அமெரிக்காவில் ரூ.88 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்: சவுதி அரேபியா அறிவிப்பு

வாஷிங்டன், சவுதி அரேபியா நாட்டின் மன்னராக சல்மான் (வயது 88) உள்ளார். உடல்நல குறைபாடு காரணமாக அவருக்கு பதிலாக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நாட்டின் நிர்வாகத்தை கவனித்து வருகிறார். இந்தநிலையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றார். ரியாத் மற்றும் வாஷிங்டன் இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டது. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த இளவரசருக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ராணுவ வீரர்கள் … Read more

சீனாவில் ஜப்பான் கடல் உணவுக்கு தடை

பீஜிங், அண்டை நாடான தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியென கூறி போர் விமானங்களை பறக்கவிட்டும், போர் கப்பல்களை களம் இறக்கி சீனா அச்சுறுத்தி வருகிறது. ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி, தைவானை சீண்டினால் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தார். இதனால் வெகுண்டெழுந்த சீனா, ஜப்பானின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் அந்த நாட்டிற்கு தங்களுடைய மக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் மேலும் அறிவுறுத்தியது. சீனாவின் மிகப்பெரிய உணவு ஆதரமாக ஜப்பான் … Read more

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு

ஜகர்தா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டில் பல்வேறு எரிமலைகள் உள்ளன. இதில் சில எரிமலைகள் அவ்வப்போது வெடித்து எரிமலை குழம்பை வெளியேற்றி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் ஜாவா தீவில் உள்ள செமேரு எரிமலை இன்று வெடித்து சிதறியது. எரிமலையில் இருந்து கரும்புகையுடன், லாவா எரிமலை குழம்பும் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக செமேரு எரிமலை அருகே வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எரிமலை வெடிப்பால் ஜாவா தீவில் பதற்றமான சூழ்நிலை நிலவி … Read more

உக்ரைன் மீது ரஷியா அதிரடி தாக்குதல் – 25 பேர் பலி

கீவ், உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 364வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதனால் இரு நாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா நேற்று நள்ளிரவு அதிரடி தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் டெர்னோபில் நகரை … Read more

ஆஸ்திரேலியா: சாலையில் நடந்து சென்ற 8-மாத இந்திய கர்ப்பிணி பெண் கார் மோதி பலி

சிட்னி, ஆஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் பகுதியான ஹார்ன்ஸ்பையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மன்விதா தரேஷ்வர் தனது கணவர் மற்றும் 3வயது மகனுடன் வசித்து வந்தார். மன்விதா தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் மன்விதா, கணவர்- மகனுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள கார் நிறுத்துமிட நுழைவாயிலை கடக்கும்போது கார் வந்தது. அந்த கார் மீது பின்னால் சொகுசு கார் வேகமாக மோதியது. இதில் முன்னால் இருந்த கார் மன்விதா மீது … Read more

10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ்

ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் மத்தியில் தவிர்க்க முடியாத செயலியாக கூகுள் மேப்ஸ் உள்ளது. கூகுள் மேப்ஸ் இருந்தால் போதும், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை யாரிடமும் வழி கேட்காமல் போய்விடலாம். அந்த அளவிற்கு கூகுள் மேப்சில் வழிகாட்டி வசதிகள் உள்ளன. கூகுள் மேப்ஸ் பயனர்களை கவரும் வகையிலும் போட்டியை சமாளிக்கும் வகையில் அவ்வப்போது தனது மேப்ஸ்களில் புதிய அப்டேட்களை செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக 10 புதிய அப்டேட்களை அறிமுகம் செய்துள்ளது. … Read more

வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம்

டுவிட்டரை எலான் மஸ்க் கடந்த 2022-ஆம் ஆண்டு 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து அந்த செயலியில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார். புளூ டிக் வசதியைப் பணம் கொடுத்து யார் வேண்டுமானாலும் பெறலாம் என்று தொடக்கத்திலேயே மாற்றம் கொண்டு வந்தார். அதுபோக, பயனர்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய அப்டேட்கள் அறிமுகமாகி வருகின்றன. எக்ஸ் தளத்தில் அறிமுகமாகியுள்ள குரோக் ஏஐ (AI) தற்போது … Read more

பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன்

பாரீஸ், உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் முயன்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 3½ ஆண்டுகளை தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அவற்றின் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவியால் உக்ரைன் தொடர்ந்து போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது. இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை … Read more

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 18 பேர் பலி; 34 பேர் மாயம்

ஜாவா, இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் கனமழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் பல வீடுகள் மண்ணில் புதையுண்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி 18 பேர் பலியாகி உள்ளனர். இதுபற்றி பேரிடர் தணிப்பு கழகம் வெளியிட்ட செய்தியில், சிலாகேப் நகரின் சீபியுனிங் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால், 10 முதல் 25 அடி ஆழத்தில் மக்கள் புதைந்து போய் விட்டனர். அவர்களை தேடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. சிலாகேப் நிலச்சரிவில் … Read more

ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும் எந்த நாடும் கடுமையாக தண்டிக்கப்படும் – டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து கடுமையான கொள்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்வைத்து பிற நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். மேலும் உலக நாடுகளிடையே நிலவி வரும் மோதல்களை நிறுத்துவதாக கூறி வர்த்தக தடை, வரிவிதிப்பு என மிரட்டி வருகிறார். 2022-ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து அந்த நாட்டின் மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைவிதித்தன. குறிப்பாக, ரஷியாவின் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக உள்ள … Read more