4 இந்திய வம்சாவளியினர்அமெரிக்காவில் கடத்தல்| Dinamalar

கலிபோர்னியா, அமெரிக்காவில், 8 மாத பெண் குழந்தை உட்பட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் கடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங், 36. இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், 27, மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் அமன்தீப் சிங், 39, ஆகியோருடன் வசித்து வருகிறார். கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இவர்கள் நால்வரும், நேற்று முன்தினம் கடத்தப்பட்டனர். இவர்களை கடத்தியது யார்? எதற்காக கடத்தப்பட்டனர் என்ற விபரம் தெரியவில்லை. ஆனால், கடத்திய நபர் பயங்கர ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும், அவரை கண்டால் மக்கள் நெருங்கி செல்லாமல், போலீசாரை தொடர்பு கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், இதற்கு மேல் அதிக தகவல்களை போலீசார் வெளியிடவில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.