பெங்களூரு-”மாநிலத்தில் உள்ள 4,000க்கும் மேற்பட்ட அங்கன்வாடிகளை, பள்ளி வளாகத்திலேயே துவக்க அரசு ஆலோசிக்கிறது,” என தொடக்க, உயர்நிலைப்பள்ளி கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்தார்.சட்ட மேலவை கேள்வி நேரத்தில், ம.ஜ.த., உறுப்பினர் ஸ்ரீகண்டேகவுடா கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் நாகேஷ் நேற்று கூறியதாவது:புதிய தேசிய கல்வி கொள்கைப்படி, 3 வயது சிறார்களை பள்ளியில் சேர்த்துக்கொள்வதால், அங்கன்வாடிகளை பள்ளி வளாகத்திலேயே கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இது அவர்களின் கல்விக்கு, உதவியாக இருக்கும்.மாநிலத்தின் அரசு தொடக்கப்பள்ளிகளில், 2016 — 17 லிருந்து ‘குழந்தைகள் வீடு’ என்ற பெயரில், சிறிய குழந்தைகளுக்கான வகுப்புகள் துவங்கப்பட்டன. மாண்டியாவில் முதன் முறையாக, இது போன்ற வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது.கர்நாடக பப்ளிக் பள்ளிகளில், குழந்தைகள் வீடு துவங்கப்பட்டுள்ளது. இங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, கவுரவ நிதி வழங்குவது உட்பட மற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு-”மாநிலத்தில் உள்ள 4,000க்கும் மேற்பட்ட அங்கன்வாடிகளை, பள்ளி வளாகத்திலேயே துவக்க அரசு ஆலோசிக்கிறது,” என தொடக்க, உயர்நிலைப்பள்ளி கல்வித்துறை அமைச்சர் நாகேஷ்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.