`தாக்கரே குடும்பத்தால் மட்டுமே முடியும்!'-மாநகராட்சி தேர்தலில் கூட்டணியை அறிவித்த தாக்கரே சகோதரர்கள்
மும்பை மாநகராட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் ஏற்கெனவே முடிவு செய்துள்ளன. இதற்காக இரு கட்சிகளும் தொகுதிப் பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இப்பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், காங்கிரஸ் கட்சியையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள உத்தவ் தாக்கரே விரும்பினார். ஆனால் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் `நாங்கள் மாநகராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்’ என்று திட்டவட்டமாக அறிவித்தனர். இதையடுத்து தாக்கரே சகோதரர்கள் … Read more