நெல்லை: கனமழையுடன் வீசிய சூறைக்காற்று; முறிந்து விழுந்த 2 லட்சம் வாழைகள் – கண்ணீரில் விவசாயிகள்!
நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சேரன்மகாதேவி தாலுகாவிற்குட்பட்ட மேலச்செவல், சொக்கலிங்கபுரம், பிராஞ்சேரி, கோபாலசமுத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பல்வேறு ரக வாழைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த வாழைகள் அனைத்தும் குலை தள்ளிய நிலையில் இன்னும் ஓரு மாதத்தில் அறுவடைக்கு வரும் நிலையில் உள்ளன. சேதமடைந்த வாழையை ஆய்வு செய்த அதிகாரிகள் அறுவடை நிலையில் உள்ளதால் … Read more