இந்தியா சீனா இடையே நல்ல உறவு இல்லை : வெளியுறவுத்துறை அமைச்சர்

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா சீனா இடையேயான உறவு எப்படி இருக்கிறது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசினார். அப்போது பேசிய அவர், சீனா தொடர்ந்து இந்திய எல்லையில் அமைதியை சீர்குலைத்து வருவதாக தெரிவித்தார். சீனாவின் இந்த நடவடிக்கைகளால் இந்தியா சீனாவிற்கு இடையான உறவு எப்போதும் நல்ல முறையில் இருக்கும் வாய்ப்பு இருக்காது என்றும் தெரிவித்தார்.
image
மேலும் இந்திய – சீன எல்லையில் தற்பாது இந்திய ராணுவம் முகாமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் சீனாவின் யுவான் வாங் 5 என்கிற சீனாவின் உளவு கப்பல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பது இந்தியாவை உளவு பார்க்க தான் என்னும் சந்தேகம் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.