நடப்பாண்டு இதுவரை 5.25 லட்சம் பேர்: தமிழ்நாட்டில் நாய் கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடும் உயர்வு…

சென்னை: தமிழ்நாட்டில் நாய் கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே அதிர்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 5.25 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு இருப்பதாக  புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு நாய் கடி சம்பவங்கள் 5.25 லட்சமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை  சுமார் 4.8 லட்சம்‘ பேர் அதிகம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகிஉள்ளது.  . நாய்கடி சம்பவங்கள் அதிகரித்தாலும், … Read more

Suresh Gopi: "அரசியல் என்னுடைய சினிமா கரியரை பாதித்தது!" – சுரேஷ் கோபி

மலையாள சினிமாவில் பல ஹிட் படங்களை அடுக்கியவர் நடிகர் சுரேஷ் கோபி. அரசியலுக்கு வந்த பிறகு அவர் நடித்த படங்கள் எவையும் திரையரங்குகளில் பெரிதளவில் சோபிக்கவில்லை. இது குறித்து அவரும் சமீபத்தில் மனோரமா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் “அரசியல் என்னுடைய சினிமா கரியருக்கு முட்டுக்கட்டையாக வந்தமைந்தது” எனக் கூறியிருக்கிறார். சுரேஷ் கோபி அந்தப் பேட்டியில் அவர், “1998-ல் ‘களியாட்டம்’ படத்துக்காக தேசிய விருது வாங்கிய அந்தத் தருணத்தையும், பிறகு 2000-ல் ‘ஜலமர்மரம்’ படத்துக்காக தயாரிப்பாளருக்கான தேசிய விருது … Read more

ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்! பிரதமர் மோடியை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்  என பிரதமர் மோடியை  முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி கோவையில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை மாநாட்டில் கலந்துகொண்டு,  விவசாயிகளிடம் கலந்துரையாடிவிட்டு சென்ற நிலையில், கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய முடியாத ஏற்பட்டுள்ளதாக மத்தியஅரசு கூறி உள்ளது. இதை சுட்டிக்காட்டிய, முதல்வர் ஸ்டாலின்,  மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. அதற்குள்  விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை மத்தியஅரசு செய்துள்ளது என விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் … Read more

Mask: "காலேஜ் வேலைகளை முடிச்சிட்டு படம் பார்க்க வாங்க!" – கல்விக்கு முக்கியத்துவம் அளித்த கவின்

கவின், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருக்கும் ‘மாஸ்க்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். Mask Movie திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கவின் டூர் சென்று வந்தார். மதுரை பாத்திமா கல்லூரியில் அவர் கல்விக்கு முக்கியத்துவம் அளித்துப் பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுரையில் கவின் பேசுகையில், “நாளைக்கு ‘மாஸ்க்’ திரைப்படம் ரிலீஸ் ஆகுது. வெள்ளிக்கிழமை எல்லோருக்கும் காலேஜ் இருக்கும். சமத்தாக, நாளைக்கு காலேஜுக்கு … Read more

காலக்கெடு விதிக்க முடியாது, ஆனால், மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரமில்லை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: மசோதாவுக்கு குடியரசு தலைவர், கவர்னர் அனுமதி வழங்குவது தொடர்பாக  காலக்கெடு விதிக்க முடியாது என கூறியுள்ள உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அதேவேளையில், மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரமில்லை என்றும், அதை மீறினால் நீதிமன்றம் தலையிடும் என்றும் கூறி உள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்புடைய வழக்கில், உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு  இன்று … Read more

"திமுக தொழில்த்துறை முதலீடுகளில் ஊழல் பொய்" – பாமக அன்புமணி அடுக்கும் குற்றச்சாட்டுகள்

திமுக தலைமையிலான தமிழக அரசு, தொழில்துறை முதலீடுகளில் தொடர்ந்து ஊழலும், பொய்யான அறிவிப்புகளை அறிவித்து வருவதாக பாட்டளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். ‘திமுக’வின் தொழில்நுறை அமைச்சர் டி.ஆர். பி. ராஜா, இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார். இந்நிலையில் அன்புமணி ராமதாஸ், “திமுக கட்டமைத்த பொய் கோட்டைகளை தொழில் அமைச்சரே தகர்த்திருப்பதுதான் பா.ம.க.வின் வெற்றி” என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அன்புமணி குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்ட அமைச்சர், இது பாமகவின் … Read more

32 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத்தில் புகலிடம் தேடிய புலி

குஜராத் மாநிலத்தின் தாஹோத் மாவட்டத்தில் உள்ள ரத்தன் மஹால் வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு ஆண் புலி வசித்து வருவதை வன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆசிய சிங்கத்தின் கடைசி வசிப்பிடமாக அறியப்படும் குஜராத், இப்போது சிங்கம், சிறுத்தை மற்றும் புலி ஆகிய மூன்று முக்கிய இனங்களையும் கொண்ட இந்திய மாநிலங்களின் அரிய பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 32 ஆண்டுகளில் முதல் முறையாக, வங்கப் புலி ஒன்று மாநிலத்தில் நிரந்தர வசிப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குஜராத்தின் சுற்றுச்சூழல் அமைப்புகள் மீண்டும் வனவிலங்கு … Read more

டீசல் மூன்று சக்கர அபே சரக்கு ஆட்டோவை வெளியிட்ட பியாஜியோ – Automobile Tamilan

இந்திய சந்தையில் பியாஜியோ நிறுவனம் அபே மினி மூன்று சக்கர சரக்கு ஆட்டோ வரிசையில் Apé Xtra Bada 700 மற்றும் Apé Xtra 600 என இரு டீசல் கார்கோ மாடல்களை முறையே ரூ.3.45 லட்சம் மற்றும் ரூ.2.88 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிட்டுள்ளது. Piaggio Apé Xtra Bada 700 & Xtra 600 குறிப்பாக 4 சக்கர சரக்கு டிரக்குகளுக்கு மாற்றாக பட்ஜெட் விலையில் 750 கிலோ சுமை எடுத்துச் செல்லும் திறனுடன் … Read more

ஆந்திரா: பருவமடைந்ததால் மகளை வீட்டில் பூட்டி வைத்த தாய்; 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு;என்ன நடந்தது?

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலுள்ள இச்சாபுரம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமி. இவர் தனது மகளுடன் மூத்த சகோதரன் வீட்டில் தங்கி இருந்தார். இவரது மகள் கடந்த 2022ம் ஆண்டு பருவம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து லட்சுமி தனது மகளை வீட்டை விட்டு வெளியில் அனுப்பாமல் வீட்டிற்குள் அடைத்து வைத்தார். பள்ளிக்கும் அனுப்பவில்லை. வெளியேயும் எங்கும் அனுப்பவில்லை. நீண்ட நாட்களாக அச்சிறுமி வீட்டை விட்டு வெளியில் வராமல் இருப்பதை அறிந்த கிராம மக்கள் இது குறித்து … Read more

‘வாக்குத் திருட்டு’ என கூறுவது ராகுல்காந்தியின் இயலாமையின் வெளிப்பாடு! முன்னாள் நீதிபதிகள், உயர்அதிகாரிகள் கண்டனம்

டெல்லி:  ‘வாக்குத் திருட்டு’ என இந்திய தேர்தல் ஆணையத்தை கூறுவது ராகுல்காந்தியின் இயலாமையின் வெளிப்பாடு என்று முன்னாள் நீதிபதிகள், உயர்அதிகாரிகள் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர். எஸ்ஐஆர் தொடர்பான விமர்சனப் பகுப்பாய்வுக்குப் பதிலாக நாடகத்தன்மை வந்துள்ளது. பொதுச் சேவைக்கு பதிலாக பொது விவாதம் இடம்பிடித்துள்ளது என்று கூறியிருப்பதடன்,  நமது நாட்டின்  ஆயுதப்படைகள், நீதித்துறை மற்றும் நாடாளுமன்ற நிறுவனங்கள் மீது வைத்த விமர்சனங்களை கடுமையாக கண்டித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல் காந்தியின் தாக்குதல்கள் குறித்து முன்னாள் … Read more