புதுச்சேரி: சென்னை மியாட் மருத்துவமனையின் சிறுநீரகவியல், மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்க, வரும் 30ம் தேதி புதுச்சேரிக்கு வருகின்றனர். கடலுாரில் 31ம் தேதி ஆலோசனை வழங்குகின்றனர்.
சென்னை மியாட் மருத்துவமனை சார்பில் சிறுநீரகவியல் துறை டாக்டர் ஆனந்த், மூளை மற்றும் நரம்பியல் நிபுணர் சுப்பிரமணியன் ஆகியோர், வரும் 30ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தருகின்றனர்.அன்று மாலை 5:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை, ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள தி பாஷ் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர். தொடர்ந்து இருவரும், மறுநாள் 31ம் தேதி கடலுார் ஆற்காட் மருத்துவமனையில், காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர்.
சிறுநீரகவியல் துறை டாக்டர் ஆனந்த், சிறுநீரக கல், புரோஸ்டெட் கோளாறுகள், மாற்று அறுவை சிகிச்சை, பெண் நீரகவியல், ஆண்குறி துளை பிறழ்வு, சிறுநீரில் ரத்தம், சிறுநீர் கோலா நிறத்தில் வெளியேறுதல் ஆகிய பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்.மேலும், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி,சிறுநீர் பாதை கோளாறுகள்,சிறுநீரக பகுதியில் வலி, விதைப்பையில் வலி, வீக்கம், அடிக்கடிநீர் கழித்தல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆலோசனை பெறலாம்.
மூளை மற்றும் நரம்பியல் நிபுணர் சுப்ரமணியன், தலைவலி, வலிப்பு நோய், பார்கின்சன்ஸ், பக்கவாதம், முகம், கழுத்து, முதுகு நரம்பு கோளாறு, மூளை கட்டிகள், உடல் உறுப்புகளின் பலவீனம் ஆகிய பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்.மறதிநோய், உடல் நடுக்கம், அசாதாரண இயக்கங்கள், குடும்ப வரலாற்றில் பக்கவாத நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னைகளுக்கும், மறுவாழ்வு சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்களுக்கும் ஆலோசனை வழங்க உள்ளார்.மருத்துவ முகாமில் பங்கேற்க வரும்போது முந்தைய மருத்துவ பதிவுகள் ஏதேனும் இருந்தால் அவசியம் கொண்டு வர வேண்டும். முகாமிற்கு வர முன் பதிவு அவசியம்.
ஆலோசனை கட்டணம் – 300 ரூபாய். முன்பதிவுக்கு 98411-60194, 98412-68500 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement