மாஸ்கோ: உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் நகரை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்ரவரி 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு, உக்ரைன் ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். தற்போது, நாட்டின் கிழக்கு பகுதிகளில் ரஷ்ய படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தினர். துறைமுக நகரான மரியுபோலை கைப்பற்றும் நோக்கத்தில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மரியுபோல் நகர் உக்ரைனில் இருந்து விடுவிக்கப்பட்டது. அந்நகரில் உள்ள அசவ்ஸ்டோல் இரும்பு தொழிற்சாலையை தவிர நகரின் அனைத்து பகுதிகளும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. விரைவில் அந்த தொழிற்சாலையும் தங்களின் பிடியில் வரும் என தெரிவித்துள்ளது.
மரியுபோல் நகரம், ரஷ்யாவின் பிடியில் வந்த ராணுவ வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் புடின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ: உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் நகரை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்ரவரி 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.