“எனக்கு களைப்பாக உள்ளது, ஒத்துழைப்பு அளித்ததற்கு மிக்க நன்றி..! – இன்றைய யாத்திரை பயணத்தை நிறைவு செய்த ராகுல் காந்தி..!

காஷ்மீர் முதல்கன்னியாகுமரி வரையிலான ஒற்றுமை இந்திய பயணத்தை நேற்று குமரி காந்தி மன்றம் முன்பாக தொடங்கிய ராகுல் காந்தி இன்று மாலை நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து நிறைவு செய்தார்!!

தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை குமரி முதல் காஷ்மீரில் வரையில் சுமார் 3571 கிலோமீட்டர் 150 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்!! நேற்று மாலை தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியை அசைத்து துவக்கி வைத்தார் நேற்று துவங்கிய நடைபயணம்அகத்தீஸ்வரர் விவேகானந்தா கல்லூரியில் 600 மீட்டர் பயணம் செய்தார்.

பின்னர் இன்று காலை அகத்தீஸ்வரம்விவேகானந்தா கல்லூரியில் தொடங்கி,கொட்டாரம்,வழுக்கம்பாறை நான்கு வழிச்சாலை சுசீந்திரம் எஸ் எம் எஸ் எம் மேல்நிலைப் பள்ளியில் மதியம் ஓய்வு பெற்றார் அதன் பின்பு இன்று மாலை 4 மணி அளவில்,நடைபாதை தொடங்கிய ராகுல் காந்தி சுசீந்தரம், ஆசிரமம், இடலாக்குடி, கோட்டார் வழியாக செட்டிகுளம் அடைந்துடெரிக் சந்திப்பில் வந்த ராகுல் காந்தி பொதுமக்களுக்கு உரையாற்றும் போது,

அனைவருக்கும் வணக்கம் அனைவரும் ஒத்துழைப்பு அளித்ததற்கு மிக்க நன்றி எனக்கு களைப்பாக உள்ளது என கையசைத்து சென்றார்.

இறுதியில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திநிறைவு செய்தார். இன்று இரவு ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் ஓய்வு எடுக்கிறார் நாளை காலை 6 மணி அளவில் தனது நடை பயணத்தை துவங்க உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.