பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய இடங்களில் என்ஐஏ கடந்த 22 ஆம் தேதி மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஒரே நாளில் மொத்தம் 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த கருத்துகளுக்கு, கோவையில் அண்மையில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பதிலடி கொடுத்திருந்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
‘தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பற்றி தெரியுமா, தெரியாதா எனத் தெரியவில்லை. ஆனால் நான், என் வாழ்நாளில் ஐபிஸ் அதிகாரியாக இருந்த 11 ஆண்டுகள், அதாவது 5,000 நாட்களில் மொத்தம் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறேன்’ என்று அண்ணாமலை பெருமையுடன் பேசியிருந்தார்.
அவ்வளவுதான்…என்னது… 11 வருஷத்துல 2 லட்சம் கேஸா என்று அவரை பங்கமாய் கலாய்க்க தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள்.
‘போலீஸ் ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டர், SI ரேங்கில் உள்ளவர்கள் தான் FIR எழுது வேண்டும்! விசாரணை அதிகாரிகளும் இவர்கள் தான்! IPS அதிகாரிகள் அனைவரும் கண்காணிப்புதான் செய்யவேண்டும்! அண்ணாமலை தன்னோட பணிக்காலத்தில் ஒரு வழக்கு கூட பதிவு செய்திருக்க வாய்ப்பில்லை!!’
‘2013 தான் போஸ்டிங்! 2019 ராஜினாமா! 2013ல இருந்து 2019 வரை 6 வருடங்கள் தான் total experience இதுல எங்க 11 வருடம்?’
’11 ஆண்டுக்கு 4015 நாள் ஒரு நாளுக்கு 50×4015 = 200750 சராசரியாக ஒரு நாளில் 50 வழக்குகள் பதிவு’
‘அவரு 20,000 புக் படிச்ச மாதிரி இதையும் ஒரு flowவுல சொல்லி இருப்பார்’ என்ற ரீதியில் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அண்ணாமலையை பங்கமாய் கலாய்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.