மேட்டூர் அணையின் நீர்வரத்து 1,45,000 கன அடியாகக் குறைப்பு!

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டு, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.

காவிரியின் நீரப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வந்தது. நேற்று இரவு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,85,000 கன அடியாக அதிகரித்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை எட்டியதால், அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி வீதமும் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 1,62,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தற்போது காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக குறைந்து வருகிறது.

இன்று பிற்பகலில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,65,000 கன அடியாகவும் மாலையில் வினாடிக்கு 1,45,000 கன அடியாகவும் குறைந்தது. மேலும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 1,45,000 கன அடியாகக் குறைந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 23,000 கன அடியாகவும், உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 1,22,000 கன அடியாகவும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடியாகவும் குறைந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.