மாஸ்கோ: உக்ரைன் எல்லையில் இருந்து, மேலும் சில படைகள் திரும்ப பெறப்பட்டு உள்ளதாக ரஷ்யா தெரிவித்து உள்ளது.
உக்ரைன் எல்லையில் தனது படைகளை ரஷ்யா குவித்தது. இதனால், அங்கு போர் பதற்றம் ஏற்பட்டது. கிரிமியா உள்ளிட்ட உக்ரைன் எல்லையில் உள்ள பல்வேறு பகுதிகளில் ரஷ்யா படைகளை குவித்து போர் பயிற்சி அளித்து வந்தது. இதனால், அப்பகுதியில் உருவான பதற்றத்தை தணிக்க மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தின. அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் நாட்டு தலைவர்கள் தொடர்ந்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தின. இதனால், தன் பிடிவாதத்தில் இருந்து சிறிது இறங்கி வந்த ரஷ்யா, உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டு உள்ள வீரர்கள் சிலர் தங்களது முகாமுக்கு திரும்பியதாக அறிவித்தது.
இந்நிலையில், எல்லையில் இருந்து மேலும் படைகள் குறைக்கப்பட்டு உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கிரிமியா தீபகற்ப பகுதியில் நடக்கும் ராணுவ பயிற்சி நிறைவு செய்வதாகவும், அங்கு நிலை நிறுத்தப்பட்டிருந்த படைகள் முகாமிற்கு திரும்பி விட்டதாக தெரிவித்துள்ளது.
மாஸ்கோ: உக்ரைன் எல்லையில் இருந்து, மேலும் சில படைகள் திரும்ப பெறப்பட்டு உள்ளதாக ரஷ்யா தெரிவித்து உள்ளது.உக்ரைன் எல்லையில் தனது படைகளை ரஷ்யா குவித்தது. இதனால், அங்கு போர் பதற்றம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.