தென் அமெரிக்க நாடான சிலியில் பனிப் பொழிவில் சிக்கித் தவித்த வாகன ஓட்டிகளை ராணுவ வீரர்கள் மீட்டனர்.
Los Caracoles மலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப் பொழிவில் சிக்கி, 250 கார் உள்ளிட்ட வாகனங்கள் நகர முடியாமல் தவித்தன.
உறை பனியில் தவித்தவர்களை ராணுவ வீரர்கள் மீட்டு முகாம்களில் சேர்த்தனர். சாலைகளில் கொட்டிக் கிடக்கும் பனியை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.