திருவாரூர்: கோயிலுக்குள் புகுந்த மழை நீர்; குளமாக மாறிய வயல்வெளி – விவசாயிகள் கவலை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் திருத்துறைப்பூண்டியில் 11 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியது. கோயிலுக்குள் மழை நீர் திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்றது. தொடர் மழையால் இக்கோயிலுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து, நகராட்சி சார்பில் கோயிலில் புகுந்த மழை நீரை … Read more

மத்திய அரசின் தொழிலாளர் சட்ட விதிகளுக்கு எதிராக நவம்பர் 26ம் தேதி நாடு தழுவிய போராட்டம்… புதிய தொழிலாளர் சட்ட விதிகளில் என்ன உள்ளன?

2020-ல் நிறைவேற்றப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்களை நவம்பர் 21-ஆம் தேதி முதல் அமல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவில், பழைய தொழிலாளர் சட்டங்களுக்கு பதிலாக தொழிலாளர் ஊதியச் சட்ட விதி 2019, தொழில்துறை தொடர்புகள் சட்ட விதி 2020, சமூகப் பாதுகாப்புச் சட்ட விதி 2020 மற்றும் தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்ட விதி 2020 ஆகிய நான்கு புதிய தொழிலாளர் சட்ட விதிகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்கள் … Read more

`US விசா கிடைக்காத விரக்தி' – உயிரை மாய்த்துக்கொண்ட மருத்துவர்; ஹைதராபாத்தில் சோகம்

ஆந்திரா மாநிலம் குன்டூரைச் சேர்ந்த 38 வயது மருத்துவர், அமெரிக்கா செல்வதற்கான விசா கிடைக்காததால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் விளைவாக, ஹைதராபாத்தில் உள்ள தனது அப்பார்ட்மெண்ட் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஹைதராபாத்தின் மற்றொரு பகுதியில் வசிக்கும் அவரது குடும்பத்தினர் கடந்த சனிக்கிழமை (நவ. 22) அவரது வீட்டின் கதவை உடைத்து பார்க்கும்போது அவர் பேச்சு மூச்சற்று இருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். Visa ரோஹிணி என்ற அந்த பெண்ணின் வீட்டுக் கதவு திறக்காததால் அவரது வீட்டுப் பணிப்பெண் அவரது குடும்பத்தினருக்கு … Read more

ரூ. 5000 கோடி செலுத்த முன்வந்ததால் தப்பியோடிய கோடீஸ்வரர்கள் நிதின்–சேதன் சந்தேசரா மீதான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல்

$1.6 பில்லியன் (ரூ. 14275 கோடி) வங்கி மோசடியில் தொடர்புடைய சகோதரர்களான நிதின் மற்றும் சேதன் சந்தேசரா, தங்களின் நிலுவைத் தொகையின் மூன்றில் ஒரு பங்கு $570 மில்லியன் (ரூ. 5085 கோடி) செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர். இதற்குப் பதிலாக, அவர்களுக்கு எதிரான அனைத்து குற்றவியல் வழக்குகளையும் ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதித்துள்ளது. அல்பேனியா பாஸ்போர்ட் மூலம் 2017ம் ஆண்டு இந்தியாவை விட்டு தப்பியோடிய சகோதரர்களான நிதின்–சேதன் சந்தேசரா ஆகியோர் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து … Read more

S.I.R : 'திமுகவின் மேஜையில் தேர்தல் ஆணையத்தின் BLOக்கள்!' – கடுமையாக சாடும் அதிமுக, நாதக

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பாக இன்று சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்திருந்தது. அதில், சென்னையில் S.I.R நடைமுறைப்படுத்தப்படும் விதம் பற்றி அதிமுக, பா.ஜ.கவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டத்தை முடித்துவிட்டு வெளியில் வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘இது காலங்கடந்த கூட்டம். இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்குவதில் தெளிவில்லை. தகவல்களை அப்லோட் செய்யும் சர்வர் சரியில்லை எனக் கூறியிருக்கிறோம். இறந்தோர் மற்றும் … Read more

96 % SIR படிவங்கள் விநியோகம் – 50% எஸ்ஐஆர் படிவங்கள் பூர்த்தி செய்தபின் திரும்பப் பெறப்பட்டன! அர்ச்சனா பட்நாயக்

சென்னை:  தமிழ்நாட்டில் இதுவரை 96 சதவீதம் அளவுக்கு SIR படிவங்கள் விநியோகம்  செய்யப்பட்டு உள்ளதாகவும்,  50% எஸ்ஐஆர் படிவங்கள் பூர்த்தி செய்தபின் திரும்பப் பெறப்பட்டன என கூறிய தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், நாட்டிலேயே அதிக அளவில் பிஎல்ஓக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டில்,  இதுவரை வழங்கப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களில் 50 சதவீதம் பூர்த்தி செய்தபின் திரும்பப் பெறப்பட்டன  என தெரிவித்துள்ள  தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக். தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகள்  தொடர்பாக  இந்திய … Read more

"அண்ணாமலை சொன்னது சரிதானா என்று 4 மாதத்தில் தெரிந்துவிடும்" – அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி, ஆற்றுக்குள் மீன் வளத்தைப் பேணி காக்கும் வகையில் மீன் குஞ்சுகளை ஆற்றுக்குள்ளே விட்டுவருகிறோம். இயற்கை வளத்தைப் பாதுகாத்து வளப்படுத்துவதற்கான பணிகளில் எங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளோம். நெட் தேர்வில், ஆசிரியர்களின் முதன்மை பாடத்திலிருந்துதான் கேள்விகள் கேட்க வேண்டும் என்பது குறித்து, ஆசிரியர் சங்கத்தைச் சார்ந்தவர்களுடன் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தினோம். பலரும் பல்வேறு விதமான கருத்துக்களைக் கூறியுள்ளனர். கூட்டத்திற்குப் பின் அவர்களின் கருத்துக்களை முதல்வரிடம் … Read more

நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த மறுத்த மத்தியஅரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம்…

சென்னை: நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த மறுத்த மத்தியஅரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர். நெல் கொள்முதல் ஈரப்பத அளவை மத்திய அரசு அதிகரிக்காததைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் திருவாரூரில் இன்று (நவ. 24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதன்பேரில் ஒன்றிய அரசு அதிகாரிகள் … Read more

BB Tamil 9: "எதெல்லாம் சொல்லிட்டு போனயோ அதெல்லாம் நீ செய்யவே இல்ல"- பிரஜினிடம் பேசிய ஆரி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேறினார். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் புரொமோவில் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருக்கிறார். நடிகர் ஆர்யன் – கம்ருதீன் அந்தவகையில் “அடுத்த 50 நாளுக்கான வைப் ( Vibe) இந்த வீட்டுல உச்சத்துல … Read more

உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் சூர்யா காந்த்….

டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி  சூர்யா காந்த்  பதவி ஏற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  முன்னதாக அவர் இந்திய தலைமை நீதிபதியாக அக்டோபர் 30-ம் தேதி நியமிக்கப்பட்டார். முன்னதாக, இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர். காவாய்  நவம்பர் 23 அன்று ஓய்வுபெற்ற நிலையில், நாட்டின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த்  இன்று பதவி ஏற்றார். இவர் சுமார்  … Read more