`ரௌடி தட்டாஞ்சாவடி செந்தில், வீட்டுக்கு வந்தவரை கொலை செய்து வீசியவர்!’ – பாஜக எம்.எல்.ஏ பகீர் புகார்

புதுச்சேரியின் பிரபல தாதாவும், அர்ஜுனக்குமாரி அறக்கட்டளை அமைப்பின் தலைவருமான தட்டாஞ்சாவடி செந்தில், முதல்வர் ரங்கசாமியின் ஆதரவாளர். இவர் காலாப்பட்டு தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் மீது கொலைக் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதுகுறித்து கடந்த 20.1.2025 அன்று விகடன் இணையப்பக்கத்தில், `மூன்று கொலைகளையும் செய்தது பாஜக எம்.எல்.ஏ-தான்!’ – பகீர் கிளப்பும் பிரபல தாதா’ என்ற தலைப்பில் செய்திக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். எம்.எல்.ஏ கல்யாணசுந்தரத்திடம் விளக்கம் பெற முயற்சித்தபோது அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் அவருக்கு குறுந்தகவல் அனுப்பியிருந்தோம். … Read more

ஆறே நாளில் 6000 கி. மீ. – கண்டங்களைத் தாண்டி எல்லையை விரிவுபடுத்திய அமூர்

அமூர் ஃபால்கன் என்றழைக்கப்படும் அமூர் பருந்து என்பது ரஷ்யாவின் அமூர் பிராந்தியத்திலிருந்து ஆப்பிரிக்கா வரை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் இடம் பெயர்ந்து பறக்கும் சிறிய பருந்தினம். ஓய்வின்றி பல ஆயிரம் கிலோ மீட்டர்களை கடந்து செல்லும் திறன் கொண்ட இந்தப் பருந்து பறவை ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் கவர்ந்த ஒன்று. அந்த வகையில், இந்திய ஆய்வாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையில் 6100 கி.மீ. வரை ஓய்வின்றி பறப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மணிப்பூர் காடுகளில் பிடிபட்ட மூன்று அமூர் பறவைகளின் … Read more

பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் கொடுமை வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை!

2024 ஆண்டின் துவக்கத்தில் ஆடியோ ஒன்று வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் இருக்கும் உரையாடலை வைத்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் புகாரில் முன்னாள் அ.தி.மு.க நிர்வாகியான பரமக்குடி நகராட்சி கவுன்சிலர் சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், ஜவுளிக் கடை உரிமையாளர் ராஜா முகமது மற்றும் இடைத் தரகர்களாக செயல்பட்ட அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகியோர் மீது பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் போக்சோ வழக்குப் … Read more

சேலத்தில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு! காவல்துறை விளக்கம்…

சேலம்: சேலத்தில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது குறித்து மாவட்ட காவல்துறை விளக்கம் வெளியிட்டு உள்ளது. கரூர் சம்பத்தினால் இரு மாதங்களாக தனது மக்கள் சந்திப்பு பயணத்தை ஒத்தி வைத்திருந்த தவெக தலைவர் விஜய், மீண்டும் தனது தேர்தல் பிரசார பயணங்களை மேற்கொள்ள உள்ளார். அவரது அடுத்த மக்கள் சந்திபப்பு கூட்டம் சேலத்தில் நடைபெறும் வகையில், சேலத்தில்  சீலநாயக்கன்பட்டி, போஸ் மைதானம், கோட்டை மைதானம் ஆகிய 3 இடங்களில் தவெகவினர் அனுமதி கோரியிருந்த நிலையில் காவல்துறை  … Read more

நெல் ஈரப்பத அளவை அதிகரிக்க வலியுறுத்தி மத்தியஅரசுக்கு எதிராக திமுக கூட்டணி ஆர்பாட்டம் அறிவிப்பு

சென்னை: நெல் ஈரப்பத அளவை அதிகரிக்க மறுத்த  மத்தியஅரசை கண்டித்தும், ஈரப்பத அளவை உயர்த்த வலியுறுத்தியும் திமுக கூட்டணி சார்பில் டெல்டா மாவட்டங்களில் ஆர்பாட்டம்  நடைபெறும்  அறிவிக்கப்பட்டுள்ளது. நெல் ஈரப்பத அளவை அதிகரிக்க தமிழ்நாடு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு மறுத்ததாக குற்றஞ்சாட்டி தஞ்சாவூர், திருவாரூரில் திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.   அதன்படி, நவ.23ம் தேதி தஞ்சையிலும் 24ம் தேதி திருவாரூரிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நெல் ஈரப்பத … Read more

பி.டி.உஷா, எழுத்தாளர் ஜெயமோகனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய தட்சசீலா பல்கலைக்கழகம்!

விழுப்புரம் மாவட்டம், ஓங்கூர் பகுதியில் அமைந்திருக்கும் தட்சசீலா பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கடந்த நவம்பர் 20-ம் தேதி பல்கலைக்கழகத்தின் கருத்தரங்குக் கூடத்தில் நடைபெற்றது. தட்சசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், ஸ்ரீமணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவருமான தனசேகரன், பதிவாளர் செந்தில் கலந்து கொண்ட அந்த விழாவில், 2003-ம் ஆண்டு லைபீரியா நாட்டில் நடைபெற்ற உள்நாட்டுப் போரை வன்முறையற்ற போராட்டங்களின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக நோபல் பரிசு பெற்ற, லேமா குபோவீ சிறப்பு அழைப்பாளராக கலந்து … Read more

போலி ஆவணங்கள் மூலம் அமைச்சர் மனோதங்கராஜ் தங்கை ரூ.100 கோடி சொத்து பதிவு! உயர்நீதிமன்றம் விமர்சனம்…

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் அமைச்சர் மனோதங்கராஜ் தங்கை ரூ.100 கோடி சொத்து பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து, சென்னை உயர்நீதிமன்றம்  திமுக அரசை கடுமையாக சாடி உள்ளது. இதுவரை, சம்பந்தப்பட்டவர்கள், அவர்களுக்கு உதவிய அதிகாரிகள்மீது  ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. திமுக அமைச்சர் அமைச்சர் மனோ தங்கராஜ் மீது குவிந்த புகார்கள் காரணமாக கடந்த 2024ம் ஆண்டு முதல்வர் ஸடாலின் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார்.  அவர்மீது, ஆவின் பால் … Read more

"மெட்ரோவுக்கு இங்கு போராடி என்ன பயன்? நாடாளுமன்றத்தை முடக்குங்கள்" – திமுகவுக்கு வேலுமணி அறிவுரை

கோவை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எஸ்ஐஆர் பணிகள் மிகவும் தொய்வாக உள்ளன. கோவை மாவட்டத்தில் திமுகவினர் அதிகாரிகளைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். வேலுமணி அதிமுக ஆட்சியின்போது கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டமும், ஏராளமான மேம்பாலங்களும் கொண்டு வரப்பட்டன. கோவையில் மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு … Read more

குப்பை நகரமாக மாறிய ‘டாலர் சிட்டி’: திருப்பூரில் 25-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை:  டாலர்சிட்டி என அழைக்கப்படும் திருப்பூர் மாநகரை குப்பை நகரமாக மாற்றிய திமுக அரசை கண்டித்து திருப்பூரில் 25-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்  நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். திருப்பூர் மாநகராட்சி முழுவதும் குப்பைகள் அள்ளப்படாமல் சுகாதார சீர்கேட்டால் அவதியுறும் நிலை, குடிநீர் பிரச்சனை, பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்திய பிறகு சாலைகள் சீரமைக்கப்படாததால் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துகள் என்று, செயல்படாமல் இருக்கும் திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் … Read more