வெள்ளை மாளிகையில் கண்களை மூடிய படி அமர்ந்து இருந்த டொனால்டு டிரம்ப்: கலாய்த்த நெட்டிசன்கள்

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள தனது ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இருக்கையில் கண்களை மூடியபடி அமர்ந்து இருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நெட்டிசன்கள் பலரும் டிரம்ப் இருக்கையில் அமர்ந்து குட்டித் தூக்கம் போட்டுவிட்டதாக கலாய்த்து மீம்களை பதிவிட்டு வருகின்றனர். அதேவேளையில், டிரம்பின் உடல் நலம் கவலை அளிப்பதாகவும், பணி நேரத்தில் அவரது செயல்பாடு அதிருப்தி அளிப்பதாகவும் டிரம்ப் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை உடல் எடை … Read more

2 நாளாக இருமல்… அமெரிக்காவில் கல்லூரி மாணவி திடீர் மரணம்; தோழிகள் அதிர்ச்சி

நியூயார்க், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏ அண்டு எம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் ராஜலட்சுமி யார்லகட்டா என்ற ராஜி (வயது 23). சமீபத்தில் பட்டம் பெற்றுள்ளார். ஆந்திராவை சேர்ந்த இவர், படிப்புக்கு பின்னர், அமெரிக்காவில் வேலை தேடி கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில், 2 நாட்களாக அவருக்கு தொடர்ந்து இருமல் இருந்துள்ளது. கடுமையான இருமலுடன், நெஞ்சு வலியும் சேர்ந்து அவரை பாதித்துள்ளது. இந்நிலையில், டெக்சாஸில் உள்ள அவருடைய குடியிருப்பில் அவர் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். அலாரம் … Read more

ஊழியர்கள் பற்றாக்குறை எதிரொலி; அமெரிக்காவில் ஒரே நாளில் 2,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து

வாஷிங்டன், அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு குடியேற்ற கொள்கை, பிற நாடுகள் மீது வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார். அவரது இந்த நடவடிக்கைக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்புகள் கிளம்பின. எனவே நாடாளுமன்றத்தில் அவர் கொண்டு வரும் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான நிதியை விடுவிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அரசு துறைகளுக்கான நிதி விடுவிக்கப்படாததால் அனைத்து துறைகளும் முடங்கின. குறிப்பாக … Read more

பிலிப்பைன்ஸ் நாட்டை மிரட்டும் `பங்வோங்' புயல் – 14 லட்சம் பேர் வெளியேற்றம்

மணிலா, பசிபிக் பெருங்கடலில் உருவான கல்மேகி புயல் பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதனால் அங்கு பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடின. சில இடங்களில் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 204 பேர் பலியாகினர். மேலும் பல கோடி ரூபாய் அளவுக்கு பொருட்சேதமும் ஏற்பட்டது. எனவே உள்கட்டமைப்பை சரிசெய்யும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. இதற்காக நட்பு நாடுகளான அமெரிக்கா, ஜப்பான் ஆகியவை உதவ முன் வந்துள்ளன. … Read more

வரி வருவாயிலிருந்து அமெரிக்கர்களுக்கு தலா 2000 டாலர் டிவிடெண்ட் வழங்குவேன்: ட்ரம்ப்

வாஷிங்டன்: கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டாலர்களை வருவாயாக பெறுவதாகவும், அந்த வருவாயிலிருந்து ஒவ்வொரு அமெரிக்கருக்கும் விரைவில் 2,000 டாலர் ( இந்திய மதிப்பில் தலா ரூ.1.77 லட்சம்) டிவிடெண்ட் (ஈவுத்தொகை) வழங்கப்படும் என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதியளித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், “கூடுதல் வரி விதிப்பை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள். எனது தலைமையின் கீழ், அமெரிக்கா உலகின் மிகவும் பணக்கார நாடாக, மிகவும் மதிக்கப்படும் நாடாக, … Read more

ஆஸ்திரேலியாவில் கார் ஓட்டும்போது செல்போனில் மேப் பார்த்த பெண்ணுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்

சிட்னி, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் சிட்னி நகர சாலையில் மக்ரினா ஸ்டிவக்டாஸ் (வயது 22) என்ற இளம்பெண் காரை ஓட்டிச் சென்றார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் காரை நிறுத்தி வழக்கமான சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் செல்போனில் மேப் பார்த்து காரை ஒட்டிச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து காரில் செல்போன் பயன்படுத்தியதாக கூறி அந்த பெண்ணுக்கு சுமார் ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் போலீசிடம் … Read more

போலீசார் துரத்தியபோது கேளிக்கை விடுதிக்குள் புகுந்த கார் – 4 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவில் புளோரிடா தம்பா நகரில் உள்ள நெடுஞ்சாலை நேற்று அதிகாலை சட்டவிரோதமாக கார் பந்தயம் நடைபெற்றது. இதையறிந்த போலீசார், கார் பந்தயத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்றனர். அப்போது, பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் காரை வேகமாக இயக்கியுள்ளனர். இதையடுத்து, பந்தயத்தில் ஈடுபட்டவர்களை போலீசாரும் காரில் துரத்தியுள்ளனர். அப்போது, 22 வயது இளைஞர் ஓட்டிய பந்தய கார், தம்பா நகரில் உள்ள கேளிக்கை விடுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கேளிக்கை விடுதியில் நின்றுகொண்டிருந்த 4 பேர் உடல் … Read more

வாசனை திரவ சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து – 6 பேர் பலி

அங்காரா, துருக்கி நாட்டின் கொஹலி மாகாணம் டிலோவசி நகரில் வாசனை திரவ சேமிப்பு கிடங்கு (Perfume Warehouse) உள்ளது. இங்கிருந்து நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களுக்கு வாசனை திரவம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், வாசனை திரவ சேமிப்பு கிடங்களில் நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சேமிப்பு கிடங்கில் வேலை செய்துகொண்டிருந்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர், சேமிப்பு … Read more

மகளின் காதலனால் கர்ப்பமான தாய்! அதுவும் 14 வயது சிறுவன்..பெண்ணை கைது செய்த போலீஸ்..

Woman Pregnant By Daughter Boyfriend : அமெரிக்காவின் Illinois என்கிற இடத்தில், ஒரு தாய் தனது மகளின் காதலனால் கர்ப்பமாகியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

வெளிநாட்டில் பதுங்கியிருந்த இந்தியாவை சேர்ந்த 2 தாதாக்கள் கைது – விரைவில் நாடு கடத்தல்

வாஷிங்டன், ​​இந்தியாவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தாதாக்கள் நாட்டிற்கு வெளியே இருந்தபடி, குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை வேலைக்கு அமர்த்தி, தங்கள் மாபியா கும்பல்களை இயக்கி வருகின்றனர். இந்த கும்பல்களின் தலைவர்களை மடக்கிப் பிடிப்பதற்காக இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சர்வதேச அளவில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், வெளிநாட்டில் பதுங்கியிருந்த இந்தியாவை சேர்ந்த வெங்கடேஷ் கார்க் மற்றும் பானு ராணா ஆகிய 2 தாதாக்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் வெங்கடேஷ் கார்க் அரியானா மாநிலம் நாராயண்கர் … Read more