“விஜய்யின் தவெக கட்சியில் நான் ஏன் இணைந்தேன்?'' – செங்கோட்டையன் விளக்கம்

நேற்று (நவ.26) செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்தார். எதிர்பார்த்தபடியே இன்று (நவ 27) செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெக கட்சியில் விஜய் முன்னிலையில் இணைந்திருக்கிறார். செங்கோட்டையன். 1977ஆம் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றவர். அதிமுக ஆரம்பித்ததில் இருந்து எம்.ஜி.ஆருடன் அரசியலில் பயணித்தவர். அதன்பிறகு அம்மா ஜெயலலிதாவுக்குப் பக்கபலமாக நின்றவர். இப்போது சட்டப்பையில் ஜெயலலிதா படத்தை வைத்துக் கொண்டபடி விஜய்யின் தவெகவில் இணைந்திருக்கிறார் செங்கோட்டையன். விஜய்யின் தவெக கட்சியில் … Read more

விவசாயிகள் முதுகில் குத்தியவர் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்

சென்னை: விவசாயிகள் முதுகில் குத்தியவர் எடப்பாடி பழனிசாமி, அவரது யோக்கியதையை நாடறியும் என  அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். நெல் ஈரப்பத்துடன் கொள்முதல் செய்ய மத்தியஅரசு மறுத்த நிலையில், அதுகுறித்து அறிக்கை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசை கடுமையாக சாடியிருந்தார். இதையடுத்து அவருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ஈரோட்டில் பேசிய முதலமைச்சருக்குப் பதில் சொல்ல முடியாமல், எக்ஸ் தளத்தில் கிறுக்கிக் கொண்டிருக்கும் அடிமை பழனிசாமி, வழக்கம் போலவே உளறிக் … Read more

சபரிமலையில் தங்கம் அபகரிக்கப்பட்ட வழக்கில் நடிகர் ஜெயராமை கைது செய்ய விசாரணை அதிகாரிகள் முடிவு

திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்ட தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் அபகரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு தங்கத்தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போற்றி மற்றும் தங்கத்தகடுகளை தாமிர தகடுகள் என்று சான்றிதழ் வழங்கிய … Read more

வெள்ளித்திரையின் `மேஜிக்' ரஜினிகாந்த்! – நீண்ட திரைப்பயணத்தில் நீங்கள் கொண்டாடிய தருணங்கள்!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை, ‘ஸ்டைலு ஸ்டைலு தான் அது சூப்பர் ஸ்டைலு தான்’ என்று இப்போதுவரை ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் கலைஞன் நடிகர் ரஜினிகாந்த்! நடிகர் ரஜினிகாந்தின் சமீபத்திய திரைப்படத் தேர்வு முறை அவரின் பக்குவமான திரைப்பயணத்தை வெளிப்படுத்துகிறது. வெறும் கமர்ஷியல் வெற்றியை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், தனது வயதிற்கேற்பவும், தனது சமூகப் பொறுப்பிற்கு ஏற்பவும் கதைக்களங்களைத் தேர்ந்தெடுக்கிறார். ரஜினியின் சமீபத்திய படங்கள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், ஏதேனும் ஒரு சமூகச் செய்தியை … Read more

தவெகவில் செங்கோட்டையன்! எடப்பாடி பழனிசாமி ‘கடுப்பு’

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், அது பற்றிய  செய்தியாளரின்  கேள்விக்கு,  பதில் கூறிய எடப்பாடி பழனிச்சமி, அதை  அவரிடமே கேளுங்கள் என கடுப்படித்தார். அதேவேளையில், செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்திருப்பது தற்கொலைக்கு சமம்  முன்னாள் அதிமுக அமைச்சர்  செம்மலை விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது தமிழக அரசியலில் இன்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது . பனையூரில் … Read more

ஆண் நண்பர்களுடன் பேசிய தங்கை.. ஆத்திரத்தில் அண்ணன் செய்த கொடூர செயல்

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள இடோரா கோட்டியா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் நைனா தேவி(வயது 22). இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது குடும்பத்தினர் மாப்பிள்ளை தேடி வந்துள்ளனர். ஆனால் திருமண வரன்களை நைனா தேவி தொடர்ந்து நிராகரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நைனா தேவியின் அண்ணன் ஷேர் சிங், தனது தங்கையின் செயல்பாடுகளை நோட்டமிட்டுள்ளார். நைனா தேவியின் செல்போனை பார்த்தபோது, அவர் பல ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து பேசி வந்தது தெரியவந்தது. … Read more

ரூ.19.95 லட்சம் ஆரம்ப விலையில் XEV 9s எலகட்ரிக் எஸ்யூவி வெளியிட்ட மஹிந்திரா | Automobile Tamilan

மஹிந்திரா நிறுவனத்தின பிரசத்தி பெற்ற XUV700 மாடலை தழுவியதாக வடிவமைக்கப்பட்டுள்ள XEV 9s மின்சார எஸ்யூவி காரில் 7 இருக்கை பெற்றிருப்பது மிகப்பெரிய பலமாக அமைந்து விலை ரூ.19.95 லட்சம் முதல் துவங்குகிறன்றது. முந்தைய BE 6, XEV 9e மாடலில் உள்ள 59kWh மற்றும் 79kWh பேட்டரி பேக்குகளை பெற்றதை போலவே இந்த மாடலும் இதே பேட்டரிகளை பெற்று XEV 9e போன்ற வசதிகளை பெற்றதாகவும் கூடுதலாக 70Kwh பேட்டரியும் பெற்றதாக அமைந்துள்ளது. Mahindra XEV … Read more

Hong Kong: 32 மாடிகள் கொண்ட 8 கட்டிடங்கள்: ஒரே நேரத்தில் தீ பற்றிய சோகம்; 44 பேர் பலி!

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு நாடான ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் 44 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஹாங்காங்கில் உள்ள தை போவில் அமைந்துள்ளது வாங் ஃபுக் நீதிமன்றம் (Wang Fuk Court) என்ற உயரமான குடியிருப்பு வளாகம். இந்த வளாகத்தில் 32 மாடிகள் கொண்ட 8 கட்டிடங்கள் இருக்கின்றன. அதனால் மிகுந்த அடர்த்தியான குடியிருப்பு வளாகம் எனக் கூறப்படுகிறது. இந்தக் கட்டிடம் பழுதுபார்க்கப்பட்டு வந்தது. அதற்காக மூங்கில் … Read more

ஒசூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசகர்களை தேர்ந்தெடுக்க டென்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை: ஒசூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக ஆலோசகர்களை தேர்ந்தெடுக்கும் வகையில்,  தமிழ்நாடு அரசு டென்டர் கோரி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 27ந்தேதி  நடைபெற்ற பேரவை கூட்டத்தொடரில் விதி 110ன் கீழ்  ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் மற்றும்  திருச்சியில் ‘கலைஞர் நூலகம்’ அமைக்கப்படும் என்று  அறிவித்தார். அபபோது,  ஓசூர் நகரத்திற்கான பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு அது நிறைவடையும் நிலையில் உள்ளது. பொருளாதார வளர்ச்சி மையமாக ஓசூரை உருவாக்க … Read more

பெண் டாக்டர்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்தவர் கைது

ஐதராபாத், ஆந்திர மாநிலம் குண்டூரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி ஒன்றில் வெங்கடசாயி என்பவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஆண் நர்சாக பணிக்கு சேர்ந்தார். இந்தநிலையில், ஆபரேஷன் தியேட்டரில் பெண் டாக்டர்கள் உடை மாற்றுவதை அவர் செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவ மாணவிகள் ஆடை மாற்றுவதையும் அவர் ரகசியமாக வீடியோ எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வந்து வெங்கடசாயியை கைது செய்து அவருடைய செல்போனை பறிமுதல் செய்தனர். … Read more