பாகிஸ்தானுக்குள் தவறுதலாக ‘பிரமோஸ்’ ஏவுகணை வீசப்பட்ட விவகாரம்… இந்திய விமானப்படை அதிகாரிகள் 3 பேர் பணிநீக்கம்

பாகிஸ்தானுக்குள் தவறுதலாக பிரமோஸ் ஏவுகணை வீசப்பட்ட விவகாரத்தில் இந்திய விமானப்படை அதிகாரிகள் 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 9ந் தேதி, பராமரிப்புப் பணிகளின்போது தவறுதலாக ராஜஸ்தானில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, பாகிஸ்தான் எல்லைக்குள் 124 கிலோமீட்டர் சீறிப் பாய்ந்து விழுந்தது. ஏவுகணையில் வெடிகுண்டு எதுவும் பொருத்தப்படாததால் பெரும்சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த நிகழ்வு தொடர்பாக நடைபெற்ற உயர்மட்ட விசாரணையில், விமானப்படை அதிகாரிகள் 3 பேர் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றாததால் ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டுள்ளது தெரியவந்தது. அவர்கள் மூவரும் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.