ராஜஸ்தானில் வேகமாக பரவுகிறது பெரியம்மை: 1,200 ஆடு, மாடுகள் பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கடந்த 3 மாதங்களில் 1,200 கால்நடைகள் பெரியம்மை நோயால் இறந்துள்ளன. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதித்துள்ளன. ஜோத்பூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 வாரங்களில் 254 கால்நடைகள் பலியாகி உள்ளன. குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கால்நடைகளில் தொற்று வேகமாக பரவினால், உயிரிழப்பு ஏற்படுகிறது. தொற்று வேகமாக பரவி வருவதால், மாநிலம் முழுவதும் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நோய்க்கு சிகிச்சையோ, தடுப்பூசியோ கிடையாது. ஆனால், மற்ற மருந்துகளை கொண்டு அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.