சென்னை: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகையில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கையிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 30ம் தேதி வரை மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
