ரூ.1 கோடி பார்க்கிங் கட்டணம் செலுத்திய ஏர் இந்தியா விமானம் -காரணம் என்ன?

பராமரிப்புப் பணிக்காக கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 737-200 ரக விமானம், கவனக்குறைவால் அங்கேயே 13 ஆண்டுகள் கைவிடப்பட்டதால் தற்போது அதற்கு ரூ.1 கோடி பார்க்கிங் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக இந்த விமானம் தரையிறக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பராமரிப்புப் பணிகள் முடிந்ததா அல்லது கைவிடப்பட்டதா என்ற தகவல் இல்லாமல், விமான நிலையத்தின் ஒரு ஓரத்தில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்தது. காலப்போக்கில் இந்த விமானம் குறித்த தகவல்கள் ஏர் … Read more

மனைவியுடன் தகராறு: 2 குழந்தைகளை கொன்று வாலிபர் தற்கொலை

பிஜ்னோர், உத்தரப் பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மகன், மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முபாரக்பூர் குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுராம் (28 வயது). இவருக்கு தீபன்ஷு (5 வயது) என்ற மகனும், ஹர்ஷிகா (3 வயது) என்ற மகளும் இருந்தனர். பாபுராமுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த நிலையில் நேற்றும் … Read more

மேற்கு வங்கம்: பாபர் மசூதி கட்ட மம்தா கட்சி எம்.எம்.ஏ பூமி பூஜை; ராமர் கோயில் கட்ட பாஜக பூமி பூஜை

மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் எம்.எம்.ஏ. ஹிமாயூன் கபீர் முர்ஜிதாபாத்தில் பாபர் மசூதியை கட்டுவோம் என்று ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அவரை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். திட்டமிட்டபடி அயோத்தியில் பாபர் மசூதி இடப்பட்ட நாளில் பாபர் மசூதி கட்ட பூமி பூஜை செய்யப்படும் என்று கபீர் தெரிவித்து இருந்தார். மம்தா பானர்ஜி சொன்னபடி நேற்று முர்ஜிதாபாத்தில் உள்ள ராஜீவ் நகரில் அயோத்தியில் இருந்தது போன்ற … Read more

கோவா தீ விபத்தில் 23 பேர் பலி

வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பாகா பகுதி கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் குறைந்தது 23 பேர் பலியாயினர். பலியானவர்கள் அனைவரும் விடுதி ஊழியர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். விடுதியில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணி்களில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்து சமையல் அறை பகுதியில் நிகழ்ந்துள்ளது. சிலிண்டர் வெடிப்பு காரணமாக தீ … Read more

புதினின் இந்திய பயணத்தின்போது கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எரிபொருள் அனுப்பிய ரஷியா

புதுடெல்லி, ரஷிய அதிபர் புதின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார். டெல்லியில் நடைபெற்ற 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் கலந்து கொண்டனர். மேலும் இந்தியா-ரஷியா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தொடர்ந்து, 2 நாட்கள் அரசு பயணத்தை நிறைவு செய்த அதிபர் புதின் நேற்று இரவு ரஷியா புறப்பட்டு சென்றார். வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று அதிபர் புதினை வழி அனுப்பி … Read more

நாய்கள் பேய்களைப் பார்க்கிறதா? நள்ளிரவில் அவை குறைப்பதன் மர்மம் என்ன?

வீட்டில் வளர்க்கும் நாய்கள் சில நேரங்களில் யாரும் இல்லாத இடத்தைப் பார்த்து தொடர்ந்து குறைப்பதைப் பார்த்திருப்போம். “நாய்களுக்குப் பேய்கள் தெரியும், அவை அதனை உணரும்” என்று காலம் காலமாக வீட்டில் இருப்பவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையில் நாய்களால் ஆவிகளைப் பார்க்க முடியுமா? இதுகுறித்து ஆய்வாளர்கள் மற்றும் அறிவியல் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம். லண்டன் ரிப்பன் கல்லூரியின் பேராசிரியர் மார்க் ஈடன் இதுகுறித்து கூறுகையில், “சமீபத்தில் தந்தையை இழந்த ஒருவர், தன் நாய் தொடர்ந்து படிக்கட்டுகளைப் … Read more

5 வயது சிறுவனை தூக்கி சென்று கொன்ற சிறுத்தை – வால்பாறையில் சோகம்

கோவை மாவட்டத்தில் மனித–வனவிலங்கு மோதல் பிரச்னை நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. அதிலும் வால்பாறை மலைப் பகுதியில் யானை, புலி, காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வால்பாறை வால்பாறையில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. அங்கு வட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வனவிலங்கு பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுவது புலம்பெயர் தொழிலாளர்கள்தான். கடந்த சில ஆண்டுகளில் அந்த தொழிலாளர்களின் குழந்தைகளை சிறுத்தை தாக்கும் சம்பவம் தொடர்கதையாகி … Read more

செங்கோட்டையன் செல்லாக்காசு! ததக தலைவர் பழ.கருப்பையா விமர்சனம்…

 சென்னை: தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையன்கள் எல்லாம் செல்லாக்காசாகி விடுவார்கள்!”  என தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் (ததக) தலைவர் பழ.கருப்பையா  விமர்சனம் செய்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நடவடிக்கை தமிழக அரசியல் கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ள நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தேவையற்ற அரசியல் செய்து, மக்களிடையே மதவெறுப்பை  ஏற்படுத்தவும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என பல கட்சிகள் அரசியல் செயலாற்றி வருகின்றன. இதற்கிடையில், புதிதாக … Read more

48 கோயில்களின் வரவு-செலவு தணிக்கை முழு விவரங்களை இரு வாரங்களில் பதிவேற்ற வேண்டும்! அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகம் முழு​வதும்  அறநிலையத்துறையின் கீழ்  உள்ள 48 பெரிய கோயில்​களின்  முழு வரவு – செலவு தொடர்​பான தணிக்கை விவரங்​களை இரண்டு  வாரங்​களில் இணை​ய தளத்தில் பதிவேற்​றம் செய்​ய வேண்டும் என உயர்நீதிமன்றம் அமர்வு உத்தரவிட்டு உள்ளது. ஆலய வழிபடு​வோர் சங்​கத் தலை​வர் டி.ஆர்​.ரமேஷ் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் 2023-ல் தாக்​கல் செய்​திருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை வெளியிட்டு உள்ளது. இது திமுக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக மனுதாரர் … Read more