குடும்பத்தையும், அரசியலையும் துறக்கிறேன்: லாலு பிரசாத்திற்கு சிறுநீரகம் தானம் செய்த மகள் அறிவிப்பு

நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்துள்ளது. இத்தோல்வி முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. கூட்டணியை இறுதி செய்வதில் இருந்தே சறுக்கலை சந்தித்து வந்த ராஷ்ட்ரீய ஜனதா தள முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் இப்போது தேர்தலில் படுதோல்வியை சந்தித்து இருக்கிறார். இத்தோல்வியை தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் மகள் ரோஹினி ஆசாரியா புதிய குண்டை போட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள … Read more

அரசு மருத்துவமனைகளில் கர்ப்பகால நீரிழிவு நோயை கண்டறிந்து தடுக்கும் திட்டம் விரைவில் தொடக்கம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் கர்ப்பகால நீரிழிவு நோயை கண்டறிந்து தடுக்கும் திட்டம் விரைவில் தொடங்க இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் உலக நீரிழிவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். அப்போது, ‘நீரிழிவு நோய் வகை -1’ விழிப்புணர்வு காணொளி மற்றும் புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து, கர்ப்பகால நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்கும் மாதிரி திட்டத்தை தொடங்கி வைத்தார். … Read more

டாடா மோட்டார்சின் புதிய சியரா எஸ்யூவி அறிமுகமானது | Tata Sierra First look | Automobile Tamilan

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் பிரசத்தி பெற்ற சியரா எஸ்யூவி நவீன காலத்திற்கு ஏற்றதாக மட்டுமல்லாமல், பாரம்பரிய டிசைன் வடிவத்தை நினைவுப்படுத்துகின்ற நிலையில் விற்பனைக்கு நவம்பர் 25 ஆம் தேதி விலை ரூ.12 லட்சத்துக்குள் துவங்க வாய்ப்புள்ளது. Tata Sierra பழைய சியராவின் அழகையும், புதிய தொழில்நுட்பத்தையும் கலந்து புதுப்பிக்கப்பட்ட அம்சங்களை பெற்று 5 இருக்கை கொண்ட எஸ்யூவியின் முன்புறத்தில் டாடா லோகோ கொடுக்கப்பட்டு Sierra எழுத்துரு லோகோ கொடுக்கப்பட்டு, மிகவும் கவர்ச்சிகரமாக விளங்க பளபளப்பான கிரில் … Read more

“திமுக தமிழகத்தில் ஆளும் கட்சி, இந்தியா முழுதும் சிறந்த எதிர்க்கட்சி'' – உதயநிதி ஸ்டாலின்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புதிய பேரூராட்சி கட்டிடத்தை திறந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் மாதவன் ஆகியோரின் சிலைகளை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவில் பேசும்போது, “ஒரு கட்சிக்கு நல்ல தலைமை, ஆழமான அடிப்படைக் கொள்கை, வழுவான கட்டமைப்பு என்ற முக்கியமான மூன்று விஷயங்கள் இருந்தால்தான் அந்தக் கட்சி மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வளர்ச்சி பெற முடியும். காரைக்குடி விழாவில் உதயநிதி ஸ்டாலின் 75 ஆண்டுகள் கடந்தும் திராவிட முன்னேற்றக் கழகம் வலுவான … Read more

ஜம்மு-காஷ்மீா் காவல்நிலையத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி, 32 பேர் காயம்

காஷ்மீா்: ஜம்மு-காஷ்மீா் காவல்நிலையத்தில்  வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் எதிராமல்  வெடி சிதறியல் அங்கு பணியில் இருந்த போலீசார் உள்பட 9 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 32 பேர் காயம் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பயங்கரவாத சதித் செயல் தொடா்பாக காவல்துறையினர் நடத்திய வேட்டையின்போது  பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் எதிர்பாராதவிதமாக வெடித்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.  ஜம்மு-காஷ்மீா், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காவல் துறையினா் மேற்கொண்ட நடவடிக்கையில் 2,900 … Read more

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த வாரம் முழுவதும் மழை?

அடுத்த வாரம் முழுவதும் தமிழ்நாட்டில் மழை இருக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று தென் இலங்கை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக, இன்று காலை இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக … Read more

19ந்தேதி கோவை வருகிறார் பிரதமர் மோடி: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: வரும்  19ந்தேதி  பிரதமர் மோடி கோவை வர இருக்கிறார். இதையொட்டி,  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் சங்கங்களால் கோவையில் நடத்தப்படும் 25வது தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19 ஆம் தேதி கோவைக்கு வருகை தருகிறார். இது இயற்கை வேளாண் நிபுணர் மறைந்த ஜி. நம்மாழ்வார் பரப்பிய விவசாய முறைகளை முன்னெடுத்துச் செல்லும் என்று நம்பப்படுகிறது. கோவை கொடிசியாவில் … Read more

BB Tamil 9: "ஒண்ணாம் க்ளாஸ் புத்தகத்தை படிச்சிருந்தாக்கூட.!" – விஜய் சேதுபதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்கின்றனர். BB Tamil 9 இதனைத்தொடர்ந்து இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றது. பார்வதி, சபரி, திவ்யா கணேஷ் போட்டியிட்ட நிலையில் சபரி டாஸ்க்கில் வெற்றி பெற்று இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். BB Tamil 9: … Read more

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது! இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி  உருவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக வடகிழக்குப் பருவமழை ஓரிரு நாள்களில் தீவிரமடையும் என்றும் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில்  உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் மிக மெதுவாக மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.  இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் … Read more

தெலங்கானா இடைத்தேர்தல்: டெபாசிட்டை பறிகொடுத்த பாஜக – காங்கிரஸ் அபார வெற்றி!

தெலங்கானா மாநிலம் ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏ மகந்தி கோபிநாத் மாரடைப்பால் இறந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலுக்காக தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி, வி. நவீன் யாதவை வேட்பாளராக நிறுத்தியது. எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ் மறைந்த எம்.எல்.ஏ.வின் மனைவி மகந்தி சுனிதாவை வேட்பாளராக நிறுத்தியது.கடந்த நவம்பர் 11 ஆம் தேதி ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 48.43 சதவீத வாக்குப்பதிவானது. தெலங்கானா முதல்வர் ரேவந்த் மற்றும் காங்கிரஸ் ஜூபிலி ஹில்ஸ் வேட்பாளார் … Read more