இலங்கை சிறையில் கொதிக்கும் குழம்பில் தவறி விழுந்து கைதி உயிரிழப்பு

கொழும்பு,

இலங்கையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள அங்குணகொளபெலசவில் சிறைச்சாலை அமைந்திருக்கிறது.இங்கு, ஒரு கொலை வழக்கில் கடந்த 2001-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதி இருந்தார்.அவருக்கான தூக்கு தண்டனை 25 ஆண்டு சிறைத்தண்டனையாக மாற்றப்பட்ட நிலையில் வருகிற 2028-ம் ஆண்டு விடுதலை செய்யப்படவிருந்தார்.

இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு, சிறையின் சமையலறையில் அவர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.அப்போது ஒரு பாத்திரத்தை எடுக்க முயன்ற அவர், கால் தடுமாறி, கோழிக்குழம்பு கொதித்துக் கொண்டிருந்த ஒரு பெரிய பாத்திரத்தில் விழுந்தார். அதில் உடல் முழுவதும் வெந்துபோன அந்த கைதி, ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு உயிருக்குப் போராடிவந்த அவர், 10 நாட்களுக்குப் பின் உயிரிழந்தார் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.