தினமும் 'ஒரு பீர்' அளவிலான ஆல்கஹாலை உட்கொள்ளும் சிம்பன்சிகள் – ஆய்வில் வெளிவந்த சுவாரஸ்ய தகவல்!

காடுகளில் வாழும் சிம்பன்சிகள், நன்கு பழுத்த பழங்களை உண்பதன் மூலம் தினமும் ஒரு பீர் பாட்டில் அளவுக்கு சமமான ஆல்கஹாலை உட்கொள்வதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு ஆல்கஹால் மீதுள்ள நாட்டம் எப்படி உருவானது என்பது குறித்த பரிணாம ரீதியான விளக்கத்தையும் இந்த ஆய்வு வழங்குகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, உகாண்டா மற்றும் ஐவரி கோஸ்ட் காடுகளில் இந்த ஆய்வை நடத்தியது. அங்குள்ள சிம்பன்சிகள் விரும்பி உண்ணும் அத்திப்பழங்கள், பிளம்ஸ் போன்ற … Read more

தனியார் வளாகங்களை விட மலிவான வாடகையில் அமைக்கப்படும் TNHB வணிக வளாகங்கள்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் (TNHB), சென்னை முழுவதும் அதன் புதிய வணிக வளாகங்களை மிகவும் வசதியான மையங்களாக அமைத்து வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. சதுர அடி ரூ. 88 முதல் ரூ. 118 வரை வாடகைக்கு வழங்கிவருகிறது. இது தனியார் வளாகங்களுக்கு கொடுக்கும் வாடகையை விட 20% குறைவாக உள்ளதை அடுத்து EPFO ​​(ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) மற்றும் GST உள்ளிட்ட துறைகள் தங்கள் அலுவலகங்களை TNHB வணிக வளாகங்களுக்கு … Read more

“அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன் என்றார் அமித்ஷா'' – எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, “டெல்லி பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வருகிறது. திமுக எதிர்கட்சியாக இருந்தபோது யாரை விமர்சனம் செய்தார்களோ அவர்களையே ஆளும் கட்சியான உடன் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்றனர். திமுக ஆளும் கட்சியாக ஒரு நிலைப்பாடு, எதிர்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு. நான் முகத்தை துடைத்ததை… மறைத்ததாக விமர்சனம் எழுந்துள்ளது. டெல்லியில் எடப்பாடி பழனிசாமி அமித்ஷா … Read more

விரைவில் ஹைட்ரஜன் குண்டு: கர்நாடகத்தில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 6,018 வாக்காளர்களை நீக்க முயற்சி! ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடகத்தில் உள்ள ஆலந்து சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 6,018 வாக்காளர்களை நீக்க முயற்சி செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்  ராகுல்காந்தி குற்றச்சாட்டு கூறியுள்ளார். மேலும் விரைவில் ஹைட்ரஜன் குண்டு வெடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். “இந்தியாவில் அரசியலமைப்பை அழித்து ஜனநாயகத்தைக் கொலை செய்பவர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாக்கிறார்” என்று கூறினார்.   பீகார் தீவிர வாக்காளர் சீர்திருத்தத்தை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் சீர்திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு … Read more

நெல்லை: பைக் மீது மோதல்; தட்டிக் கேட்ட இளைஞரை காரில் இழுத்துச் சென்ற எஸ்.ஐ

நெல்லை மாநகர காவல் துறையில் சந்திப்பு போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர், காந்திராஜன். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவரான இவர் நெல்லையை அடுத்த சுத்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 59 வயதான காந்திராஜனுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதால் தனது வீட்டில் இருந்து தினமும் சொந்த காரில் பணிக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி, நேற்று இரவு அவர் பணிமுடிந்து நெல்லை நகரம் தெற்கு மவுண்ட் ரோடு வழியாக சுத்தமல்லிக்கு … Read more

21ந்தேதி மகாளய அமாவாசை: ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு…

சென்னை: ம​காளய அமா​வாசையை முன்​னிட்டு ராமேசுவரத்​துக்கு சிறப்பு பேருந்​துகள்  பல மாவட்டங்களில் இருந்து இயக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு, பொதுமக்களின் வசதிக்காக, விடுமுறை தினங்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது. அதன்படி, பண்டிகை காலங்கள்,  வார விடுமுறை நாட்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்​பாக அரசு … Read more

தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு: ஊட்டி அருகே ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள் – அதிகாரிகள் தீவிர ஆய்வு…

சென்னை; நாடு முழுவதும் வாக்கு திருட்டு அதகளப்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.  ஊட்டி அருகே ஒரே வீடு முகவரியில் 79 வாக்காளர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த வீட்டில் 4 பேர் மட்டுமே குடியிருந்து வரும் நிலையில், அந்த வீட்டின் முகவரியில் 79 வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற் றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது வாக்கு திருட்டை உறுதிப்படுத்தி உள்ளது. … Read more

தென்காசி: "வனத்துறை மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" – விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு

தென்காசி மாவட்டம், தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் தென்காசி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் லாவண்யா பால் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்பதற்கு அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு நிவர்த்தி செய்ய வேண்டும். ஆனால் தங்களது பிரதான பிரச்சனையான வன விலங்குகள் அட்டகாசத்தைக் கேட்பதற்கு வனத்துறை அதிகாரிகள் வரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் தொடர்பு … Read more

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு…

டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை  சந்தித்த நிலையில், அவரை சந்தித்தது. ஏன் தெரியுமா? எடப்பாடி பழனிசாமி  தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 17) தமது எக்ஸ்  பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,   மாண்புமிகு இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர்களை தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து, தேச விடுதலைக்காக பாடுபட்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் ஐயா உ. முத்துராமலிங்கத் … Read more

BNCAP-ல் டாடாவின் அல்ட்ரோஸ் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களின் பாதுகாப்புத் தரத்தில் புதிய உச்சத்தை தொடர்ந்து பதிவு செய்து வரும் நிலையில், பாரத் கிராஷ் டெஸ்ட் (BNCAP) பாதுகாப்பு சோதனையில், டாடா அல்ட்ரோஸ் (Tata Altroz) கார் வயது வந்தோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு என இரண்டு பிரிவுகளிலும் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. Altroz பாதுகாப்பு மதிப்பெண்கள்: வயது வந்தோர் பாதுகாப்பு: 32-க்கு 29.65 புள்ளிகள். குழந்தைகள் பாதுகாப்பு: 49-க்கு 44.90 புள்ளிகள். விவரங்கள்: முன்பக்க மோதல் (Frontal … Read more