பிங்க் நிறம் மாறும் தமிழக அரசு பேருந்துகள்.! 

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். 

கடந்த ஓராண்டில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்டோர் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். பெண்கள் இலவசமாக பயணிக்கும் பேருந்துகளின் முன்பக்கம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். 

சில பேருந்துகளில் ஸ்டிக்கர் தூரத்தில் நின்று பார்க்க முடியாத நிலையில் உள்ளது. இன்னும் சில பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் உள்ளது.

மாநகர போக்குவரத்து கழகம், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பெண்கள் இலவசமாக பயணிக்கும்  பேருந்துகளை ‘பிங்க்’ நிறத்தில் மாற்ற முடிவு செய்துள்ளது. 

இதன் மூலம் பெண்கள் குழப்பமின்றி  பேருந்துகளை பார்த்து, பின்னர் அதில் ஏறி பயணம் செல்லலாம். ‘பிங்க்’ நிற பேருந்துகள் சில வழித்தடங்களில் நாளை  தொடங்கப்பட உள்ளது. 

அதன் வரவேற்பை பொறுத்து அனைத்து இடங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.