டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: நாடாளுமன்றத்தில் முகக்கவசம் அணிந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லி: டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை தடுக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முகக்கவசம் அணிந்து  ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியதுமுதலே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தினசரி ஒவ்வொரு புகார்களை கூறி, நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இநத நிலையில்,  நாடாளுமன்ற வளாகத்தில்  முகக்கவசம் அணிந்து எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைநகர் டெல்லியில் அதிகரித்து காற்று மாசுபாட்டை … Read more

திருப்பரங்குன்றம்:“கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை UAPA-வில் கைது செய்யவேண்டும்" – திருமாவளவன்

திருப்பரங்குன்ற மலையில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு மேல் மலையில் இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வந்தது. ஆர்.டி.ஓ தகவலின் படி மலை உச்சியில் இருக்கும் சர்வே கல்லில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்து அமைப்பான இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், இந்த ஆண்டு திருப்பரங்குன்ற மலையில் இருக்கும் தூணில் கார்த்திகை மகாதீபம் … Read more

மாம்பழம் முடக்கப்படும் – தேர்தல் ஆணையம்! சிவில் நீதிமன்றத்தை நாட ராமதாசுக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பாமக யாருடையது என்பது குறித்து விசாரிக்க சிவில் நீதிமன்றத்தை நாட  டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. விசாரணையின்போது, மாம்பழம் சின்னம் முடக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மினி புஷ்கர்னா முன்பு விசாரணை நடைபெற்றது. அன்புமணி தரப்பில் ஆஜரான … Read more

சோடா பாட்டில் மூடியில் 22, 23 விளிம்புகள் இல்லாமல் 21 விளிம்புகள் மட்டுமே இருப்பது ஏன் தெரியுமா?

குளிர்பான பாட்டிலைத் திறக்கும்போது, அதன் மூடியில் இருக்கும் விளிம்புகளை கவனித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு கண்ணாடி பாட்டில் மூடியிலும் சரியாக 21 விளிம்புகள் மட்டுமே இருக்குமாம். சில காரணங்களுடன் தான் இவ்வாறு 21 விளிம்புகள் மட்டும் கொண்டு குளிர்பான பாட்டில்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. முதலில் 24 விளிம்புகள் இருந்தது 1892ஆம் ஆண்டு அமெரிக்க கண்டுபிடிப்பாளர் வில்லியம் பெயிண்டர் என்பவர் குரூன் கார்க் காப் என்ற இந்த மூடி வகையை உருவாக்கியிருக்கிறார். அப்போது அதில் 24 விளிம்புகள் இருந்துள்ளன. பழைய கார்க் … Read more

இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

டெல்லி: ரஷ்ய அதிபர் புதின்  அரசுமுறைப் பயணமாக இன்று  மாலை இந்தியா வருகிறார்.  அவரது பயணம்இரு நாட்கள் என திட்டமிடப்பட்டஉள்ளது. ஜனாதிபதி புடின் இன்று மாலை  தலைநகர் டெல்லிக்கு வர உள்ளார். அவர் வந்த சில மணி நேரங்களுக்குள், பிரதமர் மோடி அவருக்கு ஒரு தனிப்பட்ட இரவு விருந்தை வழங்குவார், ஜூலை 2024 இல் பிரதமர் மோடியின் மாஸ்கோ பயணத்தின் போது ரஷ்யத் தலைவர் செய்த அதே போன்ற செயலுக்கு ஈடாக. இந்த இரவு உணவு முறைசாராதாக … Read more

கணவர் இறந்த சோகத்தில் இளம்பெண், குழந்தையுடன் எடுத்த விபரீத முடிவு

நகரி, தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் சின்ன சங்கரம்பேட்டை மண்டலம் காஜாபூரைச் சேர்ந்தவர்கள் பிரவீன் கவுடு- அகிலா தம்பதி. கூலித்தொழிலாளியான இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருந்தது. பிரவீன் கவுடு உடல் நலக்குறைவால், கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்தார். இதனால் அகிலா மாமியார் வீட்டிலேயே குழந்தையுடன் இருந்து வந்தார். கணவர் இறந்த சோகத்தில் இருந்த அகிலாவை மறுமணம் செய்து கொள்ளுமாறு அவரது மாமியார் கூறினார். ஆனால் அவர் மறுமணத்துக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. இந்தநிலையில் அகிலா நேற்றுமுன்தினம் … Read more

பாமக: “இதில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது" – கட்சி விவகாரம் குறித்து நீதிபதிகள்

ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதற்கிடையில், அன்புமணி பா.ம.க தலைவர் அல்ல என ராமதாஸ் அறிவித்தார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தின்படி நான்தான் பா.ம.க தலைவர் என தெரிவித்தார் அன்புமணி. இதனால் இருதரப்பிலும் பெரும் குழப்பம் நீடித்தது. இதற்கிடையில், தேர்தல் ஆணையம் அன்புமணியை தலைவராக அங்கீகரிக்கிறது என நோட்டீஸ் அனுப்பியது. இதனால் கடும் அதிருப்தியடைந்த ராமதாஸ், “நான் 1980-ல் இயக்கம் தொடங்கி இன்று வரை 46 ஆண்டுகள் கட்சி நடத்தி வருகிறேன். … Read more

தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டும் ஏரிகள்! செம்பரம்பாக்கம், பூண்டி, புழலில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் அதிகரிப்பு

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்பட பல ஏரிகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில், ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, செம்பரம்பாக்கம், பூண்டி,  புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் அதிகரிப்பு அதிகரித்துள்ளதால், ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இரக்கும்படி அடிவுறுத்தப்பட்டு உள்ளது.  இந்​திய வானிலை ஆய்வு மையம், சென்னை  திரு​வள்​ளூர், காஞ்சிபுரம்  மாவட்​டத்​துக்கு கனமழைக்​கான எச்​சரிக்​கையை … Read more

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குடும்ப உறவினர் – அதிர்ச்சி சம்பவம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரை சேர்ந்த 14 வயது சிறுமியின் தாயார் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியின் தந்தை கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனால், யாருமின்றி தவித்து வந்த சிறுமி அவரது உறவினரான மாமா (வயது 35) வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், குடும்ப உறவினரான மாமாவே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து … Read more

புகையிலை பொருள்களுக்கு மீண்டும் வருகிறது `கலால் வரி' – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல், இந்தியாவில் ‘GST 2.0’ நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதன் கீழ், அதுவரை 5%, 12%, 18%, 28% என நான்கு ஸ்லாப்களாக இருந்த வரி, 5% மற்றும் 18% ஸ்லாப்களாக குறைக்கப்பட்டது. எலெக்ட்ரானிக் பொருள்கள் முதல் வாகனங்கள் வரை பல பொருள்களின் விலை வெகுவாக குறைந்தது. கூடவே, பான் மசாலா, புகையிலை, குட்கா, பீடி ஆகியவற்றிற்கு 40 சதவிகித வரி விதிக்கப்பட்டது. ஆனால், இந்த வரி இன்னமும் அமலுக்கு வரவில்லை. இது … Read more