சிகரெட் லைட்டர்களின் இறக்குமதிக்கு தடை..? – மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்..!

சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் சிகரெட் லைட்டர்களின் இறக்குமதியை தடை செய்யகோரி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். தமிழக முதல்வர் ஸ்டாலின்தென் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும்இன்று கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிலாளர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் அவர்களிடம் கலந்துரையாடி, தொழிலாளர்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர், மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
அதில், சீனா போன்ற நாடுகளில் இருந்து சட்டப்பூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களின்விளைவாக, தொழில்துறை தனது உள்நாட்டு சந்தையையும் வேகமாக இழந்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தீப்பெட்டி தொழில் மிகவும் கடினமான கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது என சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தீப்பெட்டி தொழில் ஏற்றுமதி மூலம் சுமார் ரூ.400 கோடி அந்நியச் செலாவணி வருவாய் ஈட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒருமுறை மட்டும்பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களால் உள்நாட்டு தொழில்துறை பாதிக்கப்படுவதோடு, சுற்றுசூழலுக்கும் கேடு விளைவிக்கிறது. இதனால் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிகரெட் ஒளியர்களின் இறக்குமதியை உடனடியாகத் தடைசெய்வதோடு, சட்டவிரோத இறக்குமதிகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.