ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகர் போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு விபத்து; 9 பேர் பலி – என்ன நடந்தது?

ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் போலீஸ் நிலையத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது பிடிபட்ட வெடிகுண்டுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த வெடிகுண்டுகளை போலீஸாரும், தடயவியல் நிபுணர்களும், தாசில்தாரும் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது திடீரென வெடித்துச் சிதறியது. இந்த வெடிவிபத்தில் சிக்கி போலீஸார் மற்றும் தடயவியல் அதிகாரிகள் என 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் போலீஸ் நிலைய கட்டிடம் முற்றிலும் சேதமடைந்தது. இதில் தாசில்தாரும் உயிரிழந்தார். வெடிவிபத்து சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், தீயணைப்பு துறையினர் … Read more

202 தொகுதிகளில் வெற்றி: பீகாரில் ஆட்சியை தக்க வைத்தது என்டிஏ கூட்டணி!

பாட்னா: பீகாரில் என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது.  வரலாறு காணாத அளவில் 202 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணியான மகாபந்தன் கூட்டணி தோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக பீகார் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது. 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ந்தேதி நடைபெற்றது. இதில்   பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட ஐந்து கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி, 202 தொகுதிகளில் வெற்றி … Read more

திருச்செந்தூர்: உண்டியலில் முருக பக்தர் செலுத்திய `வெள்ளிக்காசு மாலை' – சிறப்பு என்ன?

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா, கடந்த மாதம் 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 27-ம் தேதி சூரசம்ஹாரமும், 28-ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற்று முடிந்தன. இந்த விழாவில், உள்நாடு மட்டுமின்றி குறிப்பாக, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நூற்றுக்கணக்கான வெளிநாட்டு பக்தர்கள், என சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், கலந்து கொண்டனர். வெள்ளிக்காசு மாலை திருக்கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயிலில் அவர்களின் வேண்டுதல்கள் … Read more

பீகார் வாக்கு எண்ணிக்கை 12மணி நிலவரப்படி, என்டிஏ கூட்டணி 193 தொகுதிகளில் முன்னிலை

பாட்னா:  பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு, இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  மதியம்  12மணி நிலவரப்படி,  பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் என்.டி.ஏ கூட்டணி 193 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமகா என்டிஏ கூட்டணி ஆட்சி தக்க வைக்கும் என  நம்பப்படுகிறது. மகாகத்பந்தன் 46 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.  காங்கிரஸ் கட்சி வெறும் 6 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளது. இது ராகுல்காந்திக்கு … Read more

பீகார் தேர்தலில் பாஜக மோசடி செய்துள்ளது – அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

லக்னோ, பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. மாலை 5.30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது. இந்நிலையில் பீகார் தேர்தலில் பாஜக மோசடி செய்துள்ளதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். … Read more

புதுப்பிக்கப்பட்ட பெரியார் நகர் நூலகம், முதல்வர் படிப்பகம், பெரியமேட்டில் சார் பதிவாளர் கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நகர் நூலகம், முதல்வர் படிப்பகம் மற்றும்  , பெரியமேட்டில் சார் பதிவாளர் கட்டிடங்களை திறந்து வைத்தார் . சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.5.24 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நகர் நூலகம் மற்றும் முதல்வர் படைப்பகத்தை திறந்து தார். தொடர்ந்து பெரியமேட்டில்,  ரூ. 3.86 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சார்-பதிவாளர் அலுவலகத்திற்கான புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் … Read more

மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன் – நிதிஷ்குமார்

பாட்னா, பீகார் தேர்தலில் பாஜக நிதிஷ்குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி, தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பில் கூறியதை விட, அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து உள்ளது. இந்த தேர்தல் முடிவை தான் இப்போது மொத்த நாடும் உற்று பார்த்துக்கொண்டு இருக்கிறது. இந்த முறை பாஜக, என்.டி.ஏ உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி, இமாலய வெற்றியை பெறுகிறது. மொத்த முள்ள 243 தொகுதிகளில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில், … Read more

Bihar Results: 243-க்கு கட்சிகள் எடுத்த மார்க் எவ்வளவு? 2020-க்கும் 2025-க்கும் எவ்வளவு வித்தியாசம்!

பீகாரில் இன்று காலை முதல் நடைபெற்று வந்த வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தின் தரவுகளின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களுடன் மாபெரும் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்திருக்கிறது. மகாபந்தன் கூட்டணி 35 இடங்களில் வென்றிருக்கின்றன. மற்ற கட்சிகள் மொத்தமாக 6 இடங்களில் வென்றிருக்கின்றன. நிதிஷ் குமார் (JDU), மோடி (BJP) கட்சி வாரியாக அதிக இடங்கள் வென்ற கட்சிகள்: தேசிய ஜனநாயகக் கூட்டணி (202): * பாஜக – 101 இடங்களில் … Read more

நேரு பிறந்தநாள்: டெல்லி நினைவிடத்தில் சோனியா காந்தி, கார்கே மலர்தூவி மரியாதை

டெல்லி: இந்தியாவின் முதல் பிரதமரான மறைந்த ஜவஹர்லால் நேரு பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில்  காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி மலர்தூவி மரியாதை  செய்தார். தொடர்ந்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் நேருவின் நினைவிடத்தில் மரியாதை செய்தார். இந்தியாவின் முதல் பிரதமர்  மறைந்த ஜவகர்லால் நேருவின் 136வரது  பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில்  டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு முக்கிய தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில்,  , … Read more