கோயில் அருகில் மதுபான கடை… வெங்கட்பிரபு படத்தின் செட்டை சூறையாடிய கிராம மக்கள்…

வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் படம் NC22.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகிவரும் நாகசைதன்யா-வின் 22 வது படமான இதற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைக்க இருக்கும் இந்தப் படம் வெங்கட்பிரபு-வுக்கு 11 வது படம்.

செப்டம்பர் இறுதியில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் உள்ள மேலகோட் என்ற இடத்தில் மதுபான கடை போல் மிகப்பெரிய செட் அமைத்து ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

ராயகோபுர கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள மதுபான கடை செட்டுக்கு அந்த பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காவல்துறையினரிடம் 2 நாட்கள் ஷூட்டிங் நடத்த அனுமதி பெற்றுள்ள படக்குழு என்ன மாதிரியான காட்சிகள் எடுக்கப்படும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை என்றும் 2 நாட்களை கடந்து ஷூட்டிங் நடத்தி வருவதாக கூறி தகராறில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் அந்த செட்டை சூறையாடியதாக கூறப்படுகிறது சம்பவத்தின் போது நாகசைதன்யா அந்த செட்டில் இருந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதுதொடர்பாக படக்குழு எந்தவிதமான தகவலும் வெளியிடாத நிலையில், ஊடங்கங்களில் இந்த செய்தி வெளியாகி இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.