குரங்கு காய்ச்சல் அச்சுறுத்தலில் மேற்கத்திய நாடுகள்

ஜூரிச்

குரங்கு காய்ச்சல் மேற்கத்திய நாடுகளில் வேகமாகப் பரவி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று உலகெங்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது தெரிந்ததே.  தற்போது மேற்கத்திய நாடுகளில் புதிதாக ‘மங்கி பாக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் பரவல் மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்து வருகிறது. உலக சுகாதார அமைப்பு இது குறித்து  ஆலோசனை நடத்தி வருகிறது.

உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் டாரிக் ஜசரேவிக், ” இதுவரை 37 பேருக்குக் குரங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளது. மேலும் 71 பேருக்கு இந்த நோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்டு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.  இந்நிகழ்வு இதுவரை மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

அந்த அமைப்பின் பிராந்திய இயக்குநர் குளூஜ் “சமீபமாக பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவீடன், இங்கிலாந்து ஆகிய 8 நாடுகளில் குரங்கு காய்ச்சல் பரவி உள்ளது. மேலும் ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்காவில் உள்ளூர் தொற்றாகக் குரங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

தவிர் ஆப்பிரிக்க நாடான காங்கோ வில் இந்த ஆண்டில் இதுவரையில் 1,284 பேருக்குக் குரங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது,

“இந்த குரங்கு காய்ச்சலைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையின்றி சில வாரங்களில் நோயிலிருந்து மீண்டு விடலாம் என்றாலும், வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்புச்சக்தி குறைபாடு உடையவர்கள் போன்றோருக்கு இந்த நோய் தாக்குதல் தீவிரமாகலாம், இந்த குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளாகக் காய்ச்சல், கணுக்களில் வீக்கம், கொப்புளங்கள் போன்றவை இருக்கும்” என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.