பாலியல் குற்றச்சாட்டில் கைதாகி உள்ள கர்நாடக மடாதிபதிமீது மேலும் 4 சிறுமிகள் புகார்!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள மடாபதி மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவர்மீது மேலும் 4 சிறுமிகள் பாலியல் புகார் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக இருந்து வந்தவர் சிவமூர்த்தி முருகா சரணரு. இவர் மடத்தில் உள்ள பள்ளியில் பயிலும் 2 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரில் போக்சோ சட்டத்தில் கடந்த செப்டம்பர்1-ந்தேதி  கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இவர் தனது மடத்தின்மூலம் நிர்வகிகப்படும் பள்ளி சிறுமிகளிடம் பாலியல் சேட்டை செய்து வந்துள்ளது தெரிய வந்தது. இந்த நிலையில் மடாதிபதி  சிவமூர்த்தி முருக ஸ்ரீ மீது மேலும் 4 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை புகார் கூறியுள்ளனர்.  கடந்த 2019ம் ஆண்டு முதல் தங்களிடம் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளதாக புகாரில் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக   மடாதிபதி முருக ஸ்ரீ உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்,  எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மடாபதி, கர்நாடாகாவில் அதிகமாக உள்ள லிங்காயத் பிரிவை சேர்ந்தவர். இவரிடம் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு நெருக்கமானவர். லிங்காயத் மக்களின் வாக்குகளை நிர்மாணிக்ககூடிய சக்தி பெற்றவர். இவரிடம்  மத்திய அமைச்சர் அமித்ஷா, ராகுல்காந்தி உள்பட பலர் சந்தித்து தீட்சை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.