“வங்கதேசத்துக்கு வாருங்கள்!" – புதிய பாலத்தை பார்வையிட மம்தாவுக்கு அழைப்பு விடுத்த வங்கதேச பிரதமர்

வங்காளதேசத்தையும், இந்தியாவையும் இணைக்கும் பத்மா பாலத்தை, வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா ஜூன் 25-ம் தேதி திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து, பத்மா பாலத்தை பார்வையிட வருமாறு அந்த நாட்டின் பிரதமர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் மம்தாவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், “வங்கதேசம் மற்றும் மேற்கு வங்க மக்கள் பகிர்ந்துகொள்ள உணர்வுபூர்வமான தொடர்பை இந்த பாலம் ஏற்படுத்தும். இந்த பாலம் வங்காளதேசம்-மேற்கு வங்கம்… அல்லது முழு இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் என்றும் நம்புகிறேன்.

ஷேக் ஹசீனா – மம்தா பானர்ஜி

இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்துக்கான புதிய வழிகளைத் இந்த பாலம் திறக்கும். உங்களுக்கு வசதியான நேரத்தில் வங்காளதேசத்துக்கு வருமாறு நான் உங்களை அழைக்கிறேன்.

இந்த ஆண்டு செப்டம்பரில் எனது திட்டமிடப்பட்ட டெல்லி பயணத்தின் போது உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். மொழி, கலாசாரம் மற்றும் கருத்தியல் ஒற்றுமைகள் இரு வங்காள நாடுகளையும் பிணைக்கும் சக்திகள். எனவே, இந்த உறவை வலுப்படுத்துவதில் மாற்று கருத்து இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.