தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சில இடங்களில் வெள்ளம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன இடைமாற்ற வழி பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இலகுரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறும் வாகன சாரதிகள் குருந்துகஹஹெடெக்ம மற்றும் தொடங்கொட இடைமாற்ற வழிகளை பயன்படுத்துமாறு அறவிக்கப்பட்டுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.