தமாஷா இருக்கு.. இந்தி திணிப்பு ஆர்ப்பாட்டத்தை கலாய்த்த எச். ராஜா

இந்தி திணிப்பு, நாடு முழுவதும் ஒரே பொது நூல் தேர்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பாக தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று பல மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக இளைஞரணி செயலாளர்

இந்திக்கு எதிராக காரசாரமாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது, இந்தி தெரியாது என உங்களிடம் சொல்லி கொண்டேதான் இருப்போம். எந்த வழியில் இந்தி திணிப்பை தமிழ்நாட்டுக்குள் கொண்டு வந்தாலும் நாங்கள் சொல்லப்போவது இந்தி தெரியாது போடா தான்.

மீண்டும் இந்தியை திணிக்க முயன்றால் டெல்லியில் போராட்டம் நடத்துவோம். 2010 பாராளுமன்ற தேர்தலில் எப்படி உங்களை விரட்டினோமோ, 2024 தேர்தலிலும் விரட்டுவோம். ஒன்றியம் என்று சொன்னால் தான் கோபம் வரும். அதனால் ஒன்றிய அரசு என்று தான் சொல்லுவோம். முன்பு போல் இங்கு ஆட்சியில் இருப்பது எடப்பாடி பழனிசாமி அல்ல. இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி என்று உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசினார்.

மேலும், ட்விட்டரில் #StopHindiImposition என்ற ஹேஷ்டேகும் ட்ரெண்ட் செய்யப்பட்டுள்ளது. இணையதளம் முழுக்க 1965 ஆம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்தி மொழி படித்தால் மட்டுமே வேலை என்கிற நிலையை உருவாக்கி, இந்தி கற்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்த பாஜக அரசு முற்படுகிறது என்று குற்றம் சாட்டி இந்திக்கு எதிரான வாசகங்கள் பகிரப்பட்டு வருகின்றன. அதற்கு பாஜகவினர் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக நடத்தி வரும் இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை விமர்சித்து பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா ட்வீட் போட்டுள்ளார். அந்த ட்வீட்டில் ”நான் 1964-65 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பார்த்தவன். ஆனால் இன்று திமுக நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம் மக்கள் ஆதரவோ பங்களிப்போ இல்லாத வெறும் Road side தமாஷாவாக உள்ளதை பார்க்க முடிகிறது” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.