ரியாத் : சவுதி அரேபியாவில் 30 ஆண்டுகளாக சமோசா உள்ளிட்ட சிற்றுண்டிகளை கழிவறையில் தயாரித்த உணவகத்திற்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் பிரபல உணவகம் ஒன்று 30 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தின் கழிவறையில் சமோசா உள்ளிட்ட சிற்றுண்டிகள் தயார் செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் சமீபத்தில் அங்கு ஆய்வு செய்தனர்.
அப்போது உணவகத்தில் உள்ள கழிவறையில் சமோசா போன்ற சிற்றுண்டிகள் மற்றும் உணவு பொருட்கள் தயாரிப்பது உறுதியானது. அத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட இறைச்சி ‘சீஸ்’ போன்றவற்றை தற்போதும் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் உணவகத்தில் சுகாதார வசதிகள் இல்லாததால் உணவுப் பொருட்களில் வண்டுகள் மற்றும் பூச்சிகள் அதிகம் இருந்தன. இதையடுத்து உணவகத்திற்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
இதே நகரில் எலிகள் சுற்றித்திரிந்த ‘ஷவர்மா’ உணவகத்தை ஜன. மாதம் அதிகாரிகள் மூடியது குறிப்பிடத்தக்கது.
ரியாத் : சவுதி அரேபியாவில் 30 ஆண்டுகளாக சமோசா உள்ளிட்ட சிற்றுண்டிகளை கழிவறையில் தயாரித்த உணவகத்திற்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.