சட்டமேதை அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு நாடகம் மீண்டும் ஒளிபரப்பு- கெஜ்ரிவால் அறிவிப்பு

இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் வாழ்கை வரலாற்று இசை நாடகத்தை ஒளிபரப்ப டெல்லி அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக அம்பேத்கரின் வாழ்க்கையை அனைத்து குழந்தைகளின் மத்தியிலும் கொண்டு சேர்க்கும் விதத்தில் டெல்லி அரசு முயற்சி எடுத்துள்ளது. நாடகத்தை மொத்தம் 50 முறை ஒளிபரப்பப்படும் என்றும் மக்கள் அனைவரும் இலவசமாக காண வேண்டும் என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி முதல் நேரு மைதானத்தில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு நாடகம் ஒளிபரப்பப்பட்டது.

இந்நிலையில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நாடகத்தை மீண்டும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கெஜ்ரிவால் டுவிட்டரில் கூறியதாவது:-

சட்டமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் வாழ்க்கை குறத்த இசை நாடகம் பிப்ரவரி 25-ம் தேதி முதல் மார்ச் 12-ம் தேதி வரை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஒளிபரப்பப்படுகிறது. ஒரு நாளுக்கு மாலை 4 மணி மற்றும் 7 மணி என 2 காட்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் இலவசம். குறைந்த இடங்களே இருப்பதால் முன்பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்..  திருமண மேடையில் மூளைச்சாவு: மணப்பெண்ணின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோருக்கு குவியும் பாராட்டு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.