குடிபோதையில் வழிவிட மறுத்ததால் கூலித்தொழிலாளியை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த இளைஞர்..

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, தலையில் கல்லைப்போட்டு கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோபாலபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முருகேசன், கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.

சந்தேகத்தின்பேரில் மல்லியகரையைச் சேர்ந்த பால் விற்பனையாளர் பூவரசனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இரவு, குடிபோதையில் வழிவிட மறுத்து முருகேசன் தகராறு செய்ததால், மிகப்பெரிய கல்லை எடுத்து, அவரது தலையில் போட்டதாக, பூவரசன் அப்போது வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து பூவரசன் கைது செய்யப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.