பணத்தைப் பல மடங்காக்கும் 'அஸெட் அலொகேஷன்' சீக்ரெட்… கற்றுக்கொள்ள வேண்டுமா?

முதலீட்டில் பலரும் பல தவறுகளைச் செய்கிறோம். தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் தங்கத்தில் மட்டுமே பணத்தைப் போடுகிறார்கள்,  அதேபோலத்தான் சிலர் ரியல் எஸ்டேட் தாண்டி எந்த முதலீட்டையும் செய்வதில்லை. சிலரோ பங்குச் சந்தையில் மட்டுமே முதலீடு செய்கிறார்கள். ஒரே ஒரு சொத்து வகையில் மட்டும் பணத்தைப் போடுவது முதலீட்டுக்கு அதிக ரிஸ்க்கைக் கொண்டுவரும். ஏனெனில், தங்கம், ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை போன்ற ஒவ்வொரு வகை சொத்துகளும், பல்வேறு காரணிகளின் தாக்கத்தால் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு விதமாகச் செயலாற்றுகின்றன. எனவே, … Read more

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 43

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 43 பா. தேவிமயில் குமார் காத்திருப்பு… காத்திருக்கும் விடைகள் கண்டு கொள்ளா வினாக்கள்…. ஏக்கம் நிறைந்த ராவுகள் தூக்கம் வராத துளி துயில்கள்!! காதலுக்கு வரியாக கண்ணீர் கவிதைக்கு வரியாக நீ மட்டுமே! இரக்கமற்ற பார்வை எதற்கு? இதயமற்ற காதல் ஏனடி? விரும்பவில்லை என எப்போதும் விளம்பிடாதே…. ஏனெனில் உயிர் வாழ வேண்டுமடி நான் பா. தேவிமயில் குமார்

பா.ம.கவில் டிசம்பர் 14 முதல் விருப்ப மனு வாங்கலாம்! அன்புமணி அறிவிப்பு…

சென்னை: 2026 சட்ட மன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், கட்சி தலைமை அலுவலகத்தில்  டிசம்பர் 14ந்தேதி முதல் விருப்ப மனு வாங்கலாம்  என பாமக தலைவர் அன்புமணி அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டில்  2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்தமுறை தமிழ்நாட்டில், 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.  திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி … Read more

வார இறுதி நாட்கள் விடுமுறை: தமிழகம் முழுவதும் 860 சிறப்பு பஸ்கள் இயக்கம்…

சென்னை: வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 860 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் , வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை (12-ந்தேதி) முதல் வருகிற 14-ந்தேதி வரை சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கும். பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் … Read more

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மதுரை: திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  திருப்பரங்குன்றம் மலைக்கு யாரும் செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி,  கோவில் இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில், பிறை நிலா போட்ட கொடி புதிதாக கட்டப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  திருப்பரங்குன்றம் மலை மீது  கார்த்திகை தீபம் ஏற்ற திமுக அரசு தடை விதித்த விவகாரம் தென்மாவட்ட மக்களிடையே … Read more

`ஏன் பாரதி, என் பாரதி..!' – மகாகவி குறித்து நெகிழ்ந்து பேசிய பாவலர் அறிவுமதி!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாரின் 144-வது பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம் மற்றும் இளம் பாரதி – 2025 விருது வழங்கும் விழா இன்று (11.12.2025) நடைபெற்றது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் உஷா கீர்த்திலால் மேத்தா அரங்கில் இந்த விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் இரா.இராஜவேல், துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் துர்கா சங்கர் மற்றும் திரைப்படப் பாடலாசிரியர், பாவலர் அறிவுமதி முதலான அறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். `ஏன் பாரதி… என் பாரதி’ என்னும் தலைப்பில் … Read more

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி டிச.13-ல் உண்ணாவிரதம்! நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் டிச.13ந்தேதி (சனிக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி உண்ணாவிரத போராட்டத்தில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என கூறி உள்ளது. மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் மலையில், கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை செயல்படுத்த திமுக அரசு தடை விதித்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான … Read more

"திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்" – தவெக நிர்மல் குமார் பதில்

திருப்பரங்குன்றம் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அங்குப் பதற்றமான சூழலை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது. மக்களவை, மாநிலங்களவை வரை இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது. ‘சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்’ … Read more