இளவரசர் ஹாரி , மேகன் மெர்க்கல் மீண்டும் அரண்மணைக்கு திரும்புவார்களா?: ராணி கமீலா அழைப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லண்டன்: அரண்மணையை விட்டு வெளியேறிய இளவரசர் ஹாரி, மேகன் மெர்க்கல் தம்பதியினர் மீண்டும் அரண்மணைக்கு திரும்ப வர வேண்டும் என ராணி கன்சார்ட் கமீலா வலியுறுத்தியுள்ளார்.
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து இரண்டாம் எலிசபெத் மகனான சார்லஸ் , பிரிட்டன் மன்னராக பொறுப்பேற்றார். முன்னதாக பிரிட்டன் அரச குடும்பத்தில், 2020ம் ஆண்டு, குழப்பமாக துவங்கியது.

latest tamil news
latest tamil news

மன்னர் சார்லஸ் – டயானா தம்பதியின் இளைய மகன் இளவரசர் ஹாரி, தனது மனைவியும், நடிகையுமான இளவரசி மேகன் மெர்க்கல் ஆகியோர், அரச குடும்பத்தை விட்டு விலகி தனியாக வாழ்ந்து வருகின்றனர். சொந்தமாக வேலை செய்து சம்பாதிக்க ஹாரி விரும்புவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் மன்னர் சார்லஸ் மனைவி கன்சார்ட் கமீலா தெரிவித்துள்ளதாவது, ஹாரி மற்றும் மேகன் ஆகியோர் மீண்டும் அரண்மணைக்கு திரும்ப வேண்டும். முன்பை போல் எங்களுடன் சேர்ந்து வசிக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.