சென்னையின் 200 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறைகள்! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னையின் 200 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறைகள் அமைக்கப்படும என தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய   முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். மேலும்,  தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் டிசம்பர் 6 முதல் அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார். மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்களுக்கு … Read more

மோசமான தோல்வி.. பீகார் தேர்தல் குறித்து கார்கே, ராகுல்காந்தி ஆலோசனை

புதுடெல்லி, பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களையும், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைமையிலான இந்தியா கூட்டணி 35 இடங்களிலும், தனியாக களம் கண்ட ஓவைசி கட்சி 5 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமான தோல்வியை தழுவியது. 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. … Read more

IPL: CSK `டு' RCB; வீரர்கள் பட்டியலை வெளியிட்ட அணிகள்; மீத இருப்புத்தொகை எவ்வளவு | முழு பட்டியல்

2026 ஐ.பி.எல் சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதற்கு முன் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும், விடுவிக்கும் மற்றும் ட்ரேட் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்ப்பதற்கான இறுதிநாள் இன்று (நவம்பர் 15). இந்த நிலையில், 10 அணிகளும் தங்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்டிருக்கிறது. IPL (இந்தியன் பிரீமியர் லீக்) 1. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG): தக்கவைக்கப்பட்டவர்கள் – ரிஷப் பண்ட் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, அப்துல் சமாத், எய்டன் … Read more

எஸ்ஐஆர் நடவடிக்கை: அதிமுக பூத் ஏஜெண்டுகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை…

சென்னை:  தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணி (SIR) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,   அதிமுக பூத் ஏஜெண்டுகளுகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என   அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “போலி வாக்காளர்கள், இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரட்டை வாக்குகள் போன்றவைகளை சரிபார்த்து உண்மையான வாக்காளர்கள் வாக்களிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் … Read more

குடும்பத்தையும், அரசியலையும் துறக்கிறேன்: லாலு பிரசாத்திற்கு சிறுநீரகம் தானம் செய்த மகள் அறிவிப்பு

நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்துள்ளது. இத்தோல்வி முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. கூட்டணியை இறுதி செய்வதில் இருந்தே சறுக்கலை சந்தித்து வந்த ராஷ்ட்ரீய ஜனதா தள முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் இப்போது தேர்தலில் படுதோல்வியை சந்தித்து இருக்கிறார். இத்தோல்வியை தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் மகள் ரோஹினி ஆசாரியா புதிய குண்டை போட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள … Read more

அரசு மருத்துவமனைகளில் கர்ப்பகால நீரிழிவு நோயை கண்டறிந்து தடுக்கும் திட்டம் விரைவில் தொடக்கம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் கர்ப்பகால நீரிழிவு நோயை கண்டறிந்து தடுக்கும் திட்டம் விரைவில் தொடங்க இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் உலக நீரிழிவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். அப்போது, ‘நீரிழிவு நோய் வகை -1’ விழிப்புணர்வு காணொளி மற்றும் புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து, கர்ப்பகால நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்கும் மாதிரி திட்டத்தை தொடங்கி வைத்தார். … Read more

டாடா மோட்டார்சின் புதிய சியரா எஸ்யூவி அறிமுகமானது | Tata Sierra First look | Automobile Tamilan

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் பிரசத்தி பெற்ற சியரா எஸ்யூவி நவீன காலத்திற்கு ஏற்றதாக மட்டுமல்லாமல், பாரம்பரிய டிசைன் வடிவத்தை நினைவுப்படுத்துகின்ற நிலையில் விற்பனைக்கு நவம்பர் 25 ஆம் தேதி விலை ரூ.12 லட்சத்துக்குள் துவங்க வாய்ப்புள்ளது. Tata Sierra பழைய சியராவின் அழகையும், புதிய தொழில்நுட்பத்தையும் கலந்து புதுப்பிக்கப்பட்ட அம்சங்களை பெற்று 5 இருக்கை கொண்ட எஸ்யூவியின் முன்புறத்தில் டாடா லோகோ கொடுக்கப்பட்டு Sierra எழுத்துரு லோகோ கொடுக்கப்பட்டு, மிகவும் கவர்ச்சிகரமாக விளங்க பளபளப்பான கிரில் … Read more

“திமுக தமிழகத்தில் ஆளும் கட்சி, இந்தியா முழுதும் சிறந்த எதிர்க்கட்சி'' – உதயநிதி ஸ்டாலின்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புதிய பேரூராட்சி கட்டிடத்தை திறந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் மாதவன் ஆகியோரின் சிலைகளை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவில் பேசும்போது, “ஒரு கட்சிக்கு நல்ல தலைமை, ஆழமான அடிப்படைக் கொள்கை, வழுவான கட்டமைப்பு என்ற முக்கியமான மூன்று விஷயங்கள் இருந்தால்தான் அந்தக் கட்சி மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வளர்ச்சி பெற முடியும். காரைக்குடி விழாவில் உதயநிதி ஸ்டாலின் 75 ஆண்டுகள் கடந்தும் திராவிட முன்னேற்றக் கழகம் வலுவான … Read more

ஜம்மு-காஷ்மீா் காவல்நிலையத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி, 32 பேர் காயம்

காஷ்மீா்: ஜம்மு-காஷ்மீா் காவல்நிலையத்தில்  வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் எதிராமல்  வெடி சிதறியல் அங்கு பணியில் இருந்த போலீசார் உள்பட 9 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 32 பேர் காயம் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பயங்கரவாத சதித் செயல் தொடா்பாக காவல்துறையினர் நடத்திய வேட்டையின்போது  பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் எதிர்பாராதவிதமாக வெடித்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.  ஜம்மு-காஷ்மீா், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காவல் துறையினா் மேற்கொண்ட நடவடிக்கையில் 2,900 … Read more

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த வாரம் முழுவதும் மழை?

அடுத்த வாரம் முழுவதும் தமிழ்நாட்டில் மழை இருக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று தென் இலங்கை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக, இன்று காலை இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக … Read more