சபரிமலை :திருவோண பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. கேரளாவிலிருக்கும் அய்யப்பன் கோவிலில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி, இன்று மாலை 5:00 மணிக்கு நடை திறப்பார். வேறு பூஜைகள் கிடையாது. இரவு 9:00 மணிக்கு நடை சார்த்தப்படும். நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின், வழக்கமான பூஜைகளும் நெய் அபிஷேகமும் நடைபெறும்.
நாளை மறுநாள் திருவோண சிறப்பு பூஜைகள் நடைபெறும். எல்லா நாட்களிலும் உதயாஸ்தமன பூஜையும், படி பூஜையும் உண்டு.நாளை முதல் 10ம் தேதி வரை தினமும் மதியம் பக்தர்களுக்கு ஓணம் விருந்து வழங்கப்படும். 10ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை சார்த்தப்படும். தரிசனத்துக்கு, ‘ஆன்லைன்’ வாயிலான முன்பதிவு நடைபெறுகிறது. நிலக்கல்லில், ‘ஸ்பாட் புக்கிங்’ வசதி செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை :திருவோண பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. கேரளாவிலிருக்கும் அய்யப்பன் கோவிலில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி, இன்று மாலை 5:00 மணிக்கு நடை திறப்பார். வேறு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்