336 மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது| Dinamalar

மயிலாடுதுறை: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக மது பாட்டில்கள் மற்றும் கள்ள சாராயம் கடத்திவரப்பட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

வாகன சோதனை:

இந்நிலையில் மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் காரைக்கால்- சீர்காழி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கைது:

அப்போது அதிவேகமாக வந்த டாட்டா இண்டிகோ காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் 7 அட்டை பெட்டிகளில் 336 மது பாட்டில்கள் மற்றும் 550 லிட்டர் மதுப்பானங்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், மது பாட்டில்கள் மற்றும் மதுப்பானங்கள் பறிமுதல் செய்து, கார் டிரைவர் வீரமணியை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.