“திருப்பரங்குன்றம் வேல் தங்களுக்கு நினைவுபடுத்தியிருக்கிறது" – ஸ்டாலினுக்கு தமிழிசையின் கேள்விகள்

மதுரையில் இன்று நிகழ்ச்சியொன்றில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகள் வெளியிட்டார். மேலும், நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் மதுரை மாவட்ட மக்களுக்கு மட்டும் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறோம். இதுவரைக்கும் 4,300 கோடி ரூபாய் மதிப்பிலான 10,000 வளர்ச்சிப் பணிகளை செய்து கொடுத்திருக்கிறோம். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இப்போது 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான 358 வளர்ச்சிப் பணிகள் நடந்துக்கிட்டு … Read more

நடிகை காஞ்சனா குறித்த சர்ச்சை பதிவு… தவறான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் காந்தி கண்ணதாசன் வேண்டுகோள்…

’60 – ’70-களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை காஞ்சனா. இவர் கடந்த 4ம் தேதி, ஏவிஎம் சரவணன் மறைவிற்கு ஆட்டோவில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார். முன்னணி நடிகையாக இருந்த காஞ்சனா ஆட்டோவில் வந்தது குறித்து சமூக வலைதளத்தில் பலரும் பலவிதமாக தவறான தகவல்களை எழுதினர். இதற்கு கவிஞர் கண்ணதாசன் மகன் காந்தி கண்ணதாசன் மறுப்பு தெரிவித்துள்ளதோடு இது போல் தவறான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என்று … Read more

“அவரவர் வரம்புக்குள் இருந்தால் நல்லது'' – தனது முன்னாள் IPL அணி உரிமையாளர் மீது கம்பீர் தாக்கு

இந்திய கிரிக்கெட் அணிக்கு கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, சொந்த மண்ணில் நடைபெற்ற 9 டெஸ்ட் போட்டிகளில் 5 போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது. அதிலும், நியூசிலாந்திடம் 3-0 எனவும், தென்னாப்பிரிக்காவிடம் 2-0 எனவும் முழுமையாக டெஸ்ட் தொடரை இழந்தது. அணித் தேர்வில் கம்பீர் அதிகமாக தலையிடுவதாலும், ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் ஐ.பி.எல் அடிப்படையில் வீரர்களைத் தேர்வு செய்வதாலும், பேட்டிங்கோ பவுலிங்கோ அந்தந்தப் பிரிவின் நிபுணர்களைக் (ஸ்பெஷலிஸ்ட் ப்ளேயர்களை) தேர்வு செய்யாமல் … Read more

`பால் பவுடருக்கு பதில் க்யூப்' – ஜப்பானில் அறிமுகமான 'பேபி ஃபார்முலா க்யூப்ஸ்' – என்ன சிறப்பு?

வித்தியாசமான கண்டுபிடிப்புகளுக்குப் பெயர்போன ஜப்பான், புதிய ‘கியூப்’ வடிவ பாலை அறிமுகப்படுத்தியுள்ளது.​ இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக, பச்சிளங் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்கு மாற்றாக ‘ஃபார்முலா மில்க்’ பவுடர் வடிவத்தில் கொடுக்கப்படும். இதைப் பயன்படுத்துவது சில நேரங்களில் சவாலான விஷயமாக இருக்கும். குறிப்பாக நள்ளிரவு 2 மணி அல்லது 3 மணிக்குக் குழந்தை பசியால் அழும்போது, தூக்க கலக்கத்தில் இருக்கும் பெற்றோர்கள் சரியான அளவில் பவுடரை அளந்து, வெதுவெதுப்பான நீரில் கலக்குவது … Read more

கோவா கேளிக்கை விடுதி தீ விபத்தில் 25 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம் அறிவிப்பு

டெல்லி, கோவா மாநிலத்தின் தலைநகர் பனாஜி அருகே அர்புரா கிராமம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள கடற்கரை பிரபல சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு உள்ள பிரபல கேளிக்கை விடுதியில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். கேளிக்கை விடுதியில் சமையல் அறையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கோவா கேளிக்கை விடுதி தீ … Read more

தொண்டையில் பேரிச்சம் பழம் சிக்கி தெலுங்குதேசம் கட்சி தொண்டர் பலி

நகரி, ஊட்டசத்துகள் அதிகம் நிறைந்த பழம் பேரிச்சம் பழம். எனவே பலரும் இதனை விரும்பி உண்பது வழக்கம். ஆனால் இந்த பழத்தை சாப்பிட்டு ஒருவர் இறந்ததாக வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஆந்திராவில் நடந்த இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- ஆந்திராவின் சத்யசாயி மாவட்டம் பெனுகொண்டா பகுதியைச் சேர்ந்தவர் கங்காதர் (வயது 42). தெலுங்குதேசம் கட்சி தொண்டர். இவர் பேரிச்சம் பழம் சாப்பிடுவது வழக்கம். சம்பவத்தன்று அவர் பேரிச்சம் பழத்தை அவசரமாக சாப்பிட்டதாக … Read more

ரூ.1 கோடி பார்க்கிங் கட்டணம் செலுத்திய ஏர் இந்தியா விமானம் -காரணம் என்ன?

பராமரிப்புப் பணிக்காக கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 737-200 ரக விமானம், கவனக்குறைவால் அங்கேயே 13 ஆண்டுகள் கைவிடப்பட்டதால் தற்போது அதற்கு ரூ.1 கோடி பார்க்கிங் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக இந்த விமானம் தரையிறக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பராமரிப்புப் பணிகள் முடிந்ததா அல்லது கைவிடப்பட்டதா என்ற தகவல் இல்லாமல், விமான நிலையத்தின் ஒரு ஓரத்தில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்தது. காலப்போக்கில் இந்த விமானம் குறித்த தகவல்கள் ஏர் … Read more

மனைவியுடன் தகராறு: 2 குழந்தைகளை கொன்று வாலிபர் தற்கொலை

பிஜ்னோர், உத்தரப் பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மகன், மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முபாரக்பூர் குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுராம் (28 வயது). இவருக்கு தீபன்ஷு (5 வயது) என்ற மகனும், ஹர்ஷிகா (3 வயது) என்ற மகளும் இருந்தனர். பாபுராமுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த நிலையில் நேற்றும் … Read more

மேற்கு வங்கம்: பாபர் மசூதி கட்ட மம்தா கட்சி எம்.எம்.ஏ பூமி பூஜை; ராமர் கோயில் கட்ட பாஜக பூமி பூஜை

மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் எம்.எம்.ஏ. ஹிமாயூன் கபீர் முர்ஜிதாபாத்தில் பாபர் மசூதியை கட்டுவோம் என்று ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அவரை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். திட்டமிட்டபடி அயோத்தியில் பாபர் மசூதி இடப்பட்ட நாளில் பாபர் மசூதி கட்ட பூமி பூஜை செய்யப்படும் என்று கபீர் தெரிவித்து இருந்தார். மம்தா பானர்ஜி சொன்னபடி நேற்று முர்ஜிதாபாத்தில் உள்ள ராஜீவ் நகரில் அயோத்தியில் இருந்தது போன்ற … Read more