ம.பி முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா

மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ஷிவ்ராஜ் சிங் கவுகான் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

தொற்று அறிகுறிகள் தென்பட்டதால், கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டேன். அதில், கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

எனக்கு சாதாரண அறிகுறிகளே உள்ளன. அதனால் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன்.

எனது பணிகளை காணொளி மூலம் செய்வேன். நாளை நடைபெறவுள்ள சந்த் சிரோமணி ரவிதாஸ் ஜெயந்தி நிகழ்ச்சியிலும் காணொளி மூலம் பங்கேற்கவுள்ளேன்

என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் உடனடியாக தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்.. தி.மு.க ஒரு நாடகக் கம்பெனி: அண்ணாமலை பேட்டி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.