கேலோ இந்தியா திட்டத்தை தமிழக அரசு சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை – பாஜக அண்ணாமலை புகார்

விளையாட்டுகளை ஊக்குவிக்க மத்திய அரசு செயல்படுத்தி வரும் கேலோ இந்தியா திட்டத்தை தமிழக அரசு சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
விளையாட்டு துறையில் தமிழகத்திற்கு மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில், அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுளார். மாநில அரசின் திட்டப் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு நிதி வழங்கி வருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், மற்ற மாநிலங்கள் இந்த திட்டத்தை சரியாக பயன்படுத்தி மத்திய அரசிடம் நிதி பெற்று தங்களது மாநில விளையாட்டு உட்கட்டமைப்பை  மேம்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இத்திட்டத்தை சரியாக பயன்படுத்திகொள்ள திமுக அரசு தவறிவிட்டதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.