"அன்புமணிக்கும், பாமக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உறுதியாகிவிட்டது" – எம்.எல்.ஏ அருள்

சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, “ஒரு சில பொறுப்பாளர்கள் கட்சியை திருட பொய்யான தகவல்களை தயாரித்து வந்துள்ளனர். பாமகவின் தலைவர் அன்புமணி இல்லை. பாமகவிற்கும் அன்புமணிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ராமதாஸின் மகன் என்பதை தவிர அன்புமணிக்கும் பாமகவுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. விரைவில் மாம்பழம் சின்னம் எங்களுக்கு கிடைக்கும். வரும் தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் … Read more

தேசிய நீர் விருதுகளை முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர் மாவட்ட ஆட்சியர்கள்!

சென்னை: தேசிய நீர் விருதுகளை   பெற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள், முதல்வர் ஸ்டாலினிடம் விருதுகளை  காண்பித்து வாழ்த்து பெற்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (8.12.2025) தலைமைச் செயலகத்தில், ஒன்றிய அரசின் தேசிய நீர் விருதுகள், நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள் ஆகிய விருதுகளை பெற்ற திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மு. பிரதாப், இ.ஆ.ப., கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இ.ஆ.ப., நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி, இ.ஆ.ப., … Read more

இன்றைய முக்கிய செய்திகள்… சில வரிகளில்… 08-12-2025

Live Updates 2025-12-08 04:01:10 8 Dec 2025 4:14 PM IST அமலாக்கத்துறை அலுவலகத்தில் வாரம் இருமுறை ஆஜராக செந்தில்பாலாஜிக்கு விதித்த ஜாமின் நிபந்தனையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் போது மட்டும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி ஆஜராக உத்தரவிடலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்த்ரவிட்டுள்ளது. 8 Dec 2025 4:09 PM IST பிரத்திகா ராவலுக்கு ரூ.1.5 கோடி பரிசுத் தொகை வழங்கிய டெல்லி முதல்-மந்திரி மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் … Read more

நிலநடுக்கத்தின்போது உயிரை காப்பாற்றிய ராணுவ வீரரையே திருமணம் செய்துகொள்ளும் பெண் – அடடே லவ் ஸ்டோரி

சீனாவில் ஏற்பட்ட கோர நிலநடுக்கத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு பெண் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உயிரை காப்பாற்றிய ராணுவ வீரரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். 2008ஆம் ஆண்டு சீனாவின் வென்சுவான் மாகாணத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அப்போது 22 வயதான லியோங் என்பவர் அவசர மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தார். சம்பவம் நடந்த இடத்தில் பத்து வயதான லியூ என்ற பெண் இடிந்து விழுந்த கட்டடத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார். லியோங் மற்றும் அவரது மீட்பு குழுவினர்கள் … Read more

எஸ்ஐஆர் குறித்து விவாதம்: மக்களவையில் நாளை தொடங்கி வைக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி

டெல்லி: மக்களவையில் நாளை எஸ்ஐஆர் குறித்து விவாதம் நடைபெற உள்ளது. இந்த விவாதத்தை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் எஸ்ஐஆர் நடவடிக்கைகளை  எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருவதுடன், அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என  நாடாளுமன்றத்தை வலியுறுத்தி வருகின்றனர். அதைததொடர்ந்து,  எஸ்ஐஆர் குறித்து  நாளை (டிசம்பர் 9ந்தேதி)  விவாதிக்கப்படும் என சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி அளித்தார். அதன்படி நாளை மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் … Read more

நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 5.28 லட்சம் போக்சோ வழக்குகள் பதிவு

புதுடெல்லி, பாலியல் குற்றங்களில் இருந்து 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளை பாதுகாக்க வகை செய்யும் போக்சோ சட்டம் கடந்த 2012-ம் ஆண்டு மத்திய அரசால் இயற்றப்பட்டது. இந்த வழக்குகளை விரைவாக விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையை விரைந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து, போக்சோ உள்ளிட்ட நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறப்பு விரைவு கோர்ட்டுகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டன. … Read more

GRT: வியப்பூட்டும் சலுகைகள்; 'தி டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்'- அறிமுகப்படுத்திய ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ்

வியப்பூட்டும் சலுகைகளுடன் பிரம்மாண்டமான ‘தி டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்’ -ஐ ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் அறிவித்துள்ளது. ஜி.ஆர்.டி ஜூவல்லரஸ், 1964ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தியாவின் மதிப்புமிக்க நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. துல்லியமான கைவினைத் திறன் அற்புதமான வடிவமைப்புத் திறன் மற்றும் நீடித்த மதிப்புகள் ஆகியவற்றிற்காக பிரசித்திபெற்ற இந்த நிறுவனம் தங்கம் வைரம் பிளாட்டினம். வெள்ளி, மற்றும் நவரத்தினங்களில், நேர்த்தியான தொகுப்புகளை உருவாக்குவதின் மூலம் இந்நிறுவனம் தலைமுறைகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. தென் இந்தியா முழுவதும் 65 ஷோரூம்கள் … Read more

கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்து வாடும் நான்கு குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை:  கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்து வாடும் நான்கு குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு  அவர்களை சென்னை வரவழைத்து, அவர்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (8.12.2025) தலைமைச் செயலகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம், பூட்டை கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர்களை இழந்த நான்கு குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வீட்டுமனைப் பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு, பணிநியமன ஆணை, அன்புக்கரங்கள் திட்டத்தின் … Read more

மராட்டியம்: பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து – 6 பேர் பலி

மும்பை, மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் நிப்ஹட் பகுதியை சேர்ந்த 6 பேர் ஒரு காரில் நேற்று மாலை கல்வான் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தனர். கல்வான் அருகே மலைப்பாங்கான ஹர்க் ஹண்ட் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 600 அடி பள்ளத்தாக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்த 6 பேரின் உடல்களையும் … Read more

ஜனவரி 5ல் புதிய மஹிந்திரா XUV 7XO விற்பனைக்கு வெளியாகிறது.! | Automobile Tamilan

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட XUV700 மாடல் இனி XUV 7XO என்ற பெயரில் விற்பனைக்கு 2026 ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. தனது அறிவிப்பில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களைச் சென்றடைந்து, இந்தியச் சாலைகளில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியது XUV700. அந்த வெற்றியின் அடித்தளத்தில் நின்றுகொண்டு, இன்னும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடனும், வசதிகளுடனும் புதிய XUV 7XO உருவாக்கப்பட்டுள்ளது. இது பழைய மாடலின் … Read more