நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்

காத்மாண்டு: நே​பாளம் முழு​வதும் நேற்று ஊரடங்கு வாபஸ் பெறப்​பட்​டது. நேபாளத்​தில் அரசி​யல் தலை​வர்​கள், தொழில​திபர்​கள், பிரபலங்​களின் வாரிசுகள் தங்​களது ஆடம்பர வாழ்க்​கையை சமூக வலை​தளங்​களில் பதி​விட்டு வந்​தனர். இதை இளம் தலை​முறை​யினர் மிகக் கடுமை​யாக விமர்​சித்​தனர். இதனால் கடந்த 4-ம் தேதி நேபாளம் முழு​வதும் 26 சமூக வலை​தளங்​களுக்கு தடை விதிக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து அரசுக்கு எதி​ராக இளம் தலை​முறை​யினர் தலைநகர் காத்​மாண்​டு​வில் குவிந்து பல்​வேறு போராட்​டங்​களை நடத்​தினர். இந்த போராட்​டம் கலவர​மாக மாறியது. இதில் 51 … Read more

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள் – நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வர டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை விதித்த அவர், ரஷ்யாவுடன் வலிமையான வர்த்தக உறவில் இருக்கும் நாடுகளுக்கு எதிராகவும் வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் … Read more

பாகிஸ்தானில் 45 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.. 19 ராணுவ வீரர்களும் பலி

இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பிறகு எல்லையோர மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல் பல மடங்கு அதிகரித்துள்ளது. தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதே இதற்கு முக்கிய காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. தலீபான்கள் அதனை மறுத்து வந்தாலும் தாக்குதல் தொடர் கதையாக உள்ளது. எனவே எல்லையோர மாகாணங்களில் ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் கடந்த … Read more

''ஊழலை முடிவுக்குக் கொண்டுவர பாடுபடுவேன்'' – நேபாள பிரதமர் சுசீலா கார்கி உறுதி

காத்மாண்டு: நேபாளத்தில் இடைக்கால பிரதமராக தனது பணியை தொடங்கிய சுசீலா கார்கி, “ஊழலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைப் பின்பற்றுவேன்” என்று சபதம் செய்தார். நேபாள நாட்​டில் ‘ஜென் ஸி’ இளைஞர்​கள் நடத்​திய தீவிர போராட்​டங்​களால் சில நாட்களுக்கு முன்பு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலை​மையி​லான கம்​யூனிஸ்ட் அரசு கவிழ்ந்​தது. இதனால் அந்​நாட்​டில் அரசி​யல் குழப்​பம் ஏற்​பட்​டது. இதைத் தொடர்ந்து ’ஜென் ஸி’ இளைஞர்களின் ஆதரவுடன், நாட்டின் இடைக்​கால பிரதமராக நேபாள உச்ச நீதி​மன்​றத்​தின் முன்​னாள் … Read more

காசாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்தாக்குதல் – 12 குழந்தைகள் உள்பட 32 பேர் பலியான சோகம்

காசா, இஸ்ரேல்-காசா இடையே நீண்ட கால மோதல்போக்கு நிலவியது. இதனையடுத்து கடந்த 2023-ம் ஆண்டு தலைநகர் ஜெருசலேமில் நுழைந்து காசா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் பலியாகினர். மேலும் 250 பேரை பணய கைதிகளாக கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 2 ஆண்டுகளாக தொடரும் இந்த போரில் இதுவரை சுமார் 64 ஆயிரத்து 700 பேர் பலியாகி உள்ளனர். இந்த சூழலில் இந்த போரை நிறுத்தும்படி உலக … Read more

'குடியேறிகளே வெளியேறுங்கள்' – லண்டனில் 1.10 லட்சம் பேர் பங்கேற்ற பேரணி: பின்னணி என்ன?

லண்டன்: சனிக்கிழமை அன்று பிரிட்டன் நாட்டின் லண்டனில் தீவிர வலதுசாரி செயல்பாட்டாளரான டாமி ராபின்சன் ஒருங்கிணைத்த ‘யுனைட் தி கிங்டம்’ பேரணியில் சுமார் 1.10 லட்சம் பேர் பங்கேற்றனர். அப்போது பேரணியில் பங்கேற்ற ஒரு குழுவினர் போலீஸார் உடன் மோதலில் ஈடுபட்டனர். இந்த பேரணி லண்டன் நகரின் தேம்ஸ் நதிக்கரையை ஒட்டிய பிக் பென் பகுதி முதல் வாட்டர்லூ பகுதி வரை நடைபெற்றது. இந்த பேரணிக்கு ஆதரவு அளித்து, அதில் பங்கேற்றவர்கள் வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்களுக்கு எதிராகவும், … Read more

ஏமனில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – தரைமட்டமான ஹவுதி கிளர்ச்சியாளர்களின் குடியிருப்புகள்

சனா, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் சுமார் 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் காசா முனையில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இதனால், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, … Read more

முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசை: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சென்னை: முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசையை உருவாக்கி உள்ளதாக சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்றைய நவீன மருத்துவ துறையில் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் அதன் தன்மையை பொறுத்து மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவது உண்டு. சில நேரங்களில் அறுவை சிகிச்சை மூலம் முறிந்த எலும்புகளை சேர்க்க/கூட்ட உலோகத்தை பயன்படுத்துவது உண்டு. எலும்பு கூடிய பிறகு பொருத்தப்பட்ட உலோகத்தை மீண்டும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது உண்டு. சிலருக்கு அந்த உலோகம் உடலில் … Read more

இந்தியாவுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் அமெரிக்கா

நியூயார்க், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து கடுமை காட்டி வருகிறார். இதற்காக 25 சதவீத அபராதம் உள்பட இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார்.மேலும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா மற்றும் சீனா மீது 100 சதவீத வரி விதிக்குமாறு ஐரோப்பிய நாடுகளுக்கு சமீபத்தில் டிரம்ப் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.இதன் தொடர்ச்சியாக வளர்ந்த நாடுகளை கொண்ட கூட்டமைப்பான ஜி7 அமைப்புக்கும் அமெரிக்கா அறிவுறுத்தி … Read more

போரை நிறுத்தும் நோக்கிலான பொருளாதார தடைகள் நிலைமையை சிக்கலாக்கும் – சீனா

லுப்லியானா [ஸ்லோவேனியா]: மோதல்களை தீர்ப்பதற்கு அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்க சீனா உறுதிபூண்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்தார். மேலும், போர்களால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்றும், பொருளாதார தடைகள் நிலைமையை இன்னும் சிக்கலாக்கும் என்றும் கூறினார். ஸ்லோவேனியாவின் துணைப் பிரதமரும் வெளியுறவு மற்றும் ஐரோப்பிய விவகார அமைச்சருமான டான்ஜா ஃபாஜோனை சந்தித்த பிறகு, நேற்று லுப்லியானாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய வாங் யி, ” சீனா போர்களில் பங்கேற்கவோ அல்லது திட்டமிடவோ இல்லை. … Read more