பேருந்துகளில் நடத்துனர்கள் செல்போன் பயன்படுத்த தடை – போக்குவரத்து துறை.!

பேருந்துகளில் நடத்துனர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து கழகம் சார்பாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் பேருந்துகளில் நடத்துனர்கள் செல்போன் பயன்படுத்தவும், முன் இருக்கைகளில் அமர்ந்து தூங்குவதற்கும் தடை செய்து போக்குவரத்துக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

நடத்துனர்கள் முன் இருக்கையில் அமர்ந்துகொண்டு செல்போன் பார்ப்பது, உறங்குவதாக பயணிகள் புகார் தெரிவித்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்தில் 2 படிக்கட்டுகளையும் கண்காணிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.