எஸ்ஐஆர்: வாக்காளர்கள் வசதிக்காக இன்றுமுதல் 8 நாட்களுக்கு வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் உதவி மையங்கள்….

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் (வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் ) பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,  தமிழ்நாடு முழுவதும்  இன்றுமுதல் 8 நாட்களுக்கு வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில்  947 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள்   இன்று (நவ.18) முதல் செயல்படும் என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.  இது  நவ.25ம் தேதி … Read more

அடுத்தடுத்து வரவிருக்கும் XEV 9s, eVitara, Sierra.EV என மூன்று எலக்ட்ரிக் எஸ்யூவிகள்.! | Automobile Tamilan

இந்திய சந்தையில் எலக்ட்ரிக் பயணிகள் வாகனங்கள் விற்பனை கனிசமாக உயர்ந்து வரும் நிலையில் நாட்டின் முதன்மையான மாருதி சுசூகியின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி உட்பட மஹிந்திராவின் மூன்றாவது BE வரிசையின் XEV 9s மற்றும் பிரபலமான ஐகானிக் சியரா மாடலை தழுவிய சியரா.EV என மூன்று விரைவில் சந்தைக்கு வரவுள்ளது. நவம்பர் 27 மஹிந்திரா XEV 9s ஏற்கனவே மஹிந்திரா காட்சிப்படுத்தி XUV.e8 கான்செப்ட் ஆனது சந்தையில் உள்ள XUV700 எஸ்யூவி அடிப்படையிலான மாடல் தற்பொழுது XEV … Read more

தாய் தந்தையை இழந்து வாடும் 4 குழந்தைகள்: `இனி அவர்கள் அரசின் குழந்தைகள்!' – முதல்வர் ஸ்டாலின் பதிவு

கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே நான்கு குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து தவித்து வந்தனர். அவர்களின் தாய் 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். சமீபத்தில் அவர்களது தந்தையும் கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில், அந்த 4 குழந்தைகளும் வாழ்வாதாரத்திற்காக அரசின் உதவியை நாடியுள்ளனர். இதையடுத்து அந்தக் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். ஸ்டாலின் வெளியூரில் வேலை; SIR படிவம் வீட்டிற்கு வந்துவிட்டது! என்னுடைய கையெழுத்து தேவையா? | Q&A … Read more

தோப்புக்கரணம் மரணம் வரை கொண்டு செல்லுமா? – மும்பை மாணவி மரணம் குறித்து மருத்துவர் விளக்கம்

மும்பையைச் சேர்ந்த 12 வயது மாணவி, பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக சென்றதால், தன்னுடைய உயிரையே இழந்திருக்கிறார். தாமதமாக வந்ததற்கு தண்டனையாக, வகுப்பு ஆசிரியை, அம்மாணவியை 100 முறை சிட் அப் செய்யும்படி தண்டனை கொடுத்திருக்கிறார். அதுவும், முதுகில் மாட்டியிருந்த புத்தக சுமையைக் கூட கீழே வைக்க விடாமல் அதோடு சிட் அப் செய்யும்படி சொல்லியிருக்கிறார். வேறு வழியில்லாத அந்தக் குழந்தையும் 100 சிட் அப் எடுத்திருக்கிறாள். மாலை வீட்டுக்குத் திரும்பியதும் கடுமையான முதுகுவலி இருப்பதாக அம்மாவிடம் … Read more

ஷேக் ஹசீனாவுக்கு எதிரான தீர்ப்பு பற்றி இந்தியா கருத்து

புதுடெல்லி, சொந்த நாட்டு மக்களை கொன்று குவித்தாத கூறப்பட்ட குற்றச்சாட்டில், வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்துள்ளது. மரண தண்டனைக்கு ஷேக் ஹசீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வங்காளதேசத்தில் பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் போட்டியிட ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு 3 மாதங்களே இருக்கும்நிலையில், இந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை … Read more

டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் – அமித்ஷா

புதுடெல்லி, டெல்லியின் முக்கிய பகுதியான செங்கோட்டை அருகே கடந்த 10-ந் தேதி இரவு கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 14 பேர் பலியானார்கள். இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என கண்டறியப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியது டாக்டர் உமர் முகமது என்ற பயங்கரவாதி என கண்டறியப்பட்டது. உமர் உடல் சிதறி இறந்தது டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. … Read more

தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பில் இருந்து நடிகை நீது சந்திரா நீக்கம்

பாட்னா, தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நடிகை நீது சந்திரா, பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர். மாநிலத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்த நிலையில், வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தேர்தல் கமிஷனின் தூதராக அவர் நியமிக்கப்பட்டு இருந்தார். தேர்தல் கமிஷனின் தூதராக நியமிக்கப்பட்டவர், கட்சி சார்பின்றி விழிப்புணர்வு பணிகளை ஏற்படுத்த வேண்டும். ஆனால் நீது சந்திரா அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து நடிகை நீது சந்திராவை அந்த பொறுப்பில் … Read more

பிரதமர் மோடி வருகை எதிரொலி: கோவையில் வரும் 19ந்தேதி 12 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து மாற்றம்

கோவை: பிரதமர் மோடி கோவை  வருகை எதிரொலியாக  வரும் 19ந்தேதி பகல்  12 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.‘ கோவை கொடிசியாவில், விவசாயிகள் சங்கங்களால்   நடத்தப்படும் 25வது தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சி மாநாட்டில்  கலந்துகொள்ள பிரதமர் மோடி கே 19ந்தேதி கோவை வருகிறார்.  இதையொட்டி,   நாளை மறுநாள் பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். … Read more

நாட்டை உலுக்கிய டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – அரியானாவில் அதிகாரிகள் அதிரடி சோதனை

சண்டிகர், டெல்லியில் கடந்த 10-ந் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு பயங்கரவாத சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் படுகாயம் அடைந்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு அதனை விசாரணைக்கு எடுத்தது. விசாரணை மிகத்தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். … Read more

நாளை முதல் எஸ்ஐஆர் பணிகளை புறக்கணிக்கப்போவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கம் அறிவிப்பு…

சென்னை:  தமிழ்நாட்டில் நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை புறக்கணிக்க வருவாத்துறை சங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் தீவிர பட்டியல் சீர்திருத்தம் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநிலங்கள் எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை புறக்கணிக்க வருவாத்துறை சங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி,  நாளை (நவம்பர் … Read more