தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில்,உயிரிழந்த மேலாளரின் கையெழுத்தை போட்டு கையாடல் செய்த கணக்காளர் கைது..

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில், உயிரிழந்த மேலாளரின் கையெழுத்தை போட்டு, ஒரு கோடியே 63 லட்சம் ரூபாய் கையாடல் செய்த கணக்காளர் கைது செய்யப்பட்டார்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அலுவலகத்தில்  கணக்காளராக பணிபுரிந்த ஹரிஹரன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் வரவு செலவு மற்றும் வங்கி பணபரிவர்த்தணைகளை கவனித்து வந்தார்.

தன்னுடன் பணிபுரிந்து உயிரிழந்த மேலாளர் சைமன் சாக்கோ என்பவரின் கையெழுத்தை போலியாக போட்டு, பணத்தை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றி கையாடல் செய்த புகாரின் பேரில்  ஹரிஹரனை மத்திய குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.