இன்ஃபோசிஸ் தலைவர் ரவிக்குமார் திடீர் ராஜினாமா

புதுடெல்லி:
ன்ஃபோசிஸ் தலைவர் ரவிக்குமார் திடீர் ராஜினாமா செய்துள்ளார்.

ரவிக்குமார் ராஜினாமா குறித்து, பங்குச்சந்தைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சர்வதேச அளவில் உள்ள அனைத்து சேவைகள், டிஜிட்டல் மாற்றம்,தொழில் வளர்ச்சி, பாரம்பரிய தொழில்நுட்பம், பொறியியல், தரவு மற்றும் பகுப்பாய்வு, கிளவுட் மற்றும் இன்ஃப்ரா சேவைகளை ஆகியவற்றை கவனித்து கொண்டார்.

இன்ஃபோசிஸ் தலைவராக இருந்த ரவிக்குமார் ராஜினாமா செய்தது நிறுவனத்துக்கு பெரும் இழப்பு என அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் வசிக்கும் ரவி குமார், இன்ஃபோசிஸில் கிட்டத்தட்ட 20 வருடங்கள் பணியாற்றியவர். அவர் 2016 ல் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இன்ஃபோசிஸ் நிர்வாகக் குழுவில் முக்கிய பொறுப்பு வகித்தார்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு முடிவு வருகிற 13ம் தேதி வெளியிடப்படுகிறது. அன்றைய தினமே பங்குதாரர்களிடமிருந்து பங்குகளை திரும்ப வாங்கவும் முடிவு செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.