போதையில் ஆம்புலன்ஸ் ஓட்டிய இந்தியருக்கு சிறை| Dinamalar

சிங்கப்பூர்:மது அருந்தி விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டிய இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
ஆசிய நாடான சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியான மோகனவரூமன் கோபால், 27, தனியார் நிறுவனத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்தார். கடந்த 2020ல் மது அருந்தி விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டிச் சென்ற போது விபத்து ஏற்பட்டது.
போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப் பட்டது. மோகனவரூமனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 3.19 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.