ஹாசன்:ஹொய்சாளர் காலத்தின் அற்புதமான சிற்பங்கள் கொண்ட பேலுாரை மேலும் அபிவிருத்தி செய்ய மாவட்ட நிர்வாகம் திட்டம் வகுத்துள்ளது.
இது தொடர்பாக ஹாசன் மாவட்ட கலெக்டர் கிரிஷ், நேற்று கூறியதாவது:வரலாற்று பிரசித்தி பெற்ற, ஹாசன் பேலுார் கர்நாடகாவின் மிகச்சிறந்த சுற்றுலா தலம். 2022 — 23 உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில் சேர்க்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. விக்ரகங்கள், சிற்பங்கள் நிறைந்துள்ளன.பேலுாரை மேலும் அபிவிருத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதற்காக 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவிலின் சுற்றுப்பகுதிகளில், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வசதிக்காக, கழிப்பறைகள், தங்கும் விடுதிகள், மினி ஹெலிபேட், சாந்தலா பெயரில் நடன ஹால் உட்பட ஹைடெக் வசதிகள் செய்யப்படும்.பேலுார், ஹளேபீடு, ஸ்ரவணபெளகோலா பகுதிகளுக்கு, இணைப்பு ஏற்படுத்தும் தனிச்சாலைகள் அபிவிருத்தி செய்யப்படும். சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஹாசன்:ஹொய்சாளர் காலத்தின் அற்புதமான சிற்பங்கள் கொண்ட பேலுாரை மேலும் அபிவிருத்தி செய்ய மாவட்ட நிர்வாகம் திட்டம் வகுத்துள்ளது.இது தொடர்பாக ஹாசன் மாவட்ட கலெக்டர் கிரிஷ், நேற்று
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.