ஓணம் பண்டிகை பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு| Dinamalar

சபரிமலை :திருவோண பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. கேரளாவிலிருக்கும் அய்யப்பன் கோவிலில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி, இன்று மாலை 5:00 மணிக்கு நடை திறப்பார். வேறு பூஜைகள் கிடையாது. இரவு 9:00 மணிக்கு நடை சார்த்தப்படும்.
நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின், வழக்கமான பூஜைகளும் நெய் அபிஷேகமும் நடைபெறும்.

நாளை மறுநாள் திருவோண சிறப்பு பூஜைகள் நடைபெறும். எல்லா நாட்களிலும் உதயாஸ்தமன பூஜையும், படி பூஜையும் உண்டு.நாளை முதல் 10ம் தேதி வரை தினமும் மதியம் பக்தர்களுக்கு ஓணம் விருந்து வழங்கப்படும். 10ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை சார்த்தப்படும். தரிசனத்துக்கு, ‘ஆன்லைன்’ வாயிலான முன்பதிவு நடைபெறுகிறது. நிலக்கல்லில், ‘ஸ்பாட் புக்கிங்’ வசதி செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.