புதுடில்லி:’நாட்டில், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில், இம்மாதம் துவங்கி மே மாதம் வரை, கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்’ என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம்:நாட்டில் கோடைக்காலம், மார்ச் மாதம் துவங்கி, ஜூன் மூன்றாவது வாரம் வரை நீடிக்கும். தென் மேற்கு பருவமழை துவங்கிய பின், கோடைக்காலம் முடிவடைவது வழக்கம். இந்நிலையில் இம்மாதம் முதல், மே மாதம் வரை, ஜம்மு – காஷ்மீர், லடாக், ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய பகுதிகளில், வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
பஞ்சாப், ஹரியானாவில் சில பகுதிகள், உத்தர பிரதேசம், பீஹார் ஆகிய மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட சற்று குறைவாக இருக்கும். கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த ஆண்டு பிப்ரவரியில் தான், குறைந்த அளவு மழை பெய்துள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடில்லி:’நாட்டில், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில், இம்மாதம் துவங்கி மே மாதம் வரை, கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்’ என, இந்திய வானிலை ஆய்வு மையம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.