அரியானா: கடும் பனிமூட்டத்தால் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் – 4 பேர் பலி

சண்டிகர், டெல்லி, மராட்டியம், அரியானா, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, காலை நேரங்களிலும், மாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவதியடைந்துள்ளனர். பனிமூட்டத்தால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரியானாவில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் பயங்கர சாலைவிபத்து ஏற்பட்டது. கடும் பனிமூட்டம், வெளிச்சமின்மையால் அரியானாவின் நூ மாவட்டத்தில் உள்ள … Read more

பயங்கரவாத தாக்குதல்: ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

டெல்லி, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் சிட்னி நகரில் போண்டி கடற்கரை பகுதியில் நேற்று யூத மதத்தின் ஹனுக்கா பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான யூதர்கள் பங்கேற்றனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகளான சஜீத் அக்தர் மற்றும் அவரது மகன் நவீத் அக்தர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் … Read more

ரஜினி கண்டிப்பா "பூமர்" இல்லை! – 90's கிட்ஸ்-இன் நீங்காத நினைவுகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த திரைப்படம் சந்திரமுகி. அக்காலத்தில் அனைத்து சிறுவர்களுக்கும் இத்திரைப்படம் நீங்காத நினைவுகள் கொடுத்திருக்கிறது. அப்படத்தில் வெளியான “தேவுடா.. தேவுடா..” பாடல் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் வரவேற்பு பெற்றது. தினமும் தொலைக்காட்சி பெட்டியில் இப்பாட்டை பார்த்து ரசித்திருப்போம்‌. 90 களில்‌ பிறந்தவர்களின் … Read more

மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் இல்லை! நீதிமன்றத்தில் அறநிலையத்துறை வாதம்

மதுரை: மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் இல்லை, இதுபோன்ற  தூண் சமண மலையிலும் உள்ளது என்றும்   நீதிமன்றத்தில் அறநிலையத்துறை வாதம் செய்தது. திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்த, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (டிசம்பர் 15) 2வது நாளாக நடந்து வருகிறது. மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை மாவட்டம், … Read more

வரதட்சணையாக ரூ. 20 லட்சம் கேட்ட மணமகன்; கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஜோதி. இவருக்கும் தொழில் அதிபரான ரிஷப் என்ற இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வரதட்சணையாக மணமகள் குடும்பத்தினர் திருமண நிச்சயதார்த்தத்தின்போது ஏற்கனவே தங்க நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கம் கொடுத்துள்ளனர். இந்நிலையில், ஜோதி, ரிஷப் திருமணம் நேற்று முன் தினம் நடைபெற இருந்தது. திருமணம் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கூடுதல் வரதட்சணை தந்தால் தான் திருமணம் நடக்கும் என்று மணமகனும் அவரது குடும்பத்தினரும் கூறியுள்ளனர். அதன்படி, கூடுதலாக … Read more

F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: சாம்பியன் பட்டத்தை வென்ற கென்ய வீரர் ஷேன் சந்தாரியா | Photo Album

F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025 Source link

சென்னை வரை பரவிய காற்று மாசு… சிக்கலை சமாளிக்க GRAP தரச் செயல் திட்டம் அமலாகுமா ?

டெல்லியில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் காற்று மாசு மீண்டும் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலம் தொடங்கி குளிர்காலம் வரும்போது, டெல்லியின் காற்று மாசு தேசிய அளவில் விவாதமாக மாறுகிறது. காற்று மாசால் அதிகம் பாதிக்கப்படும் நகரமாக டெல்லி உள்ளபோதும் அதிகம் பேசப்படாத தெற்கு மற்றும் மேற்கு இந்திய நகரங்களிலும் சமீப காலமாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்தியாவின் நிதி தலைநகரான மும்பையில் காற்று மாசு அதிகரித்தது நாடு முழுவதும் … Read more

சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2,000 கோடி கடன்!

சென்னை: சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2 ஆயிரம் கோடி கடன்  ( $240 Million Loan )வழங்கி உள்ளது. சென்னையில் அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக அல்லல்பட்டு வந்த மக்களிடையே  மெட்ரோ ரயில் சேவை பெரும், வரவேற்பை  பெற்றுள்ளது. இதன் காரணமாக மெட்ரோ ரயில் சேவை புறநகர்  பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.  சென்​னை​யில்  ஏற்கனவே முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவையை தொடர்ந்து, தற்போது 2ம் … Read more