புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் முதல் மாதத்தில் 2வது, 4வது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வுருகிறது. 3ம் சனிக்கிழமைகளில் வங்கிகள் அரைநாள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கும்படி வங்கி ஊழியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன்.
இந்நிலையில், வங்கி ஊழியர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கும் கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்றுள்ளதாக தெரிகிறது. இதற்கு பதிலாக, வார நாட்களில் வேலை நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், வங்கிகளுக்கு எல்லா சனியும் விடுமுறை என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.