விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு..! – பத்திரமாக மீட்கப்பட்ட பயணிகள் ..!

மஸ்கட்டிலிருந்து கொச்சி புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென்று என்ஜினிலிருந்து புகை வெளியேறியது. இதனால்அவசர கால வழியின் மூலம் பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் . விபத்திற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மஸ்கட்டிலிருந்து கொச்சி புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென்று தீ பிடித்தது. அதில் இருந்த சுமார் 145 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள கட்டிடத்திற்கு கொண்டு செல்ல பட்டனர்.

சில தினங்களுக்கு முன்பாக கொல்கத்தாவிலிருந்து துபாய் சென்ற விமானம் தீ வாடை ஏற்பட்ட காரணத்தால் மஸ்கட்டிற்கு திருப்பி விடப்பட்டது. இதில் பெரிய அளவில் சேதாரம் ஒன்றும் ஏற்படவில்லை. இருந்தபோதிலும் இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே போல் டெல்லி முதல் வடோடரா சென்ற இண்டிகோ விமானம் ஒன்றும் இதே போல் இன்ஞ்சினில் ஏற்பட்ட கோளாரின் காரணமாக தரை இறக்கப்பட்டது. இதே போல் ஹைதராபாத் சென்ற விமானமும் தொழில்நுட்ப கோளாரின் காரணமாக முன் எச்சரிக்கையாக தரை இறக்கப்பட்டது.

இது குறித்து விமான போகுவரத்து அமைச்சகம் சார்பிலும் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு அதில் விமான போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி படுத்திட ஆலோசிக்கப்பட்டது. அடிக்கடி ஏற்படும் இது போன்ற விமான பழுதுகளால் விமான பயணிகள் தொடர் அச்சத்தில் உள்ளனர்.

மக்கள் தங்கள் அவசர கால பயண ஊர்தியாகவும் நெடுந்தூரம் பயணிக்கவும் அதிகம் பயன் படுத்துவது விமானமாகும். இதில் அவ்வபொழுது இது போல் ஏற்படுகின்ற கோளாறுகளால் விமான பயணிகள் தங்கள் பயணத்தில் சற்று தயக்கம் காட்டி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.