடற்கரையில் பண்ணை வீடு இருக்கிறது. அந்த பண்ணை வீட்டிற்கு காரில் செல்வதை விட படகில் செல்வதுதான் வசதியாக இருக்கும். எனவே பாலிவுட் நட்சத்திரங்கள் இயக்குநர் பராகான், கரண் ஜோகர், நடிகை ராணி முகர்ஜி, … Read more

சபரிமலையில் தங்கம் அபகரித்த வழக்கு:மேலும் ஒரு அதிகாரி கைது

திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் சன்னிதானத்தில் துவார பாலகர் சிலை கவசங்கள் பதிக்கப்பட்டிருந்தது. இந்த கவசம் தங்க முலாம் பூசப்பட்டவை. இந்த கவசத்தை புதுப்பிப்பதற்காக உன்னிகிருஷ்ணன் போற்றி மூலம் சென்னைக்கு கடந்த 2019-ம் ஆண்டு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டது.இந்த கவசத்தில் இருந்த 200 பவுன் தங்கத்தை உன்னி கிருஷ்ணன் போற்றி மற்றும் அப்போதைய திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் 9 பேர் அபகரித்த பகீர் தகவல் சமீபத்தில் வெளியானது. இதுதொடர்பாக 10 பேர் மீது … Read more

பெருங்குடலை அலசி நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கலாமா?

வயிற்றைச் சுத்தப்படுத்த உண்ணாநோன்பு இருப்பதும், மூலிகைக் கஷாயம் குடிப்பதும், விளக்கெண்ணெய் குடிப்பதும் அல்லது எனிமா எடுத்துக்கொள்வதும் காலங்காலமாகக் கடைப்பிடித்து வந்த பழக்கங்கள். இதனால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள், நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் இன்றோ வீட்டை சுத்தம் செய்யக்கூட நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கிறோம். வயிற்றை சுத்தம் செய்வது என்றால் என்ன, எப்படி செய்யப்படுகிறது என வயிறு மற்றும் செரிமான மண்டல சிகிச்சை நிபுணர் பாசுமணியிடம் விரிவாகக் கேட்டோம். பெருங்குடல் சுத்தம்; எப்படி செய்வது? ’’வாயில் தொடங்கி … Read more

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ‘எல்.வி.எம்.- எம்5’ ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

சென்னை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ‘பாகுபலி’ என்று செல்லமாக அழைக்கப்படும் ‘எல்.வி.எம். – எம்5’ ராக்கெட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.26 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதில், 4 ஆயிரத்து 410 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-7 ஆர்’ என்று அழைக்கப்படும் ‘சி.எம்.எஸ்-03′ என்ற கடற்படைக்கு தேவையான தகவல் தொடர்புகளை வழங்கும் தகவல்தொடர்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி … Read more