பக்ரைனில் இருந்து ஐதராபாத் வரும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி விமான நிலையத்துக்கு நேற்று திடீர் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பக்ரைனில் இருந்து ஐதராபாத் வரும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் மும்பைக்கு திருப்பிவிடப்பட்டது. அங்கு தீவிர சோதனை செய்யப்பட்டதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. இதையடுத்து விமான நிலைய போலீசார், மிரட்டல் அனுப்பப்பட்டிருந்த இ-மெயில் முகவரி குறித்து விசாரணையில் இறங்கி உள்ளனர். 1 More update தினத்தந்தி Related Tags … Read more

TVK Vijay: “விஜய் வாக்குறுதிகள்: முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்" – ஜெயக்குமார் பதில்

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நடிப்பில் 1975-ம் ஆண்டு வெளியான திரைப்படம் இதயக்கனி. தற்போது இந்த திரைப்படம் டிஜிட்டல் வடிவம் பெற்று சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் திரையிடப்பட்டு 150 நாட்களை எட்ட உள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் ஆல்பர்ட் திரையரங்கில் இதயக்கனி திரைப்படத்தை கண்டு ரசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “50 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இதயக்கனி, தற்போது 150 நாட்கள் ஓடுகிறது. இப்போதும் எம்.ஜி.ஆர் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார். … Read more

தென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை – 15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: தென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை  காரணமாக  15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல  புதுச்சேரியிலும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையின் ஒரு பகுதியாக, வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நாளை மறுநாள் புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந் நிலையில் நெல்லை, தூத்துக்குடி உள்பட … Read more

பெங்களூருவில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விமானி மீது வழக்குப்பதிவு

ஐதராபாத், பெங்களூருவில் இருந்து ஐதராபாத் சென்ற தனி விமானம் ஒன்றின் விமானியாக பணிபுரிந்தவர், முன்னதாக அதில் பணியில் இருந்த 26 வயது பணிப்பெண் ஒருவரை பெங்களூருவில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக அந்த பணிப்பெண் பெங்களூரு பேகம்பேட் போலீசில் புகார் செய்தார். பின்னர் விமானம் ஐதராபாத் சென்றடைந்ததும், அங்கு முறைப்படி புகார் செய்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் பெங்களூருவில் நடந்ததால், … Read more

கவிஞர் பொன்மணி | கொடைக்கானலில் சுவாமி நிகழ்த்திய அற்புதம் | Sathya Saibaba 100th BirthDay Special

சத்தியசாய்பாபாவின் அவதரித்த 100 தின விழா உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் அவரின் பெருமைகளை நமக்கு எடுத்துச் சொல்கிறார் கவிஞர் பொன்மணி. 100th Day of Sathya Sai Baba’s Divine Advent | Special Discourse by Poet Ponmani The 100th Day Celebration of Bhagawan Sri Sathya Sai Baba’s Divine Advent is being observed with great devotion around the world. On this auspicious … Read more

டெல்லியில் சட்டவிரோத சமையல் கியாஸ் நிரப்பும் நிலையம் நடத்திய 5 பேர் கைது

புதுடெல்லி, டெல்லியில் முண்ட்கா பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக சமையல் கியாஸ் நிரப்பும் நிலையம் இயங்கி வருவதாக புகார் வந்தது. அதன்பேரில் அங்கு டெல்லி போலீசார் சோதனை நடத்தினர். அங்கு வீட்டு உபயோக சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பி, அதிக விலைக்கு விற்பனைக்கு அனுப்பி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 563 கியாஸ் சிலிண்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கியாஸ் நிரப்பும் எந்திரங்கள், சிலிண்டர் சீல்கள், 2 வாகனங்கள் ஆகியவற்றையும் கைப்பற்றினர். இது தொடர்பாக … Read more

அதிமுக ஒன்றிணைப்பு: "செங்கோட்டையன், தினகரனுடன் தினமும் பேசிக்கொண்டிருக்கிறேன்" – ஓ. பன்னீர்செல்வம்

சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, “அதிமுக தொண்டர்களின் உரிமையைப் பாதுகாக்கின்ற குழுவாகச் செயல்பட்டு கொண்டிருக்கும் எங்களது குழுவின் கருத்து, தமிழக மக்களின் கருத்து அதிமுக இணைந்தால்தான் வெற்றி பெற முடியும். எஸ்ஐஆர் ஒவ்வொருவருக்கும் தனியாக விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விவரங்கள் கேட்டுள்ளனர். அதனைப் பூர்த்தி செய்து கொடுத்தால் பிரச்னை இல்லை. SIR ஆனால் எஸ்ஐஆர் படிவங்கள் சமர்ப்பிப்பதில் சில சிரமங்கள் இருக்கின்றன. … Read more

சட்டவிரோத இருமல் மருந்து விற்பனை; 12 கடைகள் மீது வழக்குப்பதிவு: லாரி பறிமுதல்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து கோடின் என்ற இருமல் மருந்துகள் சட்டவிரோதமாக அண்டை மாநிலங்களுக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்படி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது காசியாபாத்தில் காகிதம் ஏற்றி வந்த லாரியை தடுத்து சோதனை செய்தனர். அதில் கோடின் என்ற இருமல் மருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ரூ.57 கோடி மதிப்புள்ள சுமார் 37 லட்சம் மருந்து பாட்டில்கள் சட்டவிரோதமாக பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்டது தெரியவந்தது. … Read more

கடன்-குடும்ப பிரச்சினையால் மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை

ராஞ்சி, ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ள பர்தாகி கிராமத்தை சேர்ந்தவர் வீரேந்திர மஞ்சி (வயது 30). இவரது மனைவி ஆர்த்தி குமாரி(26). இந்த தம்பதிக்கு ருகி குமாரி(4) என்ற மகளும், விராஜ்குமார்(2) என்ற மகனும் இருந்தனர். நேற்று முன்தினம் வீரேந்திர மஞ்சி, தனது வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது வீட்டில் மனைவி, குழந்தைகள் இறந்து கிடந்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், “அவர்களது மகளுக்கு நீண்டகாலமாக தீராத நோய் இருந்ததால் … Read more

'இரவோடு இரவாக தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய முயற்சி!' – கு.பாரதி குற்றச்சாட்டு!

பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் மண்டலங்கள் 5,6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் 100 நாட்களுக்கு மேல் போராடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அம்பத்தூரில் நான்கு பெண் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை இன்று இரவோடு இரவாக கைது செய்ய காவல்துறை முயற்சிப்பதாக உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி குற்றஞ்சாட்டியிருக்கிறார். போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி … Read more