குடும்பத்தகராறு: மனைவியை கொடூரமாக கொலை செய்த தொழிலாளி

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகர். கூலி தொழிலாளி. இவரது மனைவி சாய் வாணி. இந்த தம்பதிக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.பிரபாகருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அவர்களுக்குள் வந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. தனது இதனால் சாய்வாணி கணவரை பிரிந்து வாடகை வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். மேலும் தனியார் மண்டபத்தில் வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்து வந்தார். இதகிடையே, தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கணவர் பலமுறை மனைவியிடம் … Read more

BB Tamil 9: நாமினேஷன் லிஸ்டில் 13 பேர்! இந்த வாரம் வெளியேறிய பெண் போட்டியாளர்?

இந்த வார எவிக்ஷனுக்கான நேரம் வந்துவிட்டது. வார இறுதி எபிசோடுகளுக்கான ஷூட் நேற்று காலை தொடங்கியது. விஜய் சேதுபதியுடன் பிரஜின் வாக்குவாதம் செய்யும் ப்ரோமோவும் இணையத்தில் வைரலானது. பிக் பாஸ் சீசன் 9-ல் வி.ஜே. பார்வதி, பிரவீன் காந்தி, வாட்டர்மெலன் திவாகர், கனி, கெமி என மொத்தமாக 20 போட்டியாளர்கள் முதலில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். BB TAMIL 9 சோசியல் மீடியா பிரபலங்களே பிக் பாஸ் நிறைந்திருப்பதால் இந்த சீசன் கொஞ்சம் டல் அடிக்கிறது … Read more

டெல்லி குண்டுவெடிப்பில் அடையாளம் காணப்படாத 3 உடல்கள் – டி.என்.ஏ. சோதனை நடத்தி ஒப்படைக்க முடிவு

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் கடந்த 10-ந் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் தற்கொலை குண்டாக செயல்பட்ட டாக்டர் உமர் முகமது சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார். இவரோடு பயங்கரவாத சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக 6 பேரை தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சம்பவத்தின் பின்னணியில் உள்ள சதி பற்றியும் விசாரிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் … Read more

துப்பாக்கியை சுத்தம் செய்தபோது குண்டு பாய்ந்து போலீஸ்காரர் உயிரிழப்பு

ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் டியோகர் மாவட்டம் மோகன்பூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் ஹல்வீந்தர் சிவ்பூஜன்பால் (வயது 30). இவர் இன்று காலை போலீஸ் பயிற்சி மையத்தில் சக போலீசாருடன் இணைந்து தனது துப்பாக்கியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, துப்பாக்கியை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது ஹல்வீந்தரின் துப்பாக்கி எதிர்பாராத விதமாக திடீரென வெடித்தது. இதில், துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு ஹல்வீந்தரின் தலையில் பாய்ந்தது. இதில் போலீஸ்காரர் ஹல்வீந்தர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து … Read more

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டம் கிரட்பூர் கிராமத்தை சேர்ந்த பால்காரர் யூசப். இவர் அதே கிராமத்தை சேர்ந்த 16 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அப்பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியை யூசப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 6 மாதங்களுக்குமுன் இந்த சம்பவம் நடந்த நிலையில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். சிறுமி 6 மாதம் கர்பமாக உள்ளது தற்போது தெரியவந்தது. இது குறித்து போலீசில் கடந்த 20ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. … Read more

தங்கம், பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட்.. எது உங்களுக்கான முதலீடு? வழிகாட்டும் Magic Money கருத்தரங்கு!

தங்கமும் வெள்ளியும் உச்சத்தில் இருக்கி றது. பங்குச் சந்தை யும் உச்சத்தில் இருக்கிறது. ரியல் எஸ்டேட் பெரிய மாற்றங்கள் இல்லாமல் இருக்கிறது. ஆனாலும், வீடு, மனை வாங்குவதில் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்நிலையில், இந்திய முதலீட்டுச் சந்தையில், முதலீட்டாளர்களிடையே ‘எது எனக்கான, லாபகரமான முதலீடு?’ என்ற குழப்பம் நிலவிவருகிறது. இந்தக் குழப்பங்களுக்குத் தீர்வு காணும் வகையில், அறிவுசார்ந்த வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கில் ‘Magic 20 Tamil’ நிறுவனம் ‘Magic Money Tn Summit – 2026’ என்ற … Read more

இந்திய அரசியலமைப்பின் அதிகார பயணம்: ஒரு தேசத்தின் கனவுகளை செதுக்கிய புனித ஆவணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வேகம் பொங்கிப் பெருக்கும் காலத்தில், தேசிய உணர்வு தீப்பற்றி எரிந்த அந்த வரலாற்று தருணங்களில், இந்தியா புதிய வாழ்வை நோக்கிச் சென்றது. நூற்றாண்டுகளாக நீண்டுகொண்டிருந்த விடுதலைக்கான போராட்டம், ஒரு நவீன தேசத்தை நிர்மாணிக்கத் தேவையான அடிப்படைச் சட்டம்—ஒற்றுமையும் சமத்துவமும் நீதி … Read more

'ஒரு முறை உங்களை தொட்டுக் கொள்ளட்டுமா'; அரவணைத்த மோகன்லால் – மூதாட்டி செய்த நெகிழ்ச்சி செயல்

கேரளாவைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் தனது வாழ்நாள் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார். கேரளா, ஐமுரி பகுதியைச் சேர்ந்த லீலாமணி என்கிற மூதாட்டி ஒருவர் மோகன்லால் தீவிர ரசிகை. மோகன்லாலை நேரில் சந்திக்க வேண்டும் என்பது இவரின் நீண்ட நாள் ஆசையாக இருந்திருக்கிறது. அந்த ஆசையை இப்போது நிறைவேற்றியிருக்கிறார். மோகன்லால் நடிக்கும் ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் படப்பிடிப்பு ஐமுரி பகுதியிலிருக்கும் தேவாலயத்தில் நடைபெற்று வந்திருக்கிறது. லீலாமணி வசிக்கும் அதே பகுதிக்கு மோகன்லால் படப்பிடிப்புக்கு வந்திருப்பதை அறிந்தவர் தனது … Read more

Aval Awards: "என் கனவை அம்மா அனுமதிச்சதுக்கு நன்றி சொன்னா பத்தாது" – சிவகார்த்திகேயன் எமோஷனல்!

விகடனின் அவள் விருதுகள் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் ‘பெஸ்ட் மாம்’ விருதைப் பெற்றார் நடிகர் சிவகார்த்திகேயனின் அம்மா ராஜி தாஸ். விருது குறித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அம்மாவுக்கு கிடைத்த விருதுபற்றி பேசிய சிவகார்த்திகேயன், “அப்பா இறக்கும்போது நான் ஃபர்ஸ்ட் இயர், அக்கா வந்து காலேஜ் செகண்ட் இயர். அதுக்கப்புறம் எல்லாருக்குமே ரெண்டு கேள்விதான் ‘அடுத்து என்ன செய்யப் போறோம் லைஃப்ல’. Aval Awards அம்மா ஒன்னு மட்டும் தான் சொல்லிட்டே இருப்பாங்க படிச்சிடணும் … Read more