புதுக்கோட்டையில் 11 ஆம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு ஆயுள் தண்டனை.!

புதுக்கோட்டையில் 11ஆம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உசிலங்குளம் பகுதியில் வெல்டிங் கடை ஒன்றில் சரண் என்கிற 22 வயது இளைஞன் வேலை செய்து வந்தான்.

கடந்த 2017ஆம் ஆண்டு வெல்டிங் கடை உரிமையாளரின் 11ஆம் வகுப்பு படிக்கும் மகளை சென்னைக்குக் கடத்திச் சென்ற சரண், பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சரணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சத்யா, சிறுமியை கடத்திச் சென்றதற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.