பா.ம.க. வேட்பாளரை கடத்தி மிரட்டுவது தான் திமுகவின் ஜனநாயகமா? – கொந்தளிப்பில் மருத்துவர் இராமதாஸ்.!

வேலூர் மாநகராட்சி பா.ம.க. வேட்பாளரை கடத்தி மிரட்டுவது தான் திமுகவின் ஜனநாயகமா? என்று,  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள கண்டன செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது, “வேலூர் மாநகராட்சி 24 வட்டத்தில், தோல்வி பயம் காரணமாக, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஆர்.டி. பரசுராமனை  திமுக மாவட்ட செயலாளர்கள் இருவர் கடத்திச் சென்று போட்டியிலிருந்து விலக வேண்டும்; இல்லையேல் தொழில் செய்ய முடியாது என்று மிரட்டுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது! வேலூர் … Read more

ஆண்மைக்குறைவை ஏற்படுத்துமா உடற்பயிற்சி? காமத்துக்கு மரியாதை – S2 E6

`உடற்பயிற்சி செஞ்சா ஆண்மை குறைஞ்சுடும்; குழந்தை பொறக்காது’ என்கிற அச்சம் இன்றைக்கும் சிலரிடம் இருக்கிறது. அது எந்த அளவுக்கு உண்மை? சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ் விளக்குகிறார். பாலியல் மருத்துவர் காமராஜ் “இந்த அச்சம் ஜிம்முக்கு செல்லும் பலரிடமும் இருக்கிறது. என்னிடமும் நிறைய பேர் இதுபற்றிக் கேட்டிருக்கிறார்கள். `உடற்பயிற்சி செஞ்சா ஆண்மைக் குறைஞ்சுடுமா டாக்டர்’ என்பார்கள் ஆண்கள். பெண்கள், ‘தொடர்ந்து உடற்பயிற்சி செஞ்சா கருத்தரிக்க முடியாதுன்னு சொல்றாங்களே டாக்டர்’ என்பார்கள். உடற்பயிற்சியில் அதிக ஈடுபாடு கொண்ட … Read more

செங்கல்பட்டில் சாலையின் தடுப்புக்கட்டையில் ஏறி கவிழ்ந்த கண்டெய்னர் லாரி.! <!– செங்கல்பட்டில் சாலையின் தடுப்புக்கட்டையில் ஏறி கவிழ்ந்த க… –>

செங்கல்பட்டு அருகே, சாலையில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி மீது மோதிய கார் குட்டிக்கரனம் அடித்து நின்றது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக, சென்னை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியை, பின்னால் ரெனால்ட் டஸ்டர் காரில் வந்த நபர் முந்த முயற்சித்துள்ளார். காருக்கு வழி விடுவதற்காக லாரியை ஓட்டுநர் ஓரங்கட்டியபோது, சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கட்டையில் லாரி ஏறி சாலையில் கவிழ்ந்துள்ளது. இதற்கிடையே, கார் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில், காரை ஓட்டுநர் … Read more

புதுச்சேரியில் தேர்தல் காலத்தில் வாங்கிய கரோனா பரிசோதனை சாதனங்கள் மாயம்: ஆளுநரிடம் புகார்

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வாங்கிய கரோனா பரிசோதனை சாதனங்களில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள டிஜிட்டல் தெர்மா மீட்டர், பிபிஇ கிட், நான்கு சர்க்கர நாற்காலிகள் மாயமாகியுள்ளது. இதுபற்றி விசாரணை நடத்துமாறு ஆளுநரிடம் புகார் தரப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய டிஜிட்டல் தெர்மோ மீட்டர், பிபிஇ கிட், குப்பை தொட்டி மற்றும் நான்கு சக்கர நாற்காலிகள் ஆகியவற்றை ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் அளிப்பதற்காக நலவழித் துறையினர் மூலம் வாங்கி … Read more

விடைபெற்றார் லதா மங்கேஷ்கர் – அரசு மரியாதையுடன் உடல் தகனம் | பிரதமர் மோடி நேரில் அஞ்சலி

மும்பை: பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கரின் உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். மும்பை சிவாஜி பார்க்கில் நடந்த இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியார், முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். திரைப் பிரபலங்கள் ஷாருக்கான், ஜாவேத் அக்தார், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். … Read more

புதிய விதிமுறைகள் சர்ச்சை: இந்திய அரசுக்கு எதிராக வாட்ஸ் அப் வழக்கு

புதிய தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் பயனர்களின் தனியுரிமை மீறல் தொடர்பாக, இந்திய அரசுக்கு எதிராக வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள், 2021-இன் கீழ் இந்திய அரசு புதிய சட்டதிட்டங்களை அறிமுகம் செய்தது. இந்தியாவில் செயல்படும் சமூக வலைதளங்கள் இதற்கு உடன்பட, இன்றுடன் (மே 26) கெடு முடிகிறது. இதனால் தொடர்ந்து இந்தத் தளங்கள் இயங்க அனுமதிக்கப்படுமா என்கிற கேள்வியெழுந்தது. இந்நிலையில் , … Read more

அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் – இறுதிச்சடங்கில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை சிவாஜி பூங்காவில் பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் உடல் 21 குண்டுகள் முழுங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த, பாலிவுட் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் (92). கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். … Read more

இப்போதைக்கு வேண்டாமே… தொடரும் சோதனைகள்: ரஜினி எடுத்துள்ள முடிவு..!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் ‘அண்ணாத்த’. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ‘அண்ணாத்த’ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. இதனை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பிற்காக கோலிவுட் … Read more

கொழும்பில் மாடி வீட்டு தொகுதியில் இருந்து கீழே விழுந்த இளைஞன் உயிரிழப்பு

பொரளை சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பொரளை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   Source link

ஆந்திராவில் மீனவர் வலையில் சிக்கிய அரியவகை கத்தாழை மீன் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை.! <!– ஆந்திராவில் மீனவர் வலையில் சிக்கிய அரியவகை கத்தாழை மீன் 4… –>

ஆந்திர மாநிலத்தில் மீனவர் வலையில் சிக்கிய அரியவகை கத்தாழை மீன் ஒன்று 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையிலான கத்தாழை மீன் சிக்கியது. மருத்துவ குணம் கொண்ட கத்தாழை மீனை ஏலம் எடுக்க வியாபாரிகள் ஆவலுடன் திரண்ட நிலையில் அந்த மீன் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. கத்தாழை மீனின் அடி வயிற்றில் உள்ள நெட்டி என்றழைக்கப்படும் காற்றுப்பை … Read more