கேரள உள்ளாட்சி தேர்தல்; காங்கிரஸ் கூட்டணி 387 வார்டுகளில் முன்னிலை

கொச்சி, கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. அதன்படி திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களில் கடந்த 9-ந்தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இந்தநிலையில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த 7 மாவட்டங்களில் 3 மாநகராட்சிகளில் 188 வார்டுகளுக்கும், 7 மாவட்ட ஊராட்சிகளில் 182 … Read more

இந்தியாவில் மினி கூப்பர் S Convertible விலை ரூ. 58.50 லட்சம்.! | Automobile Tamilan

பிஎம்டபிள்யூ கீழ் செய்படுகின்ற மினி நிறுவனம், தனது மடங்கக்கூடிய மேற்கூரை பெற்ற புதிய தலைமுறை கூப்பர் கன்வெர்ட்டிபிள் காரை இந்திய சந்தைக்கு எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 58.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மடங்கும் வகையிலான வெறும் 18 விநாடிகளில் இந்த மேற்கூரையைத் திறக்கவும், 15 விநாடிகளில் மூடவும் முடியும். அதுமட்டுமின்றி, மணிக்கு 30 கிமீ வேகத்தில் பயணிக்கும்போதும் கூட இந்த மேற்கூரையை இயக்கலாம் என்பது இதன் தனிச்சிறப்பாக உள்ளது. வழக்கமான பாரம்பர்யத்தை பறைசாற்றுகின்ற புதிய மினி கூப்பர் … Read more

Akhanda 2 Review: 'இது காரசார விருந்து காது; சாத விருந்துரா!' – விசில் பறக்க வைக்கிறாரா பாலையா?!

நந்தமுரி பாலகிருஷ்ணா – போயப்பாட்டி ஶ்ரீனு கூட்டணியில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘அகண்டா’ படத்தின் சீக்குவல் பாகமான ‘அகண்டா 2: தாண்டவம்’ இப்போது திரைக்கு வந்திருக்கிறது. பாலமுரளி கிருஷ்ணாவின் (பாலகிருஷ்ணன்) மகள் ஜனனி (ஹர்ஷாலி மல்ஹோத்ரா) இந்தப் பாகத்தில் வளர்ந்து விஞ்ஞானியாக இருக்கிறார். ஜனனிக்கு ஒரு பிரச்னையென்றால் மீண்டும் வருவேன் என முதல் பாகத்தில் வாக்குக் கொடுத்த அகண்டா (பாலகிருஷ்ணன்) இந்தப் பாகத்தின் தொடக்கத்திலேயே தவம் செய்யத் தொடங்குகிறார். சிறு வயதிலேயே பெரிய, பெரிய சாதனைகளை … Read more

திமுகவுக்கு எதிராக நீதித்துறையை திருப்பி விட சதி! அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை:  திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து நீதித்துறையை திமுக அரசுக்கு எதிராகத் திருப்பி விட முயற்சிக்கிறது பாஜக அரசு. இது து கண்டிக்கத்தக்கது என்று தமிழ்நாடு அமைச்சர்  அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய திமுக உள்பட கூட்டணி கட்சிகள் பாராளுமன்ற சபாநாயகரிடம் வலியுறுத்தியதற்கு  56  ஓய்வுபெற்ற  நீதிப​தி​கள்  கொண்டு குழு கடும் கண்டனம் தெரிவித்தது. இது அரசி​யல் நிர்​பந்​தங்​களுக்கு நீதிப​தி​களை அடிபணிய வைக்கும் முயற்சி, அரசியல் … Read more

மனைவியின் கருவை கலைத்து விட்டு 2-வது திருமணத்திற்கு தயாரான காதல் கணவர்.. திருமண மண்டபத்தில் நடந்த பரபரப்பு

ராய்ச்சூர், கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் ரிஷப். இவர், பல்லாரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தபோது, கொப்பல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் ஒரே கல்லூரியில் படித்ததால், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. மேலும், இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி, அவரை ரிஷப் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கல்லூரி படிப்பு முடிந்த பின்பு இளம்பெண் கர்ப்பம் அடைந்தார். இதுபற்றி ரிஷப்புக்கு … Read more

சாத்தூர்: SI-யின் மனைவி தற்கொலையில் சந்தேகம்; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்; பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் அருண் (28). இவர் சாத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்த இளவரசியை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 2 வயது பெண் குழந்தை உள்ளது. சாத்தூர் பாரதி நகரில் வாடகை வீட்டில் எஸ்.ஐ. அருண், மனைவி இளவரசி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகின்றனர். நேற்று ஆளுநர் நிகழ்ச்சிக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது … Read more

தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம்! ஆர்.எஸ்.பாரதி

சென்னை: தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை  மூலம் தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான காலஅவகாசம் நாளை (டிசம்பர் 14ந்தே) உடன் முடிவடைய உள்ளது. இதற்கிடையில், எஸ்ஐஆர் பாரம் பதிவேற்றுவதில் பல்வேறு குளறுடிகள் இருப்பதாக, எஸ்ஐஆர் பணிகளை மேற்கொண்டு வரும் அரசு அலுவலகங்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இவர்களுக்கு மேலே உள்ள தேர்தல் அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் இதுதொடர்பான சரியான … Read more

இண்டிகோ விமான சேவை பாதிப்பு: 4 அதிகாரிகளை சஸ்பெண்டு செய்த விமான போக்குவரத்து இயக்குனரகம்

டெல்லி, விமான விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தவிர்க்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் புதிய விதிகளை வகுத்தது. புதிய விதிகளை அமல்படுத்த 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் வகுத்த புதிய விதிகளை இண்டிகோ அமல்படுத்தவில்லை. குறிப்பாக, குறைவான விமானிகள், பணியாளர்களுடன் சேவையை தொடர்ந்தது. இதனால், கடந்த 1ம் தேதி முதல் இண்டிகோ விமான சேவை கடும் பாதிப்பை சந்தித்து வந்தது. … Read more

`93 பேர் மட்டுமே வசிக்கும் மாஞ்சோலையில் 1,100 வாக்காளர்கள் பதிவேற்றம்?' – அலுவலர்களுக்கு நோட்டீஸ்

நெல்லை மாவட்டம், பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி சார்பில் மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தேயிலை, காபி பயிர் செய்யப்பட்டுள்ளன. இந்தப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதி, ஆங்கிலேயர் ஆட்சியின் போது 99 ஆண்டுகள், பிபிடிசி நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்த குத்தகைக்காலம் வரும் 2029-ம் ஆண்டுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு மாஞ்சோலை வனப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுகிறது. மாஞ்சோலை தேயிலை தோட்டம் இதற்கக அந்த தேயிலைத் தோட்டங்களில் குடும்பத்துடன் பணிபுரிந்து வசித்து … Read more

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ. 11, 718 கோடி ஒதுக்கீடு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: 2027ம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ. 11, 718 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அமைச்சரவை 2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக 11,718 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், 2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் மற்றும் இரண்டாம் கட்டம் என … Read more