ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு| Dinamalar

புதுடில்லி: முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதித்துள்ள தடை தொடர்பான வழக்கில், விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிராகத் துவங்கிய போராட்டம் மாநிலம் முழுவதும் பரவியதால், ஹிஜாபுக்கு அந்த மாநில அரசு கடந்த பிப்., 5ம் தேதிதடை விதத்து உத்தரவிட்டது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு விசாரித்து கடந்த மார்ச் 15ம் தேதி தீர்ப்பு வழங்கியது.


‛ஹிஜாப் அணிவது முஸ்லிம் சட்டத்தில் அத்தியாவசியமானது அல்ல. பள்ளி சீருடை விதிகள் மீறுவது சரியல்ல. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும்’ என உத்தரவிட்டது. மேலும், ஹிஜாப் தடையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 24 மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர் அடங்கிய அமர்வு முன்பாக செப்.22-ல் விசாரணை நடந்தது. தேதி குறிப்பிடமால் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வெளியிடுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.