பிரித்தானியாவின் மிகவும் தேடப்படும் கிரிமினலை விடுவித்த வெளிநாட்டு பொலிஸ்! கைது செய்ய துடிக்கும் அதிகாரிகள்


மூன்று மாதங்களுக்கு முன்பு பிரித்தானியாவின் தேசிய குற்றவியல் முகமையால் Alex Male ‘மோஸ்ட் வாண்டட்’ குற்றவாளியாக பட்டியலிடப்பட்டார்.

அலெக்ஸ் கொக்கைன் உள்ளிட்ட போதைமருந்துகளை விற்றதுடன், அவர் பணமோசடியிலும் ஈடுபட்டார்.

பிரித்தானியாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரான அலெக்ஸ் மாலே, போர்ச்சுகலில் உள்ள உச்ச நீதிமன்றத்தால் சமீபத்தில் பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அலெக்ஸ் இங்கிலாந்தின் தென்மேற்கில் உயர் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி A வகுப்பு போதை மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளார்.

30 வயதான அவர் மே 2022-ல் துருக்கியில் இருந்து விமானத்தில் இருந்து வந்த பின்னர் போர்ச்சுகல் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

பிரித்தானியாவின் மிகவும் தேடப்படும் கிரிமினலை விடுவித்த வெளிநாட்டு பொலிஸ்! கைது செய்ய துடிக்கும் அதிகாரிகள் | Uk Most Wanted Criminal Alex Male ReleasedNCA

அலெக்ஸ் கொக்கைன் மற்றும் கெட்டமைன் விநியோகித்த குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார், மேலும் பணமோசடியிலும் ஈடுபட்டார்.

மூன்று மாதங்களுக்கு முன்பு பிரித்தானியாவின் தேசிய குற்றவியல் முகமையால் (NCA) அவர் ‘மோஸ்ட் வாண்டட்’ குற்றவாளியாக பட்டியலிடப்பட்டார்.

2020-ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில், அவரது காவலுக்கான காலக்கெடு முடிவடைந்ததால், சமீபத்தில் போர்ச்சுகல் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டார்.

ஊடக அறிக்கைகளின்படி, அலெக்ஸ் 2020-ஆம் ஆண்டு முதல் ஸ்பெயினின் மார்பெல்லாவில் இருந்ததாக நம்பப்படுகிறது. மேலும் அவர் ஸ்பெயினில் இருந்து தப்பித்துவிட்டதாகவும் பல தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அலெக்ஸ் மாலேவை கைது செய்ய பிரித்தானியா போர்ச்சுகலில் உள்ள அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.