ஊட்டி: 3வது நாளாக இரவில் கொட்டி தீர்க்கும் மழை – முடங்கும் போக்குவரத்து, மலை ரயில் சேவையும் ரத்து!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் கடந்த மூன்று நாள்களாக மழை தீவிரமடைந்து வருகிறது. குன்னூர், கோத்தகிரி, குந்தா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் மின்னல், இடியுடன் கனமழை பெய்து வருகிறது. சீரமைப்பு பணிகள் கனமழையின் காரணமாக குன்னூர் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சில குடியிருப்புகள், சாலைகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் மீட்பு … Read more

Rain Update: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. இதனைத்தொடர்ந்து பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. Rain update அதாவது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, கடலூர், கோவை, திண்டுக்கல், ஈரோடு, தஞ்சை, திருவாரூர், தென்காசி, நீலகிரி, நெல்லை, திருச்சி, திருப்பூர், தேனி, விருதுநகர், கள்ளக்குறிச்சி, நாகை, தூத்துக்குடி, விழுப்புரம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, மதுரை ஆகிய மாவட்டங்களில் … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் அக்டோபர் 20 முதல் அக்டோபர் 26 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

தீபாவளியையொட்டி ரூ.600 கோடிக்கு டாஸ்மாக் விற்பனை இலக்கு?

சென்னை; தீபாவளியையொட்டி தமிழ்நாட்டில் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.600கோடிக்கு டாஸ்மாக் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.600 கோடிக்கு மதுபானங்கள் குவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் தீபாவளி நாளை மறுதினம் (20ந்தேதி) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு போனஸ் வழங்கி உள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில், எங்கு நோக்கிலும் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. … Read more

தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு தேவையான அளவிற்கு போக்குவரத்து வசதிகள்! அமைச்சர் சிவச

சென்னை:  தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு “தேவையான அளவிற்கு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன”  என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிக்காட்டுதலின்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள், அக்.17 அன்று, கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் கிளாம்பாக்கத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள். மேலும், பேருந்தினை இயக்கும் ஓட்டுநர், நடத்துநர்களிடம் பேருந்தினை … Read more

"காசிக்குப் போனால் ராமேஸ்வரத்துக்கு வந்துதானே ஆகணும்" – ராமநாதர் கோவிலில் ரிஷப் ஷெட்டி!

காந்தாரா சாப்டர் 1 படத்தின் வெற்றிக்குப் பிறகு காசிக்குப் பயணம் செய்த ரிஷப் ஷெட்டி, அதைத் தொடர்ந்து ராமேஸ்வரத்துக்கு வருகை தந்துள்ளார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காசிக்குப் போனால் ராமேஸ்வரத்துக்கு வந்துதானே ஆகணும். காந்தாரா படமே ஈஸ்வருடடைய ஒரு கணத்தைப் பற்றி, காவல் தெய்வத்தைப் பற்றி எடுத்தது. படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ராமேஸ்வரத்தில் ரிஷப் ஷெட்டி அதில் பார்வையாளர்களின் பங்கு எவ்வளவு இருக்கோ, அதே அளவு பார்வையாளர்களிடம் … Read more

உலகப் புத்தொழில் மாநாடு மூலம் ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: உலகப் புத்தொழில் மாநாடு  மூலம் ரூ.127 கோடி முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கப்பட்டு உள்ளதாக  முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மாநகரில் தொடங்கி வைத்த உலகப் புத்தொழில் மாநாடு – 2025 மகத்தான வெற்றி பெற்றுள்ளது, இதன் மூலம் ரூ.127 கோடி முதலீடுகள் ஈ;ரக்கப்பட்டு உள்ளது  என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உலகப் புத்தொழில் மாநாடு 2025-ஐ கோயம்புத்தூரில் … Read more

தலைக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு பெண் தளபதி போலீசில் சரண்

ராய்ப்பூர், சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இதன் காரணமாக நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப்படையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கையால் பல நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை … Read more

தவெக: விரைவில் கரூர் பயணம்? – விஜய் கொடுத்த அப்டேட்!

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தலா 20 லட்சம் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார் அந்தக் கட்சியின் தலைவர் விஜய். கரூர் விஜய் பிரசாரம் அதன்படி இன்று 39 பேரின் குடும்பத்தினருக்கு வங்கிக்கணக்கில் 20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட 2 லட்சம் விரைவில் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் விஜய் சார்பாக வழங்கப்பட்ட கடிதத்தில் விரைவில் அவர் கரூர் வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. கடிதத்தில் விஜய் கூறியிருப்பதாவது, “கரூரில் … Read more

பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் சந்திப்பு…

டெல்லி: அரசு முறை பயணமாக இந்தியா வருகை தந்த இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, கல்வி, பெண்கள் அதிகாரமளித்தல், புதுமை, மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து எங்கள் விவாதங்கள் நடைபெற்றன. நெருங்கிய அண்டை நாடுகளாக, நமது ஒத்துழைப்பு மகத்தானது என குறிப்பிட்டு உள்ளார். மூன்று நாள்  அரசுமுறை பயணமாக இலங்கை பிரதமர் ஹரிணி … Read more