`தாக்கரே குடும்பத்தால் மட்டுமே முடியும்!'-மாநகராட்சி தேர்தலில் கூட்டணியை அறிவித்த தாக்கரே சகோதரர்கள்

மும்பை மாநகராட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் ஏற்கெனவே முடிவு செய்துள்ளன. இதற்காக இரு கட்சிகளும் தொகுதிப் பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இப்பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், காங்கிரஸ் கட்சியையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள உத்தவ் தாக்கரே விரும்பினார். ஆனால் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் `நாங்கள் மாநகராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்’ என்று திட்டவட்டமாக அறிவித்தனர். இதையடுத்து தாக்கரே சகோதரர்கள் … Read more

கிறிஸ்துமஸ் விழாவுக்கு பிறகு சென்னை புறநகர் உள்பட 3 மாவட்டங்களில் எடப்பாடி சுற்றுப்பயணம்…

சென்னை: ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பெயரில் மக்களை சந்தித்து பேசி வரும எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, கிறிஸ்துமஸ் விழாவுக்கு பிறகு சென்னை புறநகர் உள்பட 3 மாவட்டங்களில்  சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதிமுக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி வரும் டிச.28, 29 மற்​றும் டிச.30 ஆகிய தேதி​களில் திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு மற்​றும் சென்னை புறநகர் மாவட்​டங்​களில் தேர்​தல் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ளவுள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. அதிமுக பொதுச்​செய​லா​ள​ரும், முன்​னாள் முதல்​வரு​மான பழனி​சாமி ‘மக்​களைக் காப்​போம், … Read more

சகோதரிக்கு வழிவிடுவாரா ராகுல்? `பிரியங்கா காந்தி பிரதமராவது தவிர்க்க முடியாதது' என்கிறார் வதேரா

பிரதமர் நரேந்திர மோடிக்கு நிகராக அரசியல் செய்யக்கூடிய தலைவர் காங்கிரஸ் கட்சியில் இல்லை என்ற விமர்சனம் இருந்து வருகிறது. ராகுல் காந்தியால் நரேந்திர மோடியை சமாளிக்க முடியவில்லை என்று காங்கிரஸ் தலைவர்களே சிலர் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் ராகுல் காந்தி வெளிநாடு சென்று இருந்தபோது அவரது இடத்தில் இருந்து அவரது சகோதரி பிரியங்கா காந்திதான் அனைத்தையும் கவனித்துக்கொண்டார். நாடாளுமன்றத்தில் அவர் பேசிய விதம் அனைவரையும் கவர்ந்தது. நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு முழு அளவில் பிரியங்கா காந்தி தயார் நிலையில் வந்திருந்தார். … Read more

சட்டவிரோத குடியேறிகள் தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறினால், அபராதம் ரத்து – அமெரிக்கா அறிவிப்பு!

வாஷிங்டன்: சட்டவிரோத குடியேறிகள் தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறினால், அபராதம் ரத்து  செய்யப்படும் என தெரிவித்துள்ளதுடன், தாமாக முன்வந்து வெளியேறும் சட்டவிரோத குடியேறிகளுக்கு 3 ஆயிரம் அமெரிக்க டாலர் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும்  அமெரிக்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டை விட்டு தாமாக முன்வந்து வெளியேறினால், அபராதம் ரத்து செய்யப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 31, 2025-க்குள் வெளியேறும் தகுதியுள்ள பங்கேற்பாளர்கள் அனைவருக்கும், அவர்களின் சொந்த நாடுகளுக்கு … Read more

புதுச்சேரி: `போலி மருந்துக் கும்பலிடம் சபாநாயகர் லஞ்சம் வாங்கியிருக்கிறார்!’ – நாராயணசாமி பகீர்

`தீபாவளி பரிசு வழங்க ரூ.42 லட்சம்…’ புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். அத்துடன் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து போலி மருந்து விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையில் நியாயம் இருப்பதை புரிந்து கொண்ட துணைநிலை ஆளுநர், சி.பி.ஐ மற்றும் என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரைத்திருக்கிறார். இது மக்களின் உயிர் … Read more

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட அமெரிக்காவின் செயற்கைக்கோளுடன் நிலைநிறுத்தம்! இஸ்ரோ தகவல்…

ஸ்ரீஹரிகோட்டா: இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட அமெரிக்க செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில்  நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான  இஸ்ரோ தெரிவித்து உள்ளது.  அமெரிக்காவின் செயற்கைக்கோளுடன் செலுத்தப்பட்ட இஸ்ரோவின் எல்விஎம்-3 எம்6 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஏஎஸ்டி நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6500 கிலோ எடையில் ‘புளூபேர்ட்–6’ என்ற செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. … Read more

புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

சென்னை: சென்னையின் கலாச்சாரச் சின்னமான  விக்டோரியா பொது அரங்கம், தொன்மைமாறாமல் புனரமைக்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று  (23.12.2025) பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், சென்னையின் கலாச்சாரச் சின்னமான விக்டோரியா பொது அரங்கம் 32.62 கோடி ரூபாய் செலவில் தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்டு திறந்து வைத்தார். சென்னையின் கலாச்சாரச் சின்னமான விக்டோரியா பொது அரங்கம் விக்டோரியா பொது அரங்கம், சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டடமாக திகழ்கின்றது. இக்கட்டடம் பிரிட்டிஷ் … Read more

Gold Rate: ரூ.1 லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை; இன்னும் உயருமா? எப்போது முதலீடு செய்யலாம்? | Q&A

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1 லட்சத்தைத் தாண்டியது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.200-ஐ தாண்டி விற்பனை ஆகி வருகிறது என்று பார்த்தால், இப்போது அந்த உச்சங்களையும் தாண்டி புதிய உச்சத்தில் விற்பனை ஆகி வருகின்றன. நேற்று சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ.1,02,160 ஆகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ.234 ஆகவும் விற்பனை ஆனது. இரண்டுமே புதிய உச்சம் ஆகும். இந்த நேரத்தில் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாமா என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். … Read more

"நாங்கள்தான் தப்பியோடியவர்கள்; உங்கள் வயிறு எரியட்டும்" – லலித் மோடி வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், இந்திய அரசாங்கத்தையும் சட்டத்தையும் அவர்கள் இருவரும் பகிரங்கமாகக் கேலி செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. லண்டனில் இருந்து லலித் மோடி வெளியிட்ட அந்த வீடியோவில், “நாங்கள் இருவரும் தப்பியோடியவர்கள், இந்தியாவைச் சேர்ந்த மிகப்பெரிய தப்பியோடியவர்கள்” என்று தன்னை மல்லையாவோடு சேர்த்து கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். … Read more