22% ஈரப்பத நெல் கொள்முதல் செய்ய அனுமதி கோரியுள்ளோம்: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: 22% ஈரப்பத நெல் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அனுமதி பெற தமிழக அரசின் உயர் அதிகாரிகள் குழு டெல்லி செல்ல உள்ளது. பொதுமக்கள் தரமான அரிசியை விரும்புகிறார்கள். விவசாயிகள் ஈரப்பதமான நெல்லை வாங்க வலியுறுத்துகிறார்கள். நிதி நெருக்கடியில் இருந்தாலும் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.