சீனாவில் பள்ளிகளில் முதன்முறையாக… இந்தி பாடம் கற்பித்தல் தொடக்கம்

ஷாங்காய், வெளிநாடுகளுக்கு சென்று மேல் படிப்பை படிக்கும் இந்திய மாணவர்களின் விருப்ப தேர்வாக உள்ள நாடுகளில் சீனாவும் ஒன்று. அந்நாட்டின் ஷாங்காய் நகரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தியின்படி, எம்.பி.பி.எஸ். படிப்புகளை தொடர்வதற்காக இந்திய மாணவர்கள் அதிக அளவில் சீனாவுக்கு செல்கின்றனர். இந்நிலையில், சீனாவில் இந்தியை படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. இதன்படி, பல்கலைக்கழக அளவில் சர்வதேச படிப்புகளுக்கான துறைகளில் இந்தியும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், சீனாவில் உள்ள பள்ளிகளிலும் இந்தியை … Read more

மடகாஸ்கரில் அரசுக்கு எதிராக போராட்டம்: அதிபர் தப்பியோட்டம்

அண்டனானரீவோ, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மடகாஸ்கர். அந்நாட்டின் அதிபராக அண்ட்ரே ரஜோலினா செயல்பட்டு வருகிறார். இதனிடையே, ஊழல், வறுமை, மின் தடுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கிய போராட்டம் அதிபர் ரஜோலினாவுக்கு எதிராகவும், அவரது அரசுக்கு எதிராகவும் திரும்பியது. மேலும், அந்நாட்டு ராணுவத்தின் கெப்செட் எனப்படும் முக்கிய படைப்பிரிவு அதிபரின் உத்தரவுகளை ஏற்க மறுத்து, அரசுக்கு எதிராக … Read more

பாலஸ்தீன தனி நாடு பற்றி கேள்வி… டிரம்ப் அளித்த பதில் என்ன?

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மத்திய கிழக்கு பகுதியில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் நிறைவடைந்த நிலையில், அமெரிக்காவுக்கு புறப்பட்டார். அப்போது அவர் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு நிருபர்கள் அவரை சூழ்ந்தனர். அவரிடம் பாலஸ்தீன தனி நாடு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. பாலஸ்தீன நாட்டுக்கு நீங்கள் அங்கீகாரம் தருவீர்களா? என அப்போது கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ஒற்றை நாடு, இரட்டை நாடு அல்லது 2 நாடு என்பது பற்றியெல்லாம் நான் பேசவில்லை. நாங்கள் காசாவை … Read more

மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு: நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடியது வெனிசுலா

புதுடெல்லி: மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், நார்வேவில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அறிவித்துள்ளது. 2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர தொடர்ந்து போராடிய, வெனிசுலாவின் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார். இந்நிலையில், நார்வேயில் உள்ள தனது தூதரகத்தை மூடியிருப்பதாக வெனிசுலா அறிவித்துள்ளது. நார்வே அரசின் தன்னாட்சி அமைப்பான … Read more

சாலையில் சென்ற வாகனங்கள் மீது விழுந்த விமானம் – 2 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் அலையன்ஸ் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. டாரன் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அங்குள்ள நெடுஞ்சாலையில் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 2 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர். அப்போது அந்த சாலையில் சென்ற லாரி மற்றும் கார்கள் மீது விமானம் விழுந்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த … Read more

காசா போர் நிறுத்த ஒப்பந்தம் பணயக்கைதிகள் விடுதலை நிம்மதி அளிக்கிறது – இங்கிலாந்து பிரதமர்

லண்டன், காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, ஹமாஸ் பிடியில் இருந்த பணயக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.அதற்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டது ஆழ்ந்த நிம்மதி அளிக்கிறது. இஸ்ரேல் என்ஜினீயர் ஏவிநேடன், ஹமாஸ் இயக்கத்தின் பிடியில் சிக்கி சித்ரவதை செய்யப்பட்டது நினைவில் நிற்கிறது. அவரது குடும்பத்தை சந்தித்தேன். 2 ஆண்டுகளாக அவர்கள் அனுபவித்த சித்ரவதையையும், வேதனையையும் எவராலும் உண்மையாக புரிந்து கொள்ள முடியாது. என் … Read more

காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்து – ட்ரம்ப் ‘அரசியல்’ முன்னெடுப்பின் 5 முக்கிய அம்சங்கள்

ஜெருசலேம்: எகிப்தில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது. அக்.7, 2023 ஹமாஸ் தாக்குதலுக்குப் பின்னர் இஸ்ரேல் கொடுத்த பதிலடியால் 68,000+ உயிரிழப்புகள், நகரெங்கும் தரைமட்டமான கட்டிடங்கள், நிற்கதியாய் நிற்கும் குழந்தைகள், பசிப் பிணியால் தவிக்கும் மக்கள் என மனிதாபிமான அவலங்கள் அத்தனை புள்ளிகளையும் ஒரே முகமாக காசா தாங்கி நிற்க, அங்கே அமைதியை ஏற்படுத்தியதாக மத்திய கிழக்கில் ஒரு பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றிருக்கிறார் அமெரிக்க அதிபர் … Read more

புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக பொருளாதார நோபல் பரிசுக்கு 3 பேர் தேர்வு

ஸ்டாக்​ஹோம்: இந்த ஆண்​டுக்​கான பொருளா​தார நோபல் பரிசுக்கு ஜோயல் மோக்​கிர், பிலிப் அகி​யான் மற்​றும் பீட்​டர் ஹோவிட் ஆகிய 3 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். இந்த ஆண்​டுக்​கான நோபல் பரிசு கடந்த 6-ம் தேதி முதல் அறிவிக்​கப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில் கடைசி​யாக பொருளாதா​ரத்​துக்​கான நோபல் பரிசுக்கு ஜோயல் மோக்​கிர் (அமெரிக்கா), பிலிப் அகி​யான் (பிரான்ஸ்) மற்​றும் பீட்​டர் ஹோவிட் (இங்கிலாந்து) ஆகிய 3 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ள​தாக ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்​சஸ் தெரி​வித்​துள்​ளது. … Read more

இறந்தவர்களின் உடலை பதப்படுத்தி பல ஆண்டுகள் கழித்து இறுதிச்சடங்கு: இந்தோனேசிய பழங்குடியினரின் வினோத வழக்கம்

தெற்கு சுலவேசி: இந்​தோ​னேசி​யா​வில் உள்ள டரோஜா பழங்​குடி​யினர் இறந்​தவர்​களின் உடலை பதப்​படுத்தி பாது​காத்து பல ஆண்டு கழித்து அதிக செல​வில் கொண்​டாட்​டத்​துடன் இறுதிச் சடங்கை நடத்​துகின்​றனர். உலகின் பல பகு​தி​களில் இறந்​தவர்​களின் உடல்​கள் அடக்​கம் செய்​யப்​படும் அல்​லது தகனம் செய்​யப்​படும். ஆனால், இந்​தோ​னேசி​யா​வில் உள்ள டரோஜா பழங்​குடி​யினர், தங்​கள் குடும்​பத்​தில் இறப்​பவர்​களின் உடலை பதப்​படுத்தி வைத்து அவர்​களு​டன் வாழ்​கின்​றனர். இந்​தோ​னேசி​யா​வின் தெற்கு சுலவேசி பகு​தி​யில் உள்ள டனா டரோஜா பகு​தி​யில் இந்த வினோத வழக்​கம் உள்​ளது. இறப்பு … Read more

கிரிப்டோ சந்தையில் கடும் வீழ்ச்சி: வர்த்தகர் தற்கொலை

கீவ்: உக்​ரைனைச் சேர்ந்த கிரிப்​டோ வர்த்​தகர் கோஸ்ட்யா குடோ கடந்த 11-ம் தேதி தனது லம்​போர்​கினி உருஸ் காரில் தலை​யில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலை​யில் இறந்து கிடந்​தார். இது தற்​கொலையா என காவல் துறை​யினர் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். குடோ இறப்​ப​தற்கு முன்பு நிதிச் சிக்​கல் காரண​மாக மனச்​சோர்​வில் இருந்​த​தாக அவரது குடும்​பத்​தினர் தெரி​வித்​துள்​ளனர். அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் அண்​மை​யில் சீன இறக்​கும​திகள் மீது 100 சதவீதம் வரி விதிப்ப​தாக அறி​வித்​தார். இதனால் கிரிப்​டோ … Read more