மாநிலங்களின் மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு முதலிடம்! அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

சென்னை: மாநிலங்களின் மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தொழிற்துறை  அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறியுள்ளார். 2024 – 25 ஆம் ஆண்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. 2023 – 24-இல் உள்நாட்டு உற்பத்தி ரூ.26.89 லட்சம் கோடியில் இருந்து 2024 – 25-இல் ரூ.31.19 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.  இது பிரமாண்டமான வளர்ச்சி, வளர்ச்சி விகிதம்  16% அளவுக்கு  உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களால் இந்த வளர்ச்சி … Read more

பல தலைமுறைகளைக் கவர்ந்த நடிப்பாற்றல்: ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

புதுடெல்லி, பஸ் கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கி தற்போது தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளவர் ரஜினிகாந்த். இவரின் உண்மையான பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் அறிமுகமானார். இவரை பாராட்டும் விதமாக மத்திய அரசு 2000-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும், 2016-ம் ஆண்டு பத்ம விபூஷண் விருதையும் வழங்கி சிறப்பித்தது. மேலும் சினிமா துறையில் இவரின் பங்களிப்பை பாராட்டும் விதமாக 2019-ம் ஆண்டு … Read more

StartUp சாகசம் 50 : `இதுவரை ரூ.43,000 கோடிக்கு மேல் பரிவர்த்தனை’ – தமிழக ஸ்டார்ட்அப் `BulkPe’ கதை

StartUp சாகசம் 50 வங்கி என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது பெரிய கட்டிடங்கள், நீண்ட வரிசைகள், டோக்கன் எண்கள் மற்றும் ஏராளமான காகிதப் படிவங்கள். ஆனால், இந்தக் கட்டமைப்பையே முற்றிலுமாக மாற்றியமைப்பதுதான் ‘நியோபேங்க்’ (Neobank). இதனை எளிமையாகச் சொன்னால் “கட்டிடங்களே இல்லாத வங்கி” (Bank without branches) எனலாம். கணக்குத் தொடங்குவது முதல், பணம் அனுப்புவது, கடன் பெறுவது, முதலீடு செய்வது வரை அனைத்தும் ஒரு மொபைல் செயலி (App) மூலமாகவே நடக்கும். பாரம்பரிய வங்கிகள் … Read more

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: இடையீட்டு மனுக்கள் தாக்கல் அனுமதி மறுத்த நீதிபதிகள்…

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக  அரசு மற்றும் மனுதாரர் தரப்பில்  இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அமர்வு  அனுமதி மறுத்து விட்டது. பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்றால் அமைதியாக இருங்கள் என்று கூறியது. திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1ம் தேதி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இத்த உத்தரவு மதிக்கப்படாத நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை செய்த நீதிபதி, அடுத்த விசாரணைக்கு   டிஜிபி, மாவட்ட … Read more

முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பாட்டீல் காலமானார்

புனே, முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பாட்டீல் (வயது 91) இன்று காலமானார். மராட்டியத்தின் லத்தூர் நகரில் உள்ள அவருடைய வீட்டில் இருந்தபோது, வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவால் அவர் காலமானார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அவர், மத்திய உள்துறை மந்திரியாக பதவி வகித்ததுடன், இந்திய அரசியலில் பிரபல நபராகவும் இருந்துள்ளார். நீண்டகாலம் பொதுமக்களுக்கு சேவையாற்றியதற்காக அவர் நினைவுகூரப்படுவார். அவருடைய மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து … Read more

”குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: 2027-ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும்”-இஸ்ரோ தலைவர் நாராயணன்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இஸ்ரோ தலைவர் நாராயணன் வருகை புரிந்தார். அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ ககன்யான் திட்டம் என்பது நாம் தயாரிக்கும் ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பி, அவர்களை பத்திரமாக திரும்பக் கொண்டு வரும் திட்டம் ஆகும். இந்த திட்டத்திற்காக ராக்கெட் தயாரிப்பு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. கட்டுமானப் பணிகள் விண்வெளியில் வீரர்களுக்கு … Read more

தீபத்தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை! திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழ்நாடு அரசு வாதம்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை  என்றும், மலையில் தீபம் ஏற்றுவது என்பது கோவில் நிர்வாகம்தான் முடிவு செய்ய  வேண்டும் என்று  நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம் வைத்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை ரத்து செய்யக்கோரி மேல்முறையீடு செய்துள்ள நிலையில், கோவில் நிர்வாகம், ஆட்சியரின் மேல்முறையீட்டு மனுவை இன்று இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது.  இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது, ஆஜரான … Read more

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கில் அடுத்த மாதம் இறுதி விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

புதுடெல்லி, கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி போட்டியிட்டார். இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி சைதை துரைசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகைக்கு அதிகமாக மு.க.ஸ்டாலின் செலவு செய்ததுடன், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி இருந்தார். … Read more

நிசானின் அடுத்த அதிரடி! புதிய 7-சீட்டர் கார் டிசம்பர் 18-ல் அறிமுகம் | Automobile Tamilan

இந்தியாவில் நிசான் நிறுவனம் 2026 ஆம் ஆண்டில் மொத்தமாக 3 கார்களை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், முதல் மாடலாக டெக்டான் , இரண்டாவது மாடல் 7 இருக்கை கொண்ட B-MPV ஆகவும், இறுதியாக 7 இருக்கை டெக்டான் ஆகியவை சந்தைக்கு வரவுள்ளது. தனது புதிய காம்பாக்ட் எம்பிவி காரை வரும் டிசம்பர் 18, 2025 அன்று உலகளாவிய அளவில் அறிமுகப்படுத்தவுள்ளது. ஏற்கனவே, சந்தையில் அமோக வரவேற்பினை பெற்று இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மேக்னைட் … Read more

'கள்ள ஓட்டில் வென்றவர்கள் எஸ்.ஐ.ஆரை எதிர்க்கிறார்கள்' – வானதி சீனிவாசன்

கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சட்டமன்றத் தேர்தலுக்காக மகளிரணியை தயார்ப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பாஜக மகளிரணி மாநில மாநாடு திருச்சியில் நடைபெறவுள்ளது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வானதி சீனிவாசன் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. திராவிட மாடல் பெண்களுக்கு துரோகம் செய்யும் அரசாக உள்ளது. இதனை வீடு வீடாக எடுத்து செல்லும் பணியை செய்வோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை,  அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு … Read more