மகாராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு

ஸ்காட்லாந்தில் காலமான இங்கிலாந்து மகாராணி எலிசபெத் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் மகாராணி 2-ம் எலிசபெத்தின் உடல் நேற்று முன்தினம் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தலமான செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டிக்கு மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் எலிசபெத்தின் உடல் விமானம் மூலம் இலங்கிலாந்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்இ ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் மகாராணி 2-ம் எலிசபெத்தின் உடல் நேற்று இரவு இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும்இ ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் 2ஆம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ‘பவ்’ அறையில் அரண்மனை அதிகாரிகளும்இ பணியாளர்களும் ராணிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இன்று பிற்பகலில் ராணியின் உடல்இ பொதுமக்கள் அஞ்சலிக்காக பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு இராணுவ மரியாதை அளிக்கப்பட்டுஇ பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ஒரு மேடையில் ராணி உடல் அடங்கிய சவப்பெட்டி வைக்கப்படும். சவப்பெட்டியின் மீது கிரீடம் மற்றும் செங்கோல் ஆகியவை வைக்கப்படுகின்றன.

இன்று மாலை 5 மணி முதல்இ இறுதிச்சடங்கு நடைபெறுகிற 19 ஆம் திகதி காலை 6.30 மணி வரை 24 மணி நேரமும் ராணியின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.