எளாவூர் சோதனை சாவடியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து உள்ளிட்ட தனிப்படை போலீசார் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆந்திர மாநில அரசு பேருந்தை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அதில் 21 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து பேருந்தில் பயணித்த 4 பேரை போலீசார் கவரப்பேட்டை காவல்நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அதில் ஆந்திர மாநிலம் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முரளி, ஜோதி, தினேஷ், பாக்கியகிருஷ்ணா ஆகியோர் என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.